கவி : நவீனா........ அடி வாங்கப்போற நீனு இப்ப...

நவீன் :  இரு இரு..!!  நானும் சின்ன புள்ளையில இருந்து பாக்கறேன், இந்த அம்மாங்க புள்ளைங்கள அடிக்கறது " ஒன் சைட்" ஆவே இருக்கே.... ??என்ன கதை இது???  பேலன்ஸ் இல்லாத இந்த  ஒன் சைட் ரூல் போட்டது யாரு..???  காலம் பூரா அம்மாங்க அடிப்பாங்க...புள்ளைங்க வாங்கனுமா..? என்ன நியாயம் இது? அதுக்கு முதல்ல நீ...பதில் சொல்லு...

கவி: இப்ப என்ன....?  உனக்கு என்னை அடிக்கனுமா?

நவீன் : ஹா ஹா ஹா.. .ஆனாலும் உன் காமெடி சென்ஸ் க்கு  அளவே இல்லாம போச்சிம்மா...... நீ இருக்க சைஸ் க்கு நானெல்லாம் அடிச்சா...  ஹய்யோ ஹய்யோ.. .. .. என் கால் ஹைட் கூட இல்ல நீனு... ..போ..போ... போ.....வேலைய பாரு.. போ.........

கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... !!

*************************
காலிங் பெல் அடிக்க, கதவை திறக்கிறேன்.. நவீன்  & ஃப்ரெண்ட்ஸ் குரூப் நிற்கிறார்கள்

கவி ; :)) ஹாய் கைஸ்... :)) வாங்க.வாங்க....

வெங்கட் : ஹாய்....ஆன்ட்டி, யூ லுக் வெரி சிலிம்ம்ம்ம்...

கவி : ஏன்ன்டா???

வெங்கட் : நிஜம்மா த்தான் ஆன்ட்டி, லாஸ்ட் டைம் பாத்ததுக்கு ..ரியலி யூ பிக்கெம் தின் ஆன்ட்டி...

கவி : திருப்பியும் ஏன்ன்டா.. ???

நவீன் : டேய் சனியனே.. ...........மதியம் கண்டிப்பா சோறு போடுவாங்க........... போதும்......வந்து தொல... !!

கவி :  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
**********************************

துணி துவைக்கும் போது ஏகத்துக்கு திட்டிக்கொண்டே இருக்கிறேன்..

நவீன் : எச்சூச்சுமி... ஏன் என்னவோ தனியா பேசிக்கிட்டேஏஏஏஏ இருக்க? எனி கிளைமெட் சேன்ஜ் ப்ராப்ளம்..??

கவி : (செம கடுப்பில்) ம்ம்ம்ம்...எல்லாம் என் தலை எழுத்து. .எரும மாடுங்களோட துணியெல்லாம் துவைக்கனும்னு இருக்கு..........

பழம்நீ:  ஏன்டா, அவ கை தான் வீங்கி இருக்குன்னு தெரியுமில்ல, உன் துணிய நீ துவைச்சிக்கோன்னு சொன்னேனில்ல.. ஏன் செய்ய மாட்டற. .அவ பாரு எவ்ளோ கேவலமா திட்டறான்னு......

நவீன் : ஹா ஹா.. :))) எது கேவலம்.?!! அம்மா புள்ளைய திட்டறதெல்லாம்.... காலங்காலமா நடக்கற ஒரு சாதாரண விஷயம். இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணவே கூடாதுப்பா..
.
பழம்நீ : உன்னால...... என்னையும் சேர்த்து திட்டறாடா...

நவீன் : அய்யய்ய என்ன உங்களோட பெரிய பிரச்சனையா போச்சி... பொண்டாட்டின்னா அப்படித்தான்ப்பா.... நீங்களும் ரியாக்ட் செய்யாம இருங்க.. அவங்க பாட்டுக்கும் கத்திட்டு....  இருப்பாங்க... ஆனா ஒரு ஸ்டேஜ்ல ....பாருங்க...வேலயும் முடிஞ்சி இருக்கும் .. இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணா அப்புறம் நாம வேல செய்ய வேண்டியதா போயிடும்ப்பா...!

கவி : அடப்பாவி... :(((((( !
********************************

நவீன் : அப்பா, சனிக்கிழமை, க்ளாஸ் வைக்கறாங்க.. என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன். உங்களுக்கு ஃபோன் வரும், காலேஜ் வந்து, கையக்கட்டிக்கிட்டு பவ்யமா நின்னு, "என் புள்ள மேல தான் தப்புன்னு சொல்லாதீங்க." என் மானம் மரியாதை எல்லாம் போயிடும்....அவங்கக்கிட்ட "ஆமா அவன் வரமாட்டான் அவனுக்கு வேற வேல இருக்குன்னு சொல்லுங்க " சரியா...!

பழம்நீ: ................................... (என்னைப்பார்க்கிறார்).. அப்படியே.. .......

நவீன் : என்ன அவங்கள பாக்கறீங்க. சொன்னது புரிஞ்சிச்சாஆ...?

பழம்நீ: ............................(என்னைப்பார்க்கிறார்).. அப்படியே.. .......

நவீன் : அப்பா உங்க கிட்ட தான் பேசறேன்..என்ன அவங்கள லுக் விடறீங்க..???

கவி :  டேய்...புரியலையா..? நீ  அப்படியே என்னை மாதிரி இருக்கியாம். !! :))))))))))  ஆனா, இந்த சீன் க்கு எல்லாம், அப்பா சரி வரமாட்டார்டா....  நான் வேணும்னா காலேஜ்'க்கு வரேன்.......சண்டப்போட்டு ரொம்ப நாள் ஆச்சிடா.. ப்ளீஸ், ப்ளீஸ்...நான் வரேண்டா....

பழம்நீ :.............. (என்னைப்பார்க்கிறார்.. பல்லை நற நறவென கடித்துக்கொண்டு) .......அதான்......அப்படியே.. .......
 

கவி :...ஹி ஹி... எப்படிப்பா உங்களுக்கு மட்டும் பல்லை கடிச்சா இவ்ளோ  சத்தம் வருது.. நாங்க கடிச்சா வரலியே.. ?!
 
பழம்நீ:  (ரொம்பவும் கடுப்பாகி.. வேற என்ன நற நற நற தான்... )

*******************
சமையல் அறையில் இருக்கிறேன், பழம்நீ தனியாக ஹாலில் பேசிக்கொண்டு இருப்பது கேட்கிறது..

பழம்நீ: ...கடவுள் கிட்ட.. ஒரு சாதாரண.. .ரொம்ப சாதாரண பொண்ணு வேணும்னு தான் கேட்டேன்.. .ஆனா.. எனக்கு இப்படி ஒரு எக்ஸ்ட்ராடினரி பொண்ணை கொடுத்து...................

கவி : (கொடுத்து ன்னு சொல்லும் போது - வெளியே எட்டி பார்க்கிறேன்..........)

பழம்நீ: (நான் பார்ப்பதை கவனித்தவர்) என்னை பெருமைப்படுத்திட்டாரேஏஏஏ..!! ( :(((((((((((( )

கவி:  ப்பா...நான் எட்டி பாத்ததுக்கு அப்புறம் ஒரு கேப் விட்டீங்களே.. அதை ஃபில் பண்ணுங்க.....உண்மையில என்ன சொல்ல வந்தீங்க??? அதை சொல்லுங்க..

பழம்நீ: சே..சே.... இல்லையே..... நிஜம்மாவே உன்னை நினைச்சி எனக்கு எப்பவுமே பெருமைத்தாண்டி... நீ ஒரு .................நீ ஒரு..........

நவீன் :  நீ ஒரு லூசு .... ன்னு சொல்றாரு ம்மா..!! :)))))

கவி :   அவ்...... இவன் எப்ப வந்தான்... . ?!!  :(((((((( 
************************

கவி : ஏன்டா..அந்த பொண்ணு ஏன் இவ்வளாம் குட்டியா ஒரு ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு இருக்கு... ஃபேஸ் புக் ல பார்த்தேன்...

நவீன் : அவ ஸ்டெல்லா மெரிஸ் ல ப்டிக்கறா...அப்படித்தான் ட்ரஸ் பண்ணுவா... அது இருக்கட்டும், அவ ஷார்ட்ஸ் போட்டு இருந்தா உனக்கு என்ன?

கவி :  .  வீட்டுல ன்னா பரவாயில்ல.. காலேஜ் கூடவா அப்படி போறா?

நவீன் :  அவ என்ன ட்ரஸ் போட்டா உனக்கு என்னம்மா. .ஏன்ம்மா என் உயிர வாங்கற...நீ ஏன் இதெல்லாம் கேக்கற...

கவி : இல்லடா.. ச்சும்மா பொது அறிவை வளக்கலாம்னு தான்...

நவீன் : அது அறிவு இருக்கவங்க செய்ய வேண்டியது ..

கவி : :((((((((((((((


****************
பழம்நீ : ஆமா ஏதோ ஆசிரமத்துல போயி சேர போறேன்னு சொன்னியே எப்ப போக போற....??

கவி : ...............????????? ................... (என்ன குடும்பம் டா இது ?!! )

நவீன் : ஹா ஹா ஹா ஹா ஹா..... ஹய்யோஓ ஹய்யோஒ.... இந்த மாதிரி அவங்க சொன்னதை நீங்களும் நம்பிட்டீங்களா??? ஹா ஹா :))))))

பழம்நீ:  அடிக்கடி சொல்றாடா... அதான் கேட்டேன்

நவீன் : ம்க்கூம்.. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா சொல்றாங்க ஆனா போகத்தான் மாட்டறாங்க... :)))))), உங்களுக்கும் கொஞ்ச நாள்ல பழகிடும்..... .விடுங்க :)))))))

பழனி : அப்ப போகவே மாட்டாளா...:(((((((

கவி :  :(((((((( . .. மே ஐ கம் இன்..... ..நீங்க இரண்டு பேரும் என்னைப்பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். வில் யூ போத் க்ளோஸ் தி டோர்.!!

நவீன் : அத நீ செய்தா இந்த வீடே நிம்மதியா இருக்கும் நீயும் ஆசிரமத்துக்கு  போக வேண்டி இருக்காது. !!

கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
************

நவீன் : (சீரியஸாக) அம்மா  காலையில் செய்யற டிபன் எல்லாம் நீ ஏன் மதியம் செய்யற ???

கவி : ??????????????????????

நவீன் : (மறுபடியும் சீரியஸ்) எப்பவுமே பொங்கல் எல்லாம் காலையில் தானம்ம்மா செய்வாங்க??

கவி : ஞே !!

(அவ்வ்வ் நான் செய்து வைத்திருந்தது என்னவோ சிக்கன் பிரியாணி..?!!! .. :(((((((, என்னா கிருவித்தனம்!!  புள்ளையா இது..?!! )
*******************

அணில் குட்டி : காமெடி பீஸ் ன்னு உலகத்துக்கே தெரியும். இதுல இதை வரலாற்றுல வேற பதிஞ்சி வக்கறாங்களாமாம்..... ... வெளங்கிடும்..!!.

இந்த தலைப்புக்காக டைம் ஆனாலும் பரவாயில்லைன்னு க்யூல வந்து  ..ஒவ்வொருத்தரா அம்மணிய துப்பிட்டு போங்க.. யாரும் மிஸ் ஆகக்கூடாது சொல்லிட்டேன்.. !!

பீட்டர் தாத்ஸ் : A man loves his sweetheart the most, his wife the best, but his mother the longest