சருகுகள்
என் காலடியில் -
அண்ணாந்து பார்க்கிறேன்....

இலையில்லாமல் நீ
களையிழந்து நிற்கிறாய்....

இன்று
இலைகளை உதிர்ப்பாய்..
நாளை
வளர்ந்து செழிப்பாய்...
பூக்களாக....
காய்களாக......
கனிகளாக........

பிறகொருநாள்
உன்னுடையதாயினும்
வேண்டாமென
கொட்டி தீர்ப்பாய்...

உனக்கு இது வாடிக்கை
உன் பருவங்களை
எளிதாய்
நீ கடக்கிறாய்...


உனை வளர்த்தேனே..
இனி
உனைக்கண்டு
எனை வளர்க்கவோ?? 

ஆனால்.......

நீயோ
மரம் !!
.