புரட்சி கல்யாணம் என்று எதை சொல்ல வேண்டும்.. ?!

1. வேறு வேறு சாதியினர் திருமணம் செய்துக்கொள்வதா?

2. வேறு வேறு மதத்தினர் திருமணம் செய்துக்கொள்வதா?

3. கணவனை/மனைவியை இழந்தவரை திருமணம் செய்துக்கொள்வதா?

4. விவாகரத்து ஆனா ஆண்/பெண் ஐ திருமணம் செய்துக்கொள்வதா?

5. நோயாளி/உடல் நலம் (ஏதோ ஒரு விதத்தில்) இல்லாத ஆண்/பெண் ஐ திருமணம் செய்து கொள்வதா?

வெயிட்.... நடுவுல ஒரு சின்ன ப்ரேக் * "செய்துக்கொல்வதா" ன்னு கூட படிக்கலாம். உங்க இஷ்டம். இப்ப கன்டிநியூ... பண்ணிக்கோங்க...

6. உடல் ஊனமுற்ற ஆண் /பெண் ஐ திருமணம் செய்துக்கொள்வதா?

7. வயது வித்தியாசம் பார்க்காமல், வயதில் மிகவும் மூத்தவர் அல்லது இளையவரை திருமணம் செய்துக்கொள்வதா?

8. வேற்று நாட்டுக்காரர்களை திருமணம் செய்துக்கொள்வதா?

9. திருநங்கைகளை திருமணம் செய்துக்கொள்வதா?

10. ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்துக்கொள்வதா?

11. குழந்தையோடு இருக்கும் ஆண்/பெண் ணிற்கு நாம சிங்கிளாக இருந்து திருமணம் செய்துக்கொள்வதா?

12. ஆண்/பெண் இரண்டு பேருக்கும் குழந்தை இருந்து, திருமணம் செய்து க்கொள்வதா?

13. கடைசியாக படத்தில் இருக்கிற மாதிரி நாயை திருமணம் செய்துக்கொள்வதா?

இவை எல்லாவற்றையும் தவிர்த்து,

பூ, தாலி, மஞ்சள், குங்குமம், இசை அல்லது கேவலமான சத்தம் (புதுசா இதை இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன் அதான்..), செருப்பு, துடைப்பம், பூங்கொத்து, வரிசை, பாத்திரம், பண்டம், இனிப்பு, வாழை இலை, வாழை மரம், தோரணம், பந்தல், மேடை, ஐயர், நெருப்பு, சொந்தம், நண்பர்கள், பல்லு போன அந்த கால கிழடுகள், மந்திரம், புகை, பூ மாலை, நகை, காலில் மெட்டி, நெத்தில் சுட்டி, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், வேஷ்டி, சட்டை, புடவை, உள்ளாடைகள், தலைமுடி, கார், பஸ், சைக்கிள், ரயில், வேன், மாட்டுவண்டி, டூவிலர், (இதுல எல்லாம் கல்யாணத்துக்கு வர பயன்படுத்துவாங்க) இன்னும் எல்லாம்..... ஏன் நடந்து கூட கல்யாணத்துக்கு போகலாம், பெருமாள், சிவன், கணேஷன் (இவங்க எல்லாம் சாமிங்க), லைட், பல்பு, ஃபேன், வடை, பாயசம், அப்பளம், ஐஸ்க்ரீம் (அட நடுவுல இது எல்லாம் ஞாபகம் வந்து போச்சிங்க), மூஞ்சி பாக்கற கண்ணாடி, சீப்பு, பவுடர், வீடு, கல்யாண மண்டபம், கோயில், சினிமா தியேட்டர், சாராயக்கடை, (கல்யாணத்துக்கு வரவங்க நைட் ல சில சமயம் சினிமா போவாங்க, தண்ணி பார்ட்டி கண்டிப்பா இருக்கும் அதுக்காக), தாம்பூலம், பன்னீர், சந்தனம், கல்கண்டு, பேரீச்சம் பழம், அரசமரம், மண்பானை, சட்டிகள், விளக்கு, திரி, எண்ணெய், கோலம், சாணி, கோமியம், தயிர், பால், பிரியாணி, கத்திரிக்காய் குழம்பு, (இஸ்லாமியர் திருமணம் ஒன்றிக்கு போன போது சாப்பிட்டது நினைவுக்கு வந்து போச்சி)..இன்னும் என்னென்னவோ.....

14. இப்படி மேல சொல்லியிருக்க எதுவும் இல்லாம... கல்யாணம் செய்தால் அது புரட்சி கல்யாணம் மா?

மனசாட்சியை வெளியில எடுத்து ஹேங்கர் ல மாட்டிட்டு பதில் சொல்லப்பிடாது, மேல இருக்கறதுல உங்களுக்கு தேவையான ஒரு சிலவற்றை மட்டும் சுயநலமா எடுத்துக்கிட்டு மிச்சத்தை தூக்கி போட்டுட்டு, முடியும் னு சொன்னால் அது நியாயமா தர்மமா நீதியா நேர்மையா? ன்னு நானு குரல் எழுப்புவேன்.

இன்னொன்னு கவனிச்சீங்கன்னா.. ஒரு கல்யாணத்துல எத்தன பேருக்கு வேலை கிடைக்குது? குறிப்பா விழுப்புரம் பக்கத்தில் கோலியனூர் ஒரு இடம் இருக்கு, அங்க தான் குயவர்கள் இருப்பாங்க. கல்யாணத்துக்குன்னு சொல்லிட்டா போதும், அதுக்கு தேவையான செட் அழகா செய்து கொடுப்பாங்க.. அவங்க வயிற்று பிழைப்பே இது தான் :) அதுவும் கல்யாண சீசன்ல தான் நிறைய..

அப்புறம் மியூசிக் ட்ரூப்... இவங்களுக்கு கல்யாணத்துல தான் 90% வருமானம்.

சமையல்காரர்கள்

பந்தல் - இதுல நிறைய மேட்டர் இருக்கு..... அப்புறம் கல்யாணவீட்டு சமையல் செய்ய பாத்திரங்கள், நாற்காலி, பெஞ்ச், லைட் ன்னு தனியா பிஸினஸ் செய்து தன் குடும்பத்தை, புள்ள க்குட்டிகளை காப்பத்தறவங்க இருக்காங்க..

சொல்லிக்கிட்டே போகலாம்... உடனே நீங்க தலைப்பை விட்டுட்டு எதை எதை எல்லாம் நான் விட்டுட்டேன் னு யோசிக்காம..

மேல சொன்ன லிஸ்ட் ல எது "புரட்சி கல்யாணம்" ன்னு தெளிவா சொல்லி என்னோட டவுட் டை க்ளியர் பண்ணிட்டு கிளம்புங்க... அப்புறம் ஒரே ஒரு மெஸேஜ்...

எல்லாத்துக்கும் மேல எந்த கல்யாணமா இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சாலும் புரியாட்டியும் தெரிஞ்சாலும் தெரியாட்டியும் செத்தாலும் உயிரோட இருந்தாலும்.... "விட்டுக்கொடுத்து" வாழாட்டி... எப்பேர் பட்ட கல்யாண உறவும் புட்டுக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் !! - அப்படின்னு சொல்லி முடிச்சிக்கிறேன்.

அணில் குட்டி அனிதா : இது வேலைக்கு ஆவறது இல்ல.. நான் முதல்ல இடத்தை விட்டு கிளம்பறேன். ...

பீட்டர் தாத்ஸ் : Many people marry for the wrong reasons, among them 1) to overcome loneliness, 2) to escape an unhappy parental home, 3) because they think that everyone is expected to marry, 4) because only "losers" who can't find someone to marry stay single, 5) out of a need to parent, or be parented by another person, 6) because they got pregnant, 7) because "we fell in love," ... and on goes the list.