கல்லும் கடவுளும் !

கல்லை செதுக்கி
சிலை வடித்தான் சிற்பி

கடவுளாக பாவித்து
வேண்டியவை வேண்டினான் !!

கடவுள் அசைவேனா என்றது  !!
கோபமும் ஏமாற்றமும் சிற்பிக்கு..

சிற்பம் அப்போதும் இப்போதும்
"கல்" தான் !!

செதுக்குமுன் கல்லாகவும்
பின்னே கடவுளாகவும் பார்த்தவன் சிற்பி !

யார் தவறு ???

நம்பிக்கை

அடுத்தவரை நம்புவது
பொய்க்கிறது !
என்மேலேயே நம்பிக்கை
வைக்கிறேன்..
அதுவும்
பொய்க்கிறது.. :))))))
நம்பிக்கையை
அர்த்தமற்றதாக்கும்
வாழ்க்கை....!!

ஆசை

"ஆசையே துன்பத்துக்கு காரணம்! "
சொன்ன
புத்தர்
துறவியானார்..

துறவும்
ஆசைதானே.....???!!

இவரது ஆசையில்
துன்பப்பட்டது
இவரது மனைவியும் குழந்தையும் ..........

துறவியாகக்கூட
ஆசை
இருப்பதில்லை
வெறுமை
மனதை சூழும் போது... !

வெறுமைகள்
ஆசைகளை
அறவே
அகற்றுகின்றன !!

துரத்தல்

விடுபட்டு
ஓடும் நேரங்களில்
பிடித்து இழுக்கும்
இதயங்கள்..

திரும்பினால்
திரும்ப
ஓடவிடும்
அதே
இதயங்கள்.. !

இதயங்களின் மேல்
தவறில்லை
அவற்றை இயக்கும்
வாழ்க்கை... ???

ஓடிப்பிடிக்கும்
ஓட விடும்
"நிற்க " மட்டும்
விடவே விடாது...  !

பார்வைகள்

கடந்து செல்லும் கால்களை
அனிச்சையாய்த் தொடுகிறது
செருப்பு தைப்பவரின்
பார்வை !

*Image - thx google 
.