:))) சிலரோட சமூக அக்கறை.. தாங்ங்ங்க முடியலைங்க........... :))))))), சிரிக்கத்தான் முடிகிறது !! என்னமா சமுகத்தின் மேல் இருக்கும் தன் அக்கறையை தன்னுடைய (சிலமுறை பலமுறை படிக்கப்பட்டு, திருத்தப்பட்டு...டம்மா டம்மா டம டம டம்மா....) எழுத்தின் மூலம் கொட்டிக்காட்டறாங்க.. ..ஸ்ஸ்யப்பா...

ம்ம் அதையெல்லாம் படித்த பிறகும் நாம் திருந்தாட்டி.. நாம எல்லாம் மனுஷங்களே இல்லை. .இந்த சமூகத்தில் வாழவே தகுதியில்லாதவர்கள். அப்படி யார் என்ன எழுதிட்டாங்கன்னு கேட்டீங்கன்னா...  அதை எல்லாம் சொல்லி தெரியப்படுத்தற அளவு நமக்கு அறிவு இல்லைங்க.. .. வெளி உலகத்தில் (அழகிய) முகத்தை காட்டியும்..  உள்ளுக்குள்ள  (அழுகிய) வேறு முகத்தோடையும் இருப்பவர்களுக்கான, அறிவையும் சாமர்த்தியத்தையும் கடவுள் நமக்கு கொடுக்கல'ன்னு சொல்ல வந்தேன்.. .நிறைய மனிதர்களிடம் இதை கண்டுவிட்டேன் என்றாலும் சிலரின் நடிப்பை பார்த்து, என்னை மறந்து, வியந்து வாய் பிளப்பதில் கொசு உள்ளே சென்று குட்டி போட்டு இனப்பெருக்கும் கூட செய்துவிடுகிறது... அதற்கு கிடைத்த சான்ஸை அது சரியாக பயன்படுத்திக்குது.. :))).

இப்படி பார்த்து பார்த்து, ஏன் மனிதன் இப்படி முகமூடி மாட்டி திரிகிறான் என்ற கேள்விக்கு விடைத்தெரியாமல்.. இப்படி இருந்தால் தான் வாழமுடியும்..?? இல்லை வாழ்க்கை என்பதே முகமூடிகளுடன் கூடியதா? அல்லது இப்படி வாழ்ந்தால் தான் சந்தோஷமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை மனிதனுக்கு இருக்கிறதா என்ற சந்தேகமும் இருக்கிறது.

சரி அதை விடலாம்...பிரச்சனையும் கோபமும் - சமூக அக்கறையை, தன்  எழுத்தின் மூலம் தானாக பறைசாற்றுபவர்கள் மேலில்லை.. அதனை படித்து "ஆஹா ஓஹோ..என ஜல்லி அடித்து, நீ ஒரு அது.. நீ ஒரு இது.. " என ஏற்றிவிடுவதால், இந்த வேஷதாரிகள் இன்னமும் தன் முகத்தை அழகாக க்காட்டிக்கொள்ள  என்னென்ன முடியுமோ அத்தனையும் தங்கள் எழுத்தில் கொண்டு வருகிறார்கள்... :))  அதே சமயம், அவர்களின் "அழுகிய" முகம் தெரிந்த நமக்கு, கருமம் சகிச்சிக்க முடியல.!!  பாருங்க இப்படி எல்லாம் எழுத வேண்டி வந்துடுது.. !!

இப்படிப்பட்டவர்கள் வளர்வதால் என்ன பயன்னு ஓரமா உக்காந்து யோசிச்சி ப்பார்த்தேன்...  முதலில் தோன்றியது.. நல்ல அரசியல் வாதியாக வரலாம். .அப்பத்தான் "உள்ளே வெளியே" விளையாட்டு மிகச்சரியாக மக்களுக்கு சந்தேகம் வராமல் செய்து நம் நாட்டையும் மக்களையும் சமுக அக்கறை என்ற பார்வையில் எளிதாக ஏமாற்றமுடியும். இவர்களை போன்று வளர்ந்தவர்கள் தான் அரசியல்வாதிகளோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நல்ல அரசியல் செய்ய இந்த "உள்ளே..வெளியே" குவாலிட்டி இருந்தால் போதும் என்றே தோன்றுகிறது. அதாவது எத்தனை கேவலமான மனமும் குணமும் நடத்தை இருந்தாலும், வீட்டைவிட்டு வெளியில் வந்தவுடன், ஒரு மந்தகாச புன்னகை ஏந்திய முகமும், பார்ப்பவர்கள் ஆச்சரியப்பட்டு பூரித்து பொங்கி வழியும், பேச்சும் நடத்தையும் கண்டிப்பாக வேண்டும். இதை தொடர்ந்து செய்பவர்களை பார்த்து.. ஹி ஹி. .எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்குங்க..!! :))

அடுத்து, இவர்களை பார்த்து வளரும் இவர்களது குழந்தைகள் எதிர்காலத்தில் இவர்களை விட தில்லாலங்கடிகளாக வந்துவிடுவார்கள், அல்லது இரட்டை வேஷத்தை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல், மன அழுத்ததில் சமூகத்தில் ஒன்றாமல் தனித்து நிற்கக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டு,  பெற்றவர்களை வெறுப்பது போல சமூகத்தையும் வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

மூன்றாவது, இவங்களால பலருக்கு பொழுதுப்போக்கு, இப்ப என்னையே எடுத்துக்கோங்களேன். .இவங்க எழுதறதை எல்லாம் பல நேரம் படிக்கறது இல்லை என்றாலும், வலிந்து என் வாசலில் வந்து நிற்கும் சில எழுத்துக்களை படிக்கும் போது, இப்படியும் மனிதர்கள் என்று இன்னமும் மனிதர்களின் மேல் உள்ள நம்பிக்கை குறைந்து, இப்படி எழுதி என் பொழுதை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறேன். 

நான்காவது, தன் முதுகில் இருக்கும் அழுக்கை யாராலும் பார்க்க இயலாது என்ற பழமொழி இப்படிப்பட்டவர்களால் உறுதியாகிறது. :)))

ஐந்தாவது, என் எழுத்தை படித்து பார்த்து, நான் இப்படித்தான் என்று, முன் முடிவு செய்து அதற்கு தகுந்தார் போன்று பேசி, நடந்து என் மனதை புண்படுத்திய நல்லவர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.

எழுத்து என்பதை நம்மை தனிப்பட்ட முறையில் யூகிக்க உதவுகிறது என்பதை உணர்ந்ததே "என்னை யார்" என்று என் எழுத்தின் மூலம் முன் முடிவுக்கு வந்து அதை என்னிடமே சொன்னபோது தான்... !! அது வரையில் அப்பாவியாக இவர் என் 'நண்பர்/தோழி' என்ற நம்பிக்கையை இழந்த போது என் வலியை ... .... வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

என் எழுத்தின் மூலம் என்னை அறிந்தவர்கள் யாருக்குமே என்னை தனிப்பட்ட முறையில் தெரியாது. பக்கம் பக்கமாக எழுதும் ஒருத்தி, ஊமையாக க்கூட இருக்கலாம். ஏன் குருடாகக்கூட இருக்கலாம். எழுத்து என்பது, நம்மை பிரதிபலிப்பதாகவா இருக்கிறது? என்பதை பலநேரம் நான் கேள்வியாக்கி எனக்குள்ளவே கேட்டு இருக்கிறேன். பொதுவில் வாய் கிழிய எழுதுவதை, தனிப்பட்ட முறையில் செயற்படுத்தக்கூடியவராக இருக்கிறார்களா, நடந்துக்கொள்கிறார்களா என்று கவனிக்காமல், அல்லது அதை பற்றி தெரியாமல் ஒருவரை பற்றிய எண்ணங்களை, தனக்கு புரிந்தபடி அமைத்துக்கொள்வது மனித இயல்பாகிவிட்டது. அப்படி அமைத்துக்கொள்வது சரியில்லை என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.

பல வருடங்களாக நம்முடன் பழகும் ஒருவருக்கு கூட நம்மை பற்றி சரியாக தெரியாமல் இருக்கும் போது, எழுத்தை படிப்பதின் மூலம் இவர் இப்படித்தான் என்பதை யூகிப்பது மட்டுமில்லாமல், அவர் அப்படித்தான் ன்னு ஒரு முடிவுடன் எப்படி அணுகமுடியும்? இது தொடர்புடைய பதிவு

மனிதர்கள் யாரும் தன் நெகட்டிவ் வெளியில் தெரிவதை விரும்பமாட்டார்கள், நெகட்டிவ் என்று சொன்னது, ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதுவே பாசிட்வ்'விற்கு கிடைக்கும் மதிப்பை கண்டு மயங்கி, அதனை இன்னமும் அதிகமாக்கி க்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.  நம்மின் நெகட்டிவ், பாஸிட்டிவ் என்ன, எதில் தவறு செய்கிறோம், எங்கே சரியாக இருக்கிறோம் போன்ற சுய அலசல்கள் இருந்தால், அந்த மனிதனை எதுவும் சஞ்சலப்படுத்திவிடாது. சுய அலசல் இருப்பவர்கள், வேஷதாரிகளாக இருப்பதில்லை. :). 

சரி சரி எங்கேயோ ஆரம்பித்து அங்கே இங்கே என எங்கெங்கோ வளைந்து நெளிந்து போயிட்டேன், தலைப்புக்கு வருகிறேன். என்னென்னவோ எழுதிய பிறகும், இது எதற்கு என்று புரியாதவர்களுக்கு ஒரு சின்ன உதாரணம்-

சமூக அக்கறையும், சாமானியர்களின், கீழ்மட்ட மக்களின் மீதும் அக்கறை மண்டி கிடக்கும் எத்தனை பேர் நம் வீட்டு வேலைக்கு நாம் சாப்பிட்டு போடும் தட்டை கழுவ, நமக்கு சமைத்து போடவும், நம் வீட்டு கழிவறைகளை கழுவ, சுத்தம் செய்ய, இந்த மனிதர்களை காசு (காட்டி) கொடுத்து,  கழவ சொல்லாமல் இருக்கிறோம்? - இவர்களுக்கு சம்பளம் என்ன? 50 ரூ - 4000 ரூ வரை. இது சீமாட்டிகளின்/சீமாட்டன்'களின் சம்பளத்தை பொறுத்து மாறுபடும்.

என்னை நோக்கி உங்கள் கை நீளும் முன்.. - எங்கள் வீட்டில் வேலையாள் எப்போதும் வைப்பதில்லை. எங்கள்வீட்டு கழிவறையை நான் என் கையை கொண்டு தான் சுத்தம் செய்கிறேன். நாங்கள் கழிக்க  பயன்படுத்தும் ஒரு இடத்தை, சக மனிதனை விட்டு சுத்தம் செய்ய விடுவதில்லை..அதற்கு என் மனம் இடம் கொடுப்பதில்லை... இதை நான் இப்போது முடிவு செய்யவில்லை, சின்ன வயதில் தோட்டத்து சந்தின் வழியாக, இரண்டு பக்கெட் தூக்கிக்கொண்டு வந்து, மனித கழிவை, முகம் சுளிக்காமல் அள்ளிக்கொண்டு சென்ற எங்கள் வீட்டு கக்கூஸ் க்காராம்மை'வை பார்த்து முடிவு செய்தது. அந்த அம்மா, மாதம் சம்பளம் வாங்கும், ஒரு மாநில அரசு ஊழியர். பிச்சை எடுக்காமல், மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல், திருட்டு வேலை செய்யாமல், உள்ளே வெளியே நாடகம் நடத்தாமல், செய்கின்ற வேலையை கவனமாக செய்வார். தெருவில் அந்த வண்டியை அவர் தள்ளிக்கொண்டு போவதை பார்க்கும் போது எல்லாம், என் வீட்டில் இப்படி ஒரு வேலையாள் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து மனதில் பதிய வைத்ததை இன்னமும் தொடர்கிறேன்.

கழிவறை கழுவுவது என்பது சாமானிய வேலை இல்லை என்பது, அதை செய்வதால் எனக்கு தெரியும்.  அதை பணம் கொடுத்தாலும் இன்னொரு வீட்டில் சென்று செய்வேனா என்றும் யோசிப்பேன். :). ஒரு வேளை, அப்படியும் என் வேலை இருந்திருந்தால்...???!! அதையும் செய்திருக்க க்கூடும், ஏனென்றால், ஊராருக்கு உபதேசம் செய்யும் சீமாட்டிகளும்/சீமாட்டன்'களும் இருக்கும் இந்த சென்னை மாநகரத்தில் எளிதாக அந்த வேலைகள் கிடைக்கும்,  :))).

ஆக, சொல்லவந்தது, சீமாட்டிகளை/சீமாட்டன்'களை பற்றியல்ல, நமக்கு சமூகத்தில் சக மனிதன் மேல் உள்ள அக்கறை என்பது நம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்... தெருவில் இருந்து அல்ல............

அணில் குட்டி :.............................. ம்ம்...... ம்ம்........................( அம்மணி ரெம்ப கோவமா இருக்காங்களோ....  ) சரிங்க ஆப்பிசர்..!! (அடி ஜூட்......இதுக்கு மேல பேசப்பிடாது இப்ப..)


பீட்டர் தாத்ஸ் :Faith is the first factor in a life devoted to service. Without it, nothing is possible. With it, nothing is impossible.