வீட்டுக்குள் நம்மை பூட்டி வைக்கும் போதே,  நம்ம மூளை ஆயிரம் விஷயங்களை அசைப்போடும்.  வண்டியில் போனால், சிக்னலில் நிற்கும் 1-1.5 நிமிடங்களில் சுற்றி இருப்பதை கவனித்தாலே இன்னும் பல ஆயிரம் விஷயம் தலைக்குள் புகுந்து குடைச்சல் கொடுக்கும்.. வண்டி சர்விஸ் விடும் ஒரு நாள், பஸ்ஸில் தான் போக வேண்டி இருக்கும். அந்த ஒரு நாளில் 10-15 கதைகளோடு வீட்டுக்கு வருவேன். இப்போது தினம் பஸ்ஸில் செல்கிறேன். கேட்கனுமா?  குறைந்த காலத்தில், பஸ் பயணம் எரிச்சல் ஊட்டுகிறது. பணம் கொடுத்து நாம் உண்டு நம் வேலை உண்டு என்று தான் சென்று வருகிறோம். ஆனால் சுற்றி நடக்கும் விஷயங்கள் பொறுமையை இழக்க செய்து, கோவமும் எரிச்சலும் தான் மிஞ்சுகிறது. வாயை திறக்காமல் வர ரொம்பவே சிரமப்பட வேண்டி இருக்கிறது.

பார்க்கும் காட்சிகள் :

1. ஆண்களும் பெண்களும் மணிக்கணக்காக செல் ஃபோனில் சத்தமாக பேசி வருவது. இது ஒரு தொடர் நிகழ்வு :(. அதுவும் காதலனும் காதலியும் பேசிக்கொள்ளும் கருமத்தை காதுக்கொடுத்து கேட்கமுடியவில்லை. காதலன்’கள் இப்படி பொதுவெளியில் பேசுவதில்லை (உஷார் மாக்கானுங்களாச்சே!) , பெண்கள் தன் நிலை இழந்து பேசுகிறார்கள். இவர்கள் பேசுவதிலிருந்து எதிர்பக்கம் கொஞ்சுவது காதலன் என்று தெரியவருகிறது. காதலிகளைப் பார்க்க பாவமாக இருக்கிறதே ஒழியே, வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

2. அலுவலக, வீட்டு பிரச்சனைகளை சுற்றம் பாராது, கத்தி பேசுகிறார்கள். இரண்டு நாளைக்கு முன் ஒரு உயர் அதிகாரி, தன் சக ஊழியரிடம் கோவத்தில் கத்திய கத்தில், பஸ்ஸே டக டக டிகு டிகு ன்னு ஆடியது.  அத்தனை முகங்களும் அவரின் குரலுக்கு அலண்டுப்போய் அவரைப்பார்க்க, அவரோ, எதையும் கவனிக்காது  கத்துவதை மட்டுமே தொடர்ந்து செய்துக்கொண்டு இருந்தார். :(

3. வேலைக்கு செல்லும் போதும், திரும்ப வரும் போதும், நம்ம ஐ.டி நாயகிகளும் நாயகர்களும் அந்த ஐடி கார்ட் ஐ கழட்டாமல் காட்டும் சீன் இருக்கே !  யப்பா.. .!! :) ஷாப்பிங் காம்பளக்ஸ், சினிமா தியேட்டர்,  பஸ் நிறுத்தங்கள், கடைகள், பீச், ஹோட்டல் என்று எதுவும் இவர்களுக்கு பாக்கி இல்லை, எங்கு போனாலும் ஐடி கார்ட் டோடு தான் போகிறார்கள்...”கொண்டை”  பளீச் ந்னு தெரியுது.! :)

4. நடுத்தரவயது மற்றும் வயதான கணவன் மனைவி வந்தால், மனைவியிடம் பணம் வாங்கித்தான் கணவர் டிக்கட் எடுக்கிறார். மனைவி சொல்லும் இடத்தில் தான் அமருகிறார், எழுந்திருக்கிறார், பேசுகிறார், சிரிக்கிறார். மனைவி சொல்லே மந்திரம். இது பொதுவாக 90% காணமுடிகிறது. பெண்கள் ஆட்டி படைக்கிறார்கள் ! :)

5. டாஸ்மாக் கடையில் ஒரு பெண், ஒரு சின்ன பாட்டில் வாங்கி, அதை ரவிக்கைக்குள் வைத்துக்கொண்டு, பார் என்று அம்புக்குறி போட்டு இருந்த சந்தில் நுழைந்து சென்றார்.  குடிக்கத்தான் உள்ளே செல்கிறார் என்றால், ஏன் பாட்டிலை ரவிக்கைக்குள் ஒளிக்க வேண்டும் ?!  (கூகுல் பஸ் ஸில் இதை மட்டும் பதிவிட்டேன்)

6. பள்ளி மாணவர்கள் 5-10 வகுப்புக்குள் இருக்கும், எல்லா வயது பிள்ளைகளும் மிகச்சரளமாக தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் பேசுகிறார்கள் ! :(((((((((   எங்கே சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை. :(((((. அதாவது, அந்த வார்த்தைகளை கோவத்திலோ, சண்டை போடும் போதோ பயன்படுத்தவில்லை (நான் அப்படி பேசுபவர்களை தான் பார்த்திருக்கிறேன்)  இயல்பாகவே அவர்களின் மொழியே அப்படித்தான் இருக்கிறது. :((

7. எப்போதுமே எனக்கு இந்த சந்தேகம் உண்டு. பெண்களுக்கு எப்படி மேக்கப் செய்ய இத்தனை நேரம் கிடைக்கிறது? அதுவும் காலை வேலை பரப்பரப்பில்..?  பொறாமை' என்று சொல்லமுடியாது, எனக்கு மேக்கப் என்பதே 100% இவர்களை பார்க்கும் போது தான் நினைவுக்கே வருகிறது. சிலர், 1 இன்ச்’க்கு 2 கோட் வீதம் பூசிக்கொண்டு வருகிறார்கள் . ... கொஞ்சம் பயம் வரத்தான் செய்கிறது!

8. பல அழகான பெண்களை பார்க்க முடிகிறது. மிகவும் லட்சணமாக , சாந்தமாக இருக்கும் பெண்களை பார்க்கும் போது ஏனோ ஒரு அமைதி மனதுக்குள் நிலவுவதை தடுப்பதற்கு இல்லை.

9. ஸ்லீவ் லெஸ் அணியும் பெண்கள் கையைத்தூக்கும் வரை அழகாகத்தான் இருக்கிறார்கள். பேரூந்தின் ஆட்டத்தில் மேலே பிடிக்க கையை தூக்கினார்கள் என்றால்..... கடவுளே... ! :((((( என்ன கொடுமை இது ?!! :(.  வீட்டில் கையைத்தூக்கி கண்ணாடியில் ஒரு முறை இவர்களே இவர்களை பார்த்தால் மற்றவர்களின் நலன் பாதுக்காக்கப்படும். !!  இந்த கொடுமையை பஸ் ஸை தவிர ஜிம் மில் அதிகமாக அனுபவித்து இருக்கிறேன். நானாவது தள்ளி தூரப்போய் விடலாம். ட்ரைனர்களின் நிலைமை ரொம்பவே பாவம். சிலர் சகிக்கமுடியாமல் ஒன்றும் பாதியுமாக சொல்லிக்கொடுத்துவிட்டு தலைத்தெறிக்க ஓடி வந்துவிடுவதும் உண்டு.

10. நடத்துனர் சிலரிடம், சில்லறை திருப்பிப்பெற போராட்டமே நடத்தவேண்டி இருக்கிறது. சில்லறை திருப்பி க்கேட்கும் போது அவர்களுக்கு வரும் கோவத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. 50 பைசா நிச்சயமாக திரும்பி வருவதில்லை. அதிகபட்சமாக 5 ரூ வரை மனசாட்சியே இல்லாமல் ஆட்டையை போடுகிறார்கள். இந்தியா நன்றாகவே வளர்ந்துக்கொண்டு வருகிறது. !

11. சில நடத்துனர்கள் பள்ளியில் குழந்தைகளை நடத்துவது போன்றே பிரயாணம் செய்பவர்களையும் நடத்துகிறார்கள். நேராக போயி வலது பக்கம் திரும்பி இடது பக்கம் பார்த்து நிற்கவும்,  இங்கே நிற்கக்கூடாது அங்கே நிற்கக்கூடாது என ஓவர் இன்ஸ்ட்ரக்ஷ்னஸ் ரூல்ஸ் யுவர் ஆனர்.. முடியவில்லை !  அவர்கள் சொல்லுவதை காதில் வாங்காமல் இருந்தால், பஸ்ஸில் இருப்போர் அத்தனை பேர் காதில் விழும்படி கத்தி கூப்பாடு போடுகிறார்கள். 

12. சந்தோஷமான ஒரே விஷயம் கைக்குழந்தைகளும், குட்டி குட்டி சிட்டுகளும், மொட்டுகளும் செய்யும் சேஷ்டைகளும், மழலையில் கொஞ்சி, அழுது, அடம் பிடித்து கத்தி ஆர்பாட்டம் செய்வதும் பார்க்க பார்க்க கண் ஆயிரம் வேண்டும்.

13. பக்கத்தில் உட்காரும் ஆண்களின் உடல் மொழி.. :) இயல்பாக இருக்கமுடியாமல் ஏன் இப்படி தவிக்கிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒன்று அட்டென்ஷன், இல்லைன்னா ஓவர் ஸ்டேன்ட் அட் ஈஸ்.. இது இரண்டுக்கும் நடுவில் ஒரு நிலைபாடு இருக்கிறது என்பது இவர்களுக்கு தெரியவே தெரியாதா என்பது எனக்கு தெரியவில்லை.

14. தினம் பார்க்கும் முகங்கள், சிலர் அறிமுகமானதில் (பார்த்துக்கொள்வதை வைத்தே) சிரிக்கிறார்கள். பலர் கண்டுக்கொள்வதில்லை. அவர்களில் நானும் ஒருத்தி. சிரித்தால் திரும்ப சிரித்தும், முறைத்தால் திரும்ப முறைத்தும் ... :)

15.கடைசியாக, போக்குவரத்து நெரிசல். தொடர்ந்து தினப்படி போக்குவரத்து நெரிசல் நான் செல்லும் வழியில் அதிகமாக இருக்கும் பகுதி : கிண்டி - சின்னமலை - ஹால்டா ஜக்‌ஷனை சொல்லலாம். மாலை நேரத்தில் எப்போதுமே அங்கு நெரிசலோ நெரிசல். அதை அடுத்து திருமங்களம். இங்கு காலநேரமின்றி நெரிசல் காரணம் மெட்ரோ ரயில்.

அணில் குட்டி : இன்னும் என்னென்ன வெளியில் வரப்போகுதோ.. வூட்டுக்குள்ள பூட்டி வைங்கன்னா கேட்டா த்தானே.. அவங்க கஷ்டம் அவங்களுக்கு... பாவம்.. தாக்குப்பிடிக்க முடியலப்போல... :((

பீட்டர் தாத்தா : A bus is a vehicle that runs twice as fast when you are after it as when you are in it”