கட்டைவிரல் மெட்டி..

திருமணம் ஆகாதப்பெண்களும் அணியக்கூடியது தான் கட்டைவிரல் மெட்டி. எத்தனைப்பேர் இதனை  பார்த்திருக்கிறார்கள் / பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சிறு வயதில் பல வருடங்கள் வீட்டில் இருக்கும் போது மட்டும் அணிந்து இருக்கிறேன். ஆண்டு விடுமுறைகளில் முழுநாளும், விஷேஷ நாட்கள், திருமணங்கள் என இந்த மெட்டியை அணிந்துக்கொள்ள பல காரணங்கள் இருந்தன.
(படத்தை பெரிதாக்கி பார்க்கவும் )

ஆயா,  இரண்டு டிசைனில் என் கால் கட்டைவிரல் அளவிற்கு மெட்டி செய்து வைத்திருந்தார்கள். படத்தில் உள்ளது போலவே இருக்கும். தீ விபத்தில் அழிந்துவிட்டதால், வரைந்திருக்கிறேன். மேல் புறம் நடுவில் 5-6 முத்துக்கள் கொண்ட சலங்கை ஒன்று இருக்கும். கீழ்பகுதி தட்டையாக செப்பு தகட்டில் செய்து இருப்பார்கள்.  நடக்கும் போது தேய்மானம் இருக்கும் என்று சொல்லப்பட்டது. மற்ற பகுதியெல்லாம் வெள்ளியால் செய்யப்பட்டு இருக்கும். நாம் சாதாரணமாக அணியும் மெட்டியைப்போல இல்லாது, பெரியதாக கட்டைவிரல் உள்ளே போகக்கூடியதாக இருக்கும். திருமணத்தன்றும், மெட்டிவிரலில் மெட்டி வருவதற்கு முன் அதற்கு முன் விரலில் இந்த மெட்டியை அணிந்திருந்தேன். :).

இதனை எங்கள் வீட்டைத்தவிர வேறு எங்கும் பார்த்தது இல்லை. என் காலில் இருப்பதை பார்த்து அத்தை மகள் கேட்பாள், அவளுக்கு டிசைன் கம்மியாக இருப்பதை மட்டும் கொடுக்க சம்மதித்து இருக்கிறேன். வீட்டிற்கு போவதற்கு முன், கவனமாக  அதை திருப்பி வாங்காமல் அனுப்ப மாட்டேன். சில சமயம் அதற்காக அழுதும் கூட இருக்கிறாள். அவளுக்கு மேல் அடம் பிடிப்பதில் நான் 'மன்னி' என்பதால், என்னிடம் வம்பு வேண்டாம் என்று, அவளை சமாதானம் செய்து, ஆயா, மெட்டியை வாங்கிவிட்டுத்தான் அனுப்புவார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த அல்லது என்னை கவர்ந்த வேறு சில நகைகள் நத்து'ம், புல்லாக்கு'ம். எப்போதுமே நகைகள் அணிந்துக்கொள்வதில் விருப்பம் இருந்ததில்லை. எனக்கு ஆர்வம் இல்லையென்றாலும் ஆயா அத்தனை சுலபமாக என்னை விட்டுவிடவில்லை. எனக்கு பிடிக்கிறதோ இல்லை, எந்நேரமும் ஏதோ ஒரு அலங்காரம் செய்துக்கொண்டே இருப்பார்கள். அதில் ரொம்பவே எங்க வீட்டில் கஷ்டப்படறவங்க "ஆண்டாள்" தான்.. :).  எத்தனை முறை இந்த ஆண்டாள் வேஷம் போட்டாகிவிட்டது. வீட்டில் ரெடிமேடாக ஆண்டாள் அலங்காரத்திற்கான 'பின் தலை கொண்டையும், சைட் கொண்டையும் ' இருக்கும். ஒரு பச்சக்கிளி பொம்மை வேறு!  என் திருமணத்திற்கு, முதல் நலங்கின் போதும் ஆண்டாளாக நிற்கவைத்தார்கள். பல்வேறு வயதுகளில் ஆண்டாள் வேஷம் போட்டு இருந்தாலும், திருமணத்திற்கு முன் போட்ட வேஷத்தில் ஆண்டாள் அழகாகவே இருந்தாள்.

திருமணம் வரும் வரையில், நத்து, புல்லாக்கின் மேல் எனக்கு ஆசை இருக்குமென ஆயாவிற்கே தெரியவில்லை. திருமணத்தன்று, மணப்பெண் அலங்கார நகைகளை நானே தேர்தெடுத்தேன். எதையும் இது வேண்டுமென கேட்காத நான், இந்த நகைகள் தான் வேண்டும். வேறு அணியமாட்டேன் என்று சொன்னது, ஆயாவிற்கு வியப்பளித்தது. ஆயா சொல்லிய எதையும் அணிந்துக் கொள்ளவில்லை.

சிகப்புக்கலர் கல் நகைகள் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன். எல்லாமே வெள்ளைக்கல் வைத்த நகைகள்.

நத்து, புல்லாக்கு  ஏன் எனக்கு பிடிக்கும் என்ற காரணம் தெரியவில்லை. எங்க வீட்டு பெண் குழந்தைகளில் நான் மட்டுமே நத்து, புல்லாக்கு வேண்டுமென கேட்டு வாங்கி ப்போட்டுக்கொண்டு மற்றவர்களை எரிச்சல் படுத்தினேன். . புல்லாக்கு சரியாக மேல் உதட்டில் மேல் வந்து விழும். பேசவும், சாப்பிடவும் நிச்சயம் கஷ்டமாக இருக்கும். குறிப்பாக திருமணத்தன்று பால் பழம் கொடுக்கும் போது, யாராவது ஒருவர். புல்லாக்கை மேல் தூக்கி பிடித்து, குடிக்க வைத்தார்கள். நகைகளை அவிழ்க்கக்கூடாது என்பதால், அது சற்று சங்கடமாகவே இருந்தது.  ஆனால் அதை அணியும் போது தனி அழகு பெண்ணின் முகத்திற்கு வருகிறதென்பதை மறுக்கமுடியாது.

இரண்டுமே திருகு அல்லாது பிரஸ்ஸிங் டைப் நகைகள். மூக்கிலிருந்து நழுவி விடாமல் இருக்க மிகவும் அழுத்திவிடுவார்கள், நிச்சயம் வலி இருக்கும். அவற்றையெல்லாம் தாண்டி அணிந்துக்கொள்ள நினைப்பது, அந்த ஒரு நாள் தவிர்த்து, அந்த நகைகள் அணிய சந்தர்ப்பம் கிடைக்காது என்பதே. !.  அதற்கு பிறகு , நத்து, புல்லாக்கு எப்பவுமே அணியவில்லை.  கட்டைவிரல் மெட்டியும் கூட....

அணில் குட்டி : இப்ப நத்து, புல்லாக்கு, வங்கி, ஒட்டியானம்னு போட்டு ப்பார்த்தேன்... ஹய்யோ... ஹய்யோஓஓஓஒ..... :))))))))))...

பீட்டர் தாத்ஸ் : One men's memory is like a box where a man should mingle his jewels with his old shoes.
பொன்ஸ் : உங்களுக்காக !! :)


  

படங்கள் : நன்றி கூகுல்.

கன்னா பின்னா'ன்னு ஒரு கதம்பம்

* ஒரு டி-ஷர்ட் எடுத்துத்தர வரீங்களாவென, பஸ் நிறுத்தம் போற வழியில் இருக்கும் நடைப்பாதை கடைக்கு அழைத்தான் அலுவலக ட்ரைவர். நானும், இன்னொரு நண்பருமாக மூவர் சென்றோம், எடுத்துப்பார்த்துக்கொண்டு இருக்கும் போது, நான் அவனைப்பார்க்க, ரூ.100/- க்குள் வேணும் என்றான். தேர்ந்தெடுத்துவிட்டு, கடைக்காரரிடம் விலையை கேட்க 120 என்றார். நான் ரூ.60/- க்கு கொடுங்கன்னு கேட்டது தான், நிமிர்ந்து பார்த்து முறைத்தார். "மேடம் இந்த காலத்தில்(எந்த காலம்? நாங்க என்ன அக்பர் காலத்தில் வாழ்ந்துட்டு இப்ப ஆவியாவா அலையறோம்)  60 ரூபாய் க்கு எல்லாம் டிஷர்ட் விக்கறது இல்லை" என்றார்.  "அப்படியே எல்லாத்தையும் போட்டுட்டு என் கூட வாங்க , 60ரூ என்ன 40ரூ க்கு டிஷர்ட் நான் வாங்கித்தரேன்னு கூப்பிட்டேன். (இப்படி எல்லாம் பேசாட்டி, நாயி நம்மை கவ்விடும் நு பெரியவங்க சொல்லி இருக்காங்க.) கடைசியில் பேரம் முடிந்தது ரூ.80 க்கு.

* ஒரு எமகாதகன், நான் பயணம் செய்யும் போது, கைப்பேசியில் பேசறவரை பேசிவிட்டு,"யாரோ பஸ் ல ஃபோன் ல பேசறவங்கள பத்தி, அவங்க ப்ளாக் ல எழுதி இருந்தாங்க, படிச்ச ஞாபகம்”  ஃபோனை வச்சிட்டான்.  :(  (ஏன் ஏன் ஏன்.. இனிமே பஸ்ல இருக்கும் போது எமகாதகன் மட்டுமில்ல எவன்/எவள் ஃபோன் வந்தாலும் பேசுவியா? பேசுவியா? பேசுவியா? -  )
   
* வாலி திரைப்படத்திற்கு பிறகு அஜித் மேல் கவனத்தை திருப்பியப்படம் மங்காத்தா எனலாம். த்ரிஷா +அஜித் டூயட் பாடல் படமாக்கப்பட்டவிதம் கவர்ந்தது. ஒரே ஒரு காட்சியில் சில மணித்துளிகள், தொப்பையை இழுத்துப்பிடுத்து அஜித் சட்டையில்லாமல் வருகிறார். விசில் பறக்கிறது. எல்லாரும் சூர்யா ஆகிவிடமுடியுமா?. ”மச்சி ஓபன் தி பாட்டில்” பாடலில் என்னா டான்ஸ்?!! குறிப்பாக அஜித் ஆடும் நடனும் க்ளாஸ் ! தியேட்டரில் லைனாக நின்று அதே மாதிரி ஆடினார்கள். கலக்கல்ஸ்! வீட்டுக்காரரோட சினிமாக்கு போகக்கூடாதுன்னு நினைச்ச பலநேரங்களில் இதுவும் ஒன்று. பாட்டுக்கு நடுவில் சோபாவில் அமர்ந்திருக்கும் ஒரு காட்சியில்....அஜித்..ம்ம்ம்ம்ம்ம்ம்.... ஸ்டைலு !   கொஞ்சமா மெலிஞ்சுடுங்களேன்.. இன்னமும் அழகா இருப்பீங்க.
 
* ஹூஸைனம்மா பதிவுகளை படிக்காமல் விடமாட்டேன், எப்படியும் சேர்த்துவைத்தாவது மொத்தமாக படித்துவிடுவேன். நேற்று ஒரு பதிவில் சூரிய ஒளியில் மின்னும் பாட்டில் அதிலிருந்து கிடைக்கும் ஒளி என  மிகவும் எளிமையான முறையில் வீட்டில் வெளிச்சம் கிடைக்கும் செய்தியை எழுதி இருந்தார்கள். தேவையான ஒன்றாகப்பட்டது. சுட்டுட்டேன். நன்றி ஹூஸைனம்மா! :).


ஃபிலிப்பைன்ஸ் நாட்டு நகரான மனிலாவில், வீட்டில் வெளிச்சம் கிடைக்க ஒரு எளிய முறையைக் கடைபிடிக்கிறார்கள். என்னன்னா, ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து, வீட்டுக்கூரையில் ஒரு துளை இட்டு, சொருகி வைத்து விடுகிறார்கள். சூரிய ஒளி அந்தத் தண்ணீரில் பட்டு பிரதிபலித்து, வீட்டின் எல்லாத் திசைகளிலும் பரவி வெளிச்சம் அளிக்கிறது. இதையே, கூரையில் ஒரு துளையிட்டு கண்ணாடி போட்டால் என்ன என்று கேட்கலாம். அப்படிச் செய்தால், அது அந்தத் துளையின் நேரே மட்டும்தான் ஒளிபாய்ச்சும். இந்த ‘பாட்டில் முறை’யிலோ, அறை முழுவதுற்குமாக, 55 வாட்ஸ் அளவு வெளிச்சம் கிடைக்கிறதாம். தண்ணீரில் பாசி பிடிக்காமலிருக்க, நான்கைந்து ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரையும் கலந்துவிட்டால், சுமார் நான்கு வருடங்கள் வரை இந்த ஒற்றை பாட்டில் தொடர்ந்து மங்காமல் வெளிச்சம் தருமாம்!! ஒரே அறைக் கூரையில் நான்கைந்து பாட்டில்களை மாட்டிவிட்டால், வெளிச்ச வெள்ளம்தானாம். ஆஃப்-ஆன் பண்ணும் சிரமமில்லை. மின்சாரக் கட்டணக் கவலையில்லை!!

* மனித உணர்வுகளோடு தொடர்ந்து விளையாடுபவர்களை...............
..... ”செக்” வைத்து தூக்கனும். செக் வைக்க அவர்களே வழி வகுக்கும் வரை காத்திருக்கலாம்/ கண்டிப்பாக வழி வகுப்பார்கள் ! # தெளிவு/அனுபவம்/வாழ்க்கை.

* மறுபடியும் ஆண்களை தொடர்கிறேன். இரு சக்கர வாகனம் ஓட்டுவதும், வேகமும் புதிதல்ல, ஆனால் நெடுந்தொலைவு பயணம், மிக நெரிசலான போக்குவரத்து இருக்கும் வீதிகளில் செல்லும் போது, மிக லாகவமாகவும், வேகமாகவும் வண்டி ஓட்ட ஆண்களை போல பெண்ககளால் முடியாது. அப்படி வண்டி ஓட்டும் ஏதேனும் ஒரு ஆணை பின் தொடர்ந்து, என் வண்டி ஓட்டும் திறனை வளர்த்துக்கொள்வது வழக்கம் மட்டுமல்ல, பிடித்தமான விஷயமும் கூட. அந்த ஒருவர்,  ஒரே ஆளாக இல்லாமல் அவ்வப்போது நடுநடுவில் என்னை முந்திச்செல்லும் யாரோ ஒருவராக இருப்பார். நடுவில் சில ஆண்டுகள் இதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போக.. மீண்டும்...தொடர்கிறேன்.  இன்னமுமே அவர்களை போன்று ”கட்” கொடுக்க, லாரி/பஸ் டயர் வரை சாய்ந்து வளைந்து செல்வது போன்றவை எல்லாம் செய்யவில்லை. செய்யத்துணியவும் இல்லை. சில்லறை பொறுக்கினால், முதலில் வரும் வார்த்தை “பொம்பளைக்கு இதெல்லாம் தேவையா? நீ என்ன ஆம்பளையா?”. சரி விடுங்க...


* மெட்ரோ ரயில் திட்டம் என்னமோ ரொம்பவும் பிடிக்கிறது. சென்னையை சுற்றி மிக அற்புதமான திட்டமாக தெரிகிறது. 2015 க்குள் முடியும் என்று சொல்லுகிறார்கள். அது வரை போக்குவரத்து நெரிசல், பள்ளம் மேடு..சகிப்புத்தன்மை நமக்கு வேண்டும்,  இல்லையென்றால் மட்டும்..?! :) சென்னைப்போக்குவரத்து புதுசா என்ன?

* அம்மா ஆட்சி - புதிய பச்சைக்கலர் அம்மா படம் போட்ட மாநகர பேரூந்துகளை கோயம்பேடு பஸ் நிறுத்தத்தில் பார்க்கமுடிந்தது. அர்ஜன்ட்டா ஒரு டவுட்.. அம்மா மாடு, ஆடு எல்லாம் கொடுக்கறாங்களே. .அதுக்கும் பச்சைக்கலர் அடிப்பாங்களா? !  அம்மா வாழ்க. அம்மா நாமம் வாழ்க !  பச்சைக்கலர் பெயின்ட் மேனுஃபேக்சுரர் கோடீஸ்வரர் ஆக !கோடிஸ்வரர் கம்பெனி யில் எனக்கு லட்சங்களில் சம்பளம் கிடைக்கும்படி ஒரு வேலை கிடைக்க. அட, பச்சைக்கலர் நம் வாழ்வியல்பை எங்கோ தூக்கி செல்கிறதே?!

* அலுவலகம் விட்டு வரும் போது மட்டுமே ஏடிஎம் போக நேரம் இருக்கும். 8 - 8.30 மணி வாக்கில் வீட்டுக்கு திரும்பும் போது அப்படியே வேளச்சேரி ஐசிஐசிஐ வங்கிக்கு செல்லுவேன். நான் செல்லும் போதெல்லாம் சொல்லிவைத்தது போல ஏடிஎம் மூடி இருக்கும்.. பணம் நிரப்ப ஒவ்வொரு முறையும் எப்படியும் 20 நிமிஷம் எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கு முன் , பணம் தீர்ந்துப்போனால் மட்டுமே வந்து நிரப்புவார்கள் என்ற எண்ணம் இருந்தது. ஆனால்  தினப்படி காலையிலிருந்து இரவு வரை பணத்தோடு சென்னையை சுற்றும் டீம் இருப்பதாக புரிந்துக்கொண்டேன். # செக்கியூரிட்டி கொடுத்த தகவல். இது வேலைக்கு ஆகாது என, அப்படியே பொடி நடையாக வந்து ஹெச்.பி பெட்ரோல் பங்க், பாங்க் ஆஃப் பரோடா வில் பணம் எடுத்துக்கொள்வேன்.

* தமிழ்நாட்டில் குல்ஃபி சாப்பிடுவது நின்று போய் பல வருடங்கள் ஆகின்றன. ரொம்பவும் மோசமான பல அனுபவங்களே காரணம்.:(. பைபாஸ் ஹெச்.பி பெட்ரோல் பங்க்; க்கும் அம்மன் கோயிலுக்கும் நடுவில், பஞ்சாப் குல்ஃபி (வண்டி) கடை ஒன்றில் குல்ஃபி ரொம்ப நல்லா இருக்கு.  # உயிரை பணையம் வைத்து கண்டுப்பிடிச்சது.

* ரவுண்டு க்கு முதல்முதலாக சென்ற வாரம் ஒரு கருப்பு பேன்ட் எடுத்தோம். நேற்று போட்டுக்காண்பித்தான், என் குழந்தைக்கு கருப்பு கலர் பேன்ட் ரொம்பவே நன்றாக இருந்தது. அகம் மகிழ்ந்து அவனை சுற்றி சுற்றி வந்து நிறைய போட்டோ எடுத்தேன். கண்ணு வைக்கிறோமே என என் வீட்டுக்காரரிடம் "குழந்தைக்கு அம்மா கண்ணுப்படும் சுத்திப்போடுங்ன்னு சொன்னது தான். "நாய் கண்ணு, நரி கண்ணு, பேய் கண்ணு, பிசாசு கண்ணு, பன்னி கண்ணு, பரதேசி கண்ணு, ரவுடி கண்ணு, ராங்கி கண்ணு, பிடாரி கண்ணு .........  ....................... " வேணாம் வலிக்குது !! இத்தோட நிறுத்திக்குவோம் !!

அணில்குட்டி : கவி= //நாய் கண்ணு, நரி கண்ணு, பேய் கண்ணு, பிசாசு கண்ணு, பன்னி கண்ணு, பரதேசி கண்ணு, ரவுடி கண்ணு, ராங்கி கண்ணு, பிடாரி கண்ணு// உங்களுக்குள்ள இவ்ளோ பேரா...?! சொல்லவே இல்ல.. சரி கடைசியா ..சுத்திப்போட்டுட்டு, உங்க முகத்தில தான் 3 தரம் தூ தூ தூ ன்னு துப்பினாங்கன்னு சொல்லவே இல்ல... மறந்துட்டீங்களாஆஆஆ?????????

பீட்டர் தாத்ஸ் : Sometimes, Your blog is your unedited version of yourself
.
Images :- 

நிலா வந்தாச்சி.. அணில் குட்டி வந்தாச்சி... :)

ஈரமான ரோஜாவே
ராத்திரி மயபேஞ்சி இருக்கும்...

என்னை பார்த்து மூடாதே
.டேய் யானை மண்டையா...நான் என்ன டப்பாவா மூட?

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
அட சொன்னதையே சொல்லிக்கிட்டு...
 

 கண்ணில் என்ன சோகம் 
வேணாம்...வலிக்குது.. விட்ரு..

போதும் ஏங்காதே
அழுதுடுவேன்...

என் அன்பே ஏங்காதே (2)
டேய் பேசி தீத்துக்கலாம்... .அம்பு கொம்பு ன்னு கிட்ட வராத..

என்னை பார்த்து ஒரு மேகம்
உன்னையெல்லாம் பாக்கறதே தப்பு... இதுல...

ஜன்னல் சாத்தி விட்டு போகும்
மூச்சி முட்டி சாவவா?
. .. ..
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
டாய் நிறுத்திக்கோ முடியல...

உன் வாசலில் எனை கோலம் இடு
நீ வாங்கற 5க்கும் 10க்கும் இது தேவையா?

இல்லை என்றால் ஒரு சாபம் இடு
நாசமாஆஆஆஆஆ போக... !! கேட்டு வாங்கறான் பாரு ....

பொன்னாரமே...
அட அது ஆரூஊஊ?

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
கண்டுப்பிடிச்சிட்டார்டா.. கண்ணதாசன்....

என்னோடு நீ பாடிவா சிந்து
நானே அதிகம்.. இதுல சிந்து வேறையா...

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
.. .. சொல்ல சொல்ல.... டோண்ட் மேக் மீ ஆங்ரி..

நேரம் கூடி வந்த வேலை
பனக்கொட்ட தலையா... கூடி வந்து கொட்டினாங்களாடா?

நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
பார்ரா பார்ரா... இவரு பெரிய இமாலய வீரர்...

நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
 இந்தா... நிப்பாட்டு ! 
 

என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
சாவூஊஊ

கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
டாஸ்மாக் கை குத்தகைக்கு எடுத்திட்டியா?

என் காதலி...
ஹய்யோ அம்மே அது நானில்ல..

உன் போல என்னாசை தூங்காது ராணி
மாத்தரை ய போடறா வென்று...  தூக்கம் வரலியாம்.....

தண்ணீரில் தள்ளாடுதே தோனி
ஏண்டா... தோனி  ய ஏண்டா நடுவுல இழுக்கற .

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
ஓ... இது அம்மணி......பாடு சாந்தா பாடு.. ..

கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

ம்ம்ம்ம்  ...காதலிக்கறாங்களாமாம்ம்ம்ம்ம் !

Note : Copied from a Radio program.

இன்றைய....
அட ! : என்னைப்போலவே ஒரு பெண் என் கூட பஸ் ல வராங்க.. நான் பார்க்கதப்ப அவங்களும்,அவங்க பார்க்காதப்ப நானும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்போம். 95% என்னைப்போலவே..  அட! :). இன்னைக்கும் அப்படியே.. அவங்க முகத்தை கம்பி மறைக்க, எட்டி பார்த்தேன்... அவங்களும்.. ! :) சட்டென்று இருவரும் பின்வாங்கினோம்... :) எனக்கென்னவோ என்னைவிட அவள் என்னை அதிகம் பார்ப்பதாக தோணுது..

அடச்சே ! : அரசம்ப்பட்டி ஆனந்த் முதல்.. அமெரிக்கா இளா’ வரை.. எளிதாக பயன்படுத்தும் வார்த்தை #$#%த்தா. !  # எங்கிருந்தாலும் தமிழன் டா !