ஆழ்ந்த அமைதி
சட்டென்று காணாமல் போன சத்தங்கள் !
கூர்ந்து கவனிக்கிறேன்
ஆமாம்
ஆழ்ந்த அமைதி
அதனுள்ளே நுழைய தயக்கம்
நுழையாமல் இருக்க இயலாத நிலை
தயத்தோடு உள் நுழைகிறேன்

மயான அமைதி
காதடைத்தது
கறுப்பு அப்புகிறது
இருளை கண் பழகியது..
இருள் ..இருள் ..இருள் ..

இழுத்து செல்கிறது பாதை..
மெது மெதுவாய்
வேகம் எடுக்கிறது நடை...
வேகம்...
அதிவேகம்...
ஓட்டமாய் மாறியிருந்தது...
கண்முன் தெரியாத ஓட்டம்
கால் தரையில் நிற்காத ஓட்டம்

ஏதோ ஒன்று
தள்ளிசெல்லுகிறது
வளைந்து நெளிந்து நீளும் பாதை
"ஞொய்" சத்தம் இல்ல.. !

மயான அமைதி
ஓட்டம் நிற்கவில்லை
என்ன இடம்
எங்கே செல்கிறது
எப்படி இங்கே இருக்கிறேன்
ஏன் இருக்கிறேன்
ஏன் ஓடுகிறேன்

கேள்விகள் மட்டுமே
பதில் இல்லை
பதில் விழய ஆளில்லை
எனக்கும் தெரியவில்லை
ஆனால் ஓடுகிறேன்......