மழை "இதோ வந்துக்கொண்டே இருக்கிறேன்" என்ற ஒருநாளில் எடுத்தது, மாலை 4 மணி இருக்கும்.

 துரைப்பாக்கத்தில் காலியாக இருந்த ப்ளாட் டில் தேங்கியிருந்த தண்ணீரில் தனியாக விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை. தெரியாமல் விழுந்துவிட்டது என கிட்டே சென்றேன், பார்த்தால் விளையாடிக்கொண்டு இருந்தது. :)

 திருப்போரூர் கந்தசாமி கோயில் குளம், பொரியை சாப்பிட்டே கொழு கொழுவென ஆகியிருக்கும் வாத்துகள். ! :) 
 வீட்டினுள் தீடிரென சிகப்பாக ஒளிவர, கேமரா எடுத்துக்கொண்டு மேலே சென்றேன்... :) மாலை நேரம் செவ்வானம்....

 வேளச்சேரியில் இப்படி ஒருவர் அனுமார் வேஷமிட்டு, வீடு வீடாக, கடை கடையாக சென்று பணம் வாங்கினார். க்ளிக் காமல் இருக்க முடியுமா அந்த அழகை.. :). I like that "வாலூஊ.. !!  :)
 அதே செவ்வானம்... .செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ...

ஒரு விஷேஷத்தில், சீராக கொண்டு வந்த வாழைத்தார்...


பீட்டர் தாத்ஸ் : When you photograph people in colour you photograph their clothes.  But when you photograph people in B&W, you photograph their souls!  ~Ted Grant