சிவா' விற்கு இந்த புது கேஸ், பெரிய சவாலாக இருந்தது.சந்துருவை அழைத்து, "நியூ கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணனும், ஃபைல் ஐ கோ த்துரு செய்துட்டு வா.. இப்ப டைம் 10.35 ஆகுது 11.30 க்கு டிஸ்கஷன் ரூமில் இருக்கனும் " என்று பணித்துவிட்டு, கேன்டீன் பக்கமாக நடந்தான்.

நடுவே கடந்த இரண்டு போலிஸ்காரர்கள் சிவாவை பார்த்து விறைப்பாக நின்று சல்யூட் அடித்தனர். கேஸ் யோசனையிலிருந்து வெளிவராமல் புன்னகைத்தவாரே நடந்தான். கேன்டீனில் அமர்ந்து டீ' க்கு ஆர்டர் கொடுத்துவிட்டு,மீண்டும் கேஸ் பற்றிய சிந்தனையில் மூழ்கினான்.

காமினி? ரொம்ப இண்டரஸ்டிங்கான கேரக்ட்டராக இருப்பா போல இருக்கே.. ? மீடியாவில் ஏதோ ஒரு சில சமயங்களில் இந்த பெயரை கேட்டது போல் இருக்கு, பார்த்த மாதிரி ஞாபகம் இல்ல.. எப்படி இருப்பா இந்த காமினி?! என காமினி பற்றிய நினைவுகளில் இருக்கும் போது நடுவில் டீ வர... பின்னாலே வந்த சந்துரு, எதிரில் வந்து அமர்ந்தான்.

"நேத்தே பாத்துட்டியா?" சிரித்தான் சிவா.

"எப்படியும் நீங்க காலையில் டீடெயில்ஸ் "கேப்பீங்கன்னு....." இழுத்தான் சந்துரு.

புருவங்களை சுருக்கி டீ யை உறுஞ்சிக்கொண்டே... "ஸ்மார்ட் !! . அப்படித்தான் இருக்கனும்.. ! அவுட் லைன்.....

"எஸ் சார்! தொடர்ந்து.. ரகசிய குரலில் சிவாவிற்கு கேட்கும் படி பேச ஆரம்பித்தான் சந்துரு.. " காமினி, வயது 26, நிஃப்ட் ல பேஷன் டெக்னாலஜி படிச்சிட்டு, பிரைவேட் டிசைனரா கேரியரை ஸ்டார்ட் செய்து, அதுல பெரிய ஆளுங்க தொடர்பு கிடச்சி, டிசைனிங் பரொப்ஷன்ல ரொம்ப சக்ஸஸ்ஃபுல் லா இருக்க லேடி. சிட்டியில பிஸினஸ் மெக்னட்ஸ் மிஸ்டர்.ஆதித்யாவர்மா & மிஸ்டர்.பரந்தாமன் இவங்களோட க்ளைன்ட், அவங்களோட கார்மென்ட்ஸ் பிசினஸ்'க்கு டிசைன்ஸ் செய்து தருவது இவங்கதான். அது மட்டும் இல்லாம முன்னனி நடிகர், நடிகைகளுக்கு காஸ்ட்டியூம் டிசைனிங் செய்து தராங்க. பணக்கார வட்டத்தில் பிரபலமான, புத்திசாலி, அழகு, விவேகம், வேகம் நிறைந்த . இது வரைக்கும் இவங்க பெயர் சஸ்பீஷியஸாக இரண்டு கேஸ் ல வந்து இருக்கு, நம்ம டிபார்ட்மென்ட் ஆளுங்களுக்கே அவங்க பேர் எப்படி ரெக்கார்ட் ல வந்துதுன்னு டவுட் இருக்கு...

"ஸ்கிப் காமினி........."

"சார்..!!, உளவு துறையிலிருந்து நமக்கு வந்த தகவல், வெளிநாட்டுலிருந்து மும்பை வழியாக விலை மதிக்கமுடியாத வைரங்கள் கடத்தப்பட இருக்கிறது. எங்க இருந்து எப்படி, எப்போது வருதுங்கற தகவல்..எல்லாம்.."

"வெல், சந்துரு....கண்ணால் ப்ரைவசியை சுட்டிக்காட்டி, உரையாடலை அத்தோடு முடித்தான் சிவா., .......டீ'யில் கடைசி சிப்புடன் வந்த டீத்தூள் நாக்கில் பட்டவுடன், கப்பின்னுள் ஒரு முறை பார்வையை செலுத்திவிட்டு, கப்பை கீழே வைத்த சிவா, விரிட்டென்று எழுந்தான். சந்துரு சொன்னதில் "புத்திசாலி, அழகு, விவேகம், வேகம் நிறைந்த பெண்... " இது மட்டும் ரிவைண்ட் ஆகி திரும்ப திரும்ப காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது. எத்தனை வேலை பளுவிலும் பெண்கள் என்று வந்து விட்டால் அணுஅணுவாக ரசிக்கும் குணம் கொண்ட சிவாவிற்கு, காமினி'யை பார்க்க ஆவல் எழுந்ததில் கொஞ்சமும் வியப்பில்லை!

"கம் ஆன் லெட்ஸ் கோ........ போட்டோஸ் எல்லாம் கலெக்ட் செய்தாச்சா...?"

பின்னாலேயே வேகமாக தொடர்ந்தான் சந்துரூ......"எஸ் ஸார், ஃபைல் ல ஹார்ட் காப்பி இருக்கு, ஆபிஸ் சிஸ்டம் அன்ட் உங்க லேப்பில லோட் செய்துட்டேன்"

************

காமினி, 5.6" உயரம், பொட்டில்லாமல் க்ளீனாக இருந்த சிறிய நெற்றி, மை இடாத மிக அழகான பெரிய கண்கள், கூரிய நாசி, லேசாக லிப்சிட்க் போட்ட உதடுகள், ஸ்லிம், டைட் ஃபிட்டிங் குர்தாவில் வளைவுகள் தெரிந்தன. மேட்சாக லெங்கின்ஸ். ஹை ஹீல்ஸ், நடுநடுவே கலர் செய்யப்பட்டு யூ கட் செய்யப்பட்ட தலைமுடி, முகத்தை மறைக்கும் சன் க்ளாஸ், லேப் டாப் லெதர் பேக், கூடவே தொங்கும் குட்டி லெதர் ஹேன்ட் பேக் சகிதமாய் சில்வர் நிற பென்ஸ் பி&டபில்யூ வை மிக லாவகமாய் பார்க்செய்து விட்டு, அவளின் அந்த சின்ன நேர்த்தியான அலுவலகத்துள் நுழைந்தாள்.

ரூமில் நுழைந்த 10 ஆவது நிமிடம் செக்கரட்டிரி இண்டர்காமில் அழைத்தாள்."மேடம், குட் மார்னிங்! ப்ரீவியஸ் அப்பாய்ன்ட்மென்ட் இல்ல, மிஸ்டர். சிவா, ஏசிபி, சென்னை & மிஸ்டர்.சந்துரு ஹிஸ் அசிஸ்ட்டென்ட் உங்களை பார்க்க வந்து இருக்காங்க...."

இரண்டு வினாடித்துளிகள் யோசித்து, "கெஸ்ட் ரூம்'மில் உட்காரச்சொல், அங்க வந்து பார்க்கிறேன்." என்றாள்

ஹேன்ட்பேக் திறந்து, கைக்கு அடக்கமான முகக்கண்ணாடியை எடுத்து ஒரு முறை பார்த்து, சிகையை சரிசெய்துக்கொண்டு கெஸ்ட் ரூம் சென்றாள் காமினி.

**********

"ஹல்லோ மிஸ்டர்.சிவா, ஐ அம் காமினி, ஹல்லொ மிஸ்டர். சந்துரு.. !! " சிரிப்போடு இருவருக்கும் கைக்குலுக்கினாள்.

அசந்துபோனான் சிவா... இவளா ?!! என்று ஒரு சராசரி ஆணாக யோசித்த போதே...சந்துரு, சிவாவின் மன ஓட்டம் அறிந்து, சார்.. என்று குரல் கொடுக்க... விழித்துக்கொண்டான்.

"ஹல்லோ ..ஐம் சிவா..! ஏசிபி சென்னை. ஜஸ்ட் உங்களை பார்த்து சில டவுட்ஸ் க்ளையர் செய்துக்கலாம்.னு"

"யெஸ்.. "

"2008 ல் நடந்த பிரான்ஸிஸ் கேஸ் ல உங்க பேர் இன்க்ளூட் ஆகி இருக்கு... .."

இடைமறித்தாள் காமினி. "கேஸ் க்ளோஸ்ட் மிஸ்டர்.சிவா. என்னோட பேரை எடுக்க சொல்லி கோர்ட் உத்தரவு அதில் இருந்து இருக்கனுமே.. இஃப் யூ வான்ட் ஐ கேன் ப்ரோட்டூயூஸ் எ காப்பி..."

"யப் நாங்களும் பாத்தோம்.. இருந்தாலும் எப்படி உங்க பேர் அதுல வந்து இருக்குன்னு.."

"சி மிஸ்டர்.சிவா.. உங்க ஃபைல் ல அந்த கேஸ் விஷயமாக எல்லா டீடெட்டெயில்ஸ் நீங்க படிச்சி இருப்பீங்க.. கேஸ் முடிஞ்சி இரண்டு வருஷம் ஆச்சி, அதை பற்றி பேசி இரண்டு பேரோட நேரத்தை வீணடிக்காம, இப்ப என்ன விஷயமா வந்து இருக்கீங்கன்னு நேரடியாக பேசலாமே...

"ம்ம்ம் ஸ்மார்ட்! மனதுக்குள் சொல்லிக்கொண்டான் சிவா! "ஜஸ்ட் அதை பத்தி பேசத்தான் வந்தோம்..நந்திங் எல்ஸ்... சந்த்ரூ கிளம்பலாம். சிவா எழுந்தான். உடன் சந்துருவும்..

"தாங்க்ஸ் மிஸ். காமினி."

".. மை ப்ளஷர்.. !"

*************

அன்றிலிருந்து, மிக ரகசியமாக காமினியை கவனிக்க செய்ய செழியன் நியமிக்கப்பட்டான். ராஜாராம் காமினியின் பி.ஏ வை கவனிக்கவும், காமினி ஆபிஸ்'ஸில் புதிதாக சேர்ந்த ஆறுமுகம் போலிஸால் அனுப்பப்பட்டும் இருந்தான். மூவரும் சந்துருவுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருந்தனர். அவ்வப்போது கிடைக்கும் எல்லா தகவல்களும் சேகரிக்கப்பட்டு, சிவாவின் பார்வைக்கு தினம் இரவு கொண்டு செல்லப்பட்டது.

சரியாக 52 ஆவது நாள் காமினி யின் மும்பை பயணம் பற்றிய தகவல் கிடைத்தது. மும்பையில் நடக்கும் ஒரு ஃபேஷன் ஷோ'விற்கு காமினி தான் உடைகள் டிசைன் செய்கிறாள் என்றும் அது சம்பந்தமாக செல்வதாகவும் தெரிந்தது. பயணம் பற்றிய தகவல் கிடைத்த நாளிலிருந்து, சரியாக 6 ஆம் நாள், காமினி மும்பையில் 5 நாட்கள் தங்க ஏற்பாடு ஆகி இருந்தது.

சிவாவும், சந்துருவும், அவர்களால் கண்காணிக்க படலாம் என்பதால், அவர்களின் மும்பை பயணம் மிக ரகசியமாக வைக்கப்பட்டு இருவரும், வேலை சம்பந்தமாக கேரளா சென்றிருப்பதாக காமினி புறப்படும் இரண்டு தினங்கள் முன்னதாகவே இவர்கள் புறப்பட்டு விட்டதாக தகவல் பரப்பப்பட்டது.

சிவா, சந்துரு இருவரும் வேறு வேறு தேதிகளில் மும்பை செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. சிவா இப்போது காமினியை நேரடியாக ஃபாலோ செய்ய ஆரம்பித்து இருந்தான். மும்பையில் காமினியின் உடை மேலும் கீழும் ஏகத்துக்கு குறைந்து, மிகவும் கவர்ச்சியாக இருந்தாள். ஒரு அழகான பெண்ணை இத்தனை நெருக்கமாக கண்கானிப்பது எத்தனை இனிமையான அனுபவம்? அதுவே செய்யும் வேலையாகி போனது..ஆஹா..சிவாவின் மனதில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடியது. அதை தாண்டி, கடமை கண்ணியம் அவனை தடுத்து நிறுத்தி "கடமையை செய்யடா மடையா" என்றது. !

மும்பை சென்ற நான்காவது நாள் இரவு, காமினி வெளியில் கிளம்பினாள். அவள் அறியாமல் தொடர்ந்தான் சிவா. சம்பந்தமில்லாத திசையில் காமினியின் கார் பயணம் செய்தது. சிவா சந்துருவிற்கு அவ்வபோது எங்கிருக்கிறான் என்ற விபரம் சொல்லிக்கொண்டு இருந்தான். மும்பை நகரை விட்டு கோவா செல்லும் பாதையில் வண்டி சென்றது. நடுவே பெட்ரோல் பங்கில் ஒரு முறை நிறுத்தினாள், பின்பு தொடர்ந்தது பயணம். சரியாக 5.30 மணி நேரத்தில் மகாபலீஷ்வர்'ஐ அடைந்தது.

அங்கே சென்றதும் ஹை'வே யை விட்டு கார் வளைந்து நெளிந்து எங்கோ செல்ல, இடைவெளி விட்டு தொடர்ந்தான் சிவா. உள்ளே ஒரு இரண்டு கிலோமீட்டர் சென்றவுடன் ஒரு ரிசார்ட்டினுள் அவளின் கார் நுழைந்தது. வெளியில் சற்று தொலைவில் காரை நிறுத்தி, சந்துருவிற்கு விபரம் சொல்லி காத்திருந்தான். சரியாக பத்து நிமிடங்கள், இருபத்து ஐந்து நொடிகளில் அதே ரிசார்ட்டில் அவள் தங்கியிருக்கும் இடத்திற்கு நேர் எதிராக உள்ள தனி காட்டேஜ் ஜில் இடம் புக் செய்து சிவாவிற்கு தகவல் சொல்ல. சிவா காரை ஸ்டார்ட் செய்து உள்ளே நுழைந்து, வேகமாக புக்கிங் வேலையை முடித்து, ரூமிற்குள் தஞ்சம் புகுந்து, அவளின் காட்டேஜ் ஐ ஜன்னல் வழியாக கண்கானிக்க ஆரம்பித்தான்.

விடியற்காலை சரியாக 3.20 க்கு காமினி, ஜீன்ஸ் பேன்ட், இடுப்பு வெள்ளையாய் நடுவில் தெரிய டைட் டிஷர்ட், தலைமுடியை சுழட்டி இறுக்கி மேல் வைத்து க்ளிப் போட்டு, மொபைலை ஹெட் ஃபோனில் கனெக்ட் செய்து காதில் மாட்டிக்கொண்டு, ஸ்போர்ட் ஷூ சகிதம் வெளியில் வந்தாள். பாதி தூங்கியும் தூங்காமலும் இருந்த சிவா, துள்ளி எழுந்தான். வேக வேகமாய் முகத்தை தண்ணீரால் அடித்து, துடைத்துக்கொண்டு,பிஸ்டல் இருக்கிறதா என்பதை ஒரு முறை கன்பாஃர்ம் செய்துக்கொண்டு, பின் கதவின் வழியே வெளியில் வந்து, அவளை தொடர்ந்தான்.

நடையின் ஊடே யாருடனோ போனில் பேசியபடி போவதாக சிவாவிற்கு பட்டது. அவளை நடையோடு பின் தொடர மிகவும் சிரமப்பட்டு, சந்துருவுக்கு ஃபோன் செய்ய,அவன்"நான் என்ன செய்ய பாஸ்? வேணும்னா நீங்க போய் தூங்குங்களேன்" என்று கிண்டல் செய்துக்கொண்டே அவள் செல்லும் வழியை கூகுல் மேப்பில் தேடி, எங்கே செல்கிறது என்று சொல்லிக்கொண்டே வந்தான். பக்கதில் ஒரு ஸ்போர்ட்ஸ் க்ளப், ஒரு ஆஸ்பித்திரி'யும் இருப்பதாக சொன்னான். பாதை பள்ளத்தாக்கில் இறங்கி, குண்டு குழியுமாக சென்றது. காமினி நன்றாக வழித்தெரிந்தவள் போல் நடந்து சென்றாள். தட்டு தடுமாறி சிவா அவளை பின் தொடர்ந்தான். அந்த பாதை பிரியும் போது எதிர்ப்பார்காத தருணத்தில் வேகமாக ஓடிவந்த ஒரு கருப்பின பெண், காமினியை மோதிவிட்டு, பிரிந்து சென்ற மற்ற பாதையில் ஓடி இருட்டில் மறைந்தாள்.

காமினியோ அந்த பெண் மோதிய அதிர்ச்சி எதையும் காட்டாமல் தொடர்ந்து நடக்க, சிவாவிற்கு சந்தேகம் வந்து, வேகமாய் பின் தொடர்ந்தான், நெருக்கமான காலடி சத்தத்தில் உஷாரான காமினி, பாதையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் இருட்டில் இறங்கி ஓட ஆரம்பித்தாள். சந்துருவிடம் சொல்லிக்கொண்டே சிவாவும் ஓட, சந்துரு "அப்படியே சென்றால் பக்கத்தில் ஆஸ்பித்திரி இருக்கும் என நினைக்கிறேன் கண்டிப்பாக வேறு வழி அங்கு இல்லை, ஆஸ்பித்திரியை அடைந்தால் ஒரு வேளை மாற்று பாதை கிடைக்கும்" செல்லுங்கள் என்றான். அவளும் ஆஸ்பித்திரியை நோக்கி ஓட, இவனும் அவள் கண்களை விட்டு விலகிவிட்டாலும் அங்கு தான் சென்றிருக்கக்கூடும் என உத்தேசித்து... ஓட ஆரம்பித்தான்.

காமினி அந்த ஆஸ்பித்திரியில் ஏதோ ஒரு வாசல் வழியே நுழைந்து வேகவெகமாய் நடந்தாள். நடுநடுவே கருப்பினபெண் கையில் செருகிவிட்டு சென்ற டைம்ன்ட்ஸ் ஐ பேன்ட் இடுப்பு பாக்கெட்டில் அழுத்திவிட்டது இருக்கிறதா என்பதை தடவி பார்த்துக்கொண்டாள். மறைந்து கொள்ள இடம் தேடினாள். ஆள் நடமாட்டம் இல்லை, நர்ஸ் ஒருவர் நடுவே ஒரு அறையிலிருந்து வெளிப்பட்டார், அவளிடமிருந்து மறைய மற்றோர் அறைக்குள் காமினி நுழைய, பேச்சு சத்தம் கேட்க ஆரம்பித்தது. ஒரு வேளை அந்த நர்ஸ்'சிடம் டாக்டர் யாராவது பேசிக்கொண்டு இருக்கக்கூடும். அறையில் வெளிச்சத்தில் திரும்பி பார்த்தாள். நால்வர் இருக்கும் அறை. நடு நடுவே ஸ்கீரின் போடப்பட்டு இருந்தது. இரண்டு நோயாளிகள் தூங்கிக்கொண்டு இருந்தனர், முதலாமவர் சற்று சீரியசாக இருப்பதாக அவளுக்குப்பட்டது. மூன்றாவது பெட் ஐ விட்டு விட்டு, நாலாவது பெட்டில் ஏறி படுத்து, அங்கு கழட்டி வைக்கப்பட்டு இருந்த மாஸ்க்கை முகத்தில் மாட்டி பக்கத்திலிருந்த மிஷினில் இருந்த வயர்களை எல்லாம் கை, கால்களில் ஒட்டி, கனெக்ஷன் கொடுத்து, கீழிருந்த வெள்ளை போர்வையை எடுத்து, உடை தெரியாமல் போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டாள்.

உள்ளே நுழைந்தவர்கள் பேச்சு சத்தம் முதல் பெட் அருகே கேட்டு க்கொண்டு இருந்தது, டாக்டராகத்தான் இருக்கக்கூடும், டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

அங்கும் இங்கும் ஒடி காமினியை தேடிக்கொண்டு இருந்த சிவாவிற்கு, அவள் குதிக்கும் சத்தம் மெதுவாக கேட்க, சத்தம் கேட்ட திசை நோக்கி பூனை போல் நடந்துவந்தான். காமினியே தான், அவள் அறியாமல் முதுகுப்பக்கமாக வந்து " “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

அவள் சற்றும் அசராமல், "மிஸ்டர். சிவா நீங்களா? இங்க எப்படி?" என்று காமக்கண்களோடு அவன் அருகில் வர நினைக்க, அவன் துப்பாக்கியை நழுவ விடாமல் அவள் கண்களை கவனித்து கொஞ்சம் கொஞ்சமாக கண்களை இறக்கி கழுத்துக்கீழ் பார்க்க எத்தனித்த அதே நோடியில், ஒரே அடியில் துப்பாக்கியை தட்டி விட்டு மீண்டும் ஓடி இருட்டில் மறைந்தாள் காமினி.

சென்னை. ஈசிஆரில் ஒரு ப்ரைவேட் ரிசார்ட்.

ஆதித்யாவர்மா, காமினி, மற்றும் பரந்தாமன் மூவரும் பார்ட்டியில் இருந்தார்கள். ஆடல், பாடல் என பார்ட்டி மிக விமர்சயாய் நடந்துக்கொண்டு இருந்தது. இந்த மூவரின் சிரிப்பு சத்தம் அந்த இடத்தையே கிழித்தது.

"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.