இதை பற்றி எழுத வேண்டும் என்ற நினைத்தவுடன் எனக்கு என்னைப்பற்றிய, என்னை சுற்றியுள்ளவர்கள் பற்றிய சிந்தனையும் ஒரு சேர ஆட்கொண்டன. சுயமரியாதை என்பது கேட்டு வாங்குவதா? இல்லை தானாக கிடைப்பதா? இல்லை நமக்கு இருக்கிறது/இல்லை என்று நாமே நினைத்துக்கொள்வதா? அதன் அளவுகோல் தான் என்ன?

முதலில் சுயமரியாதை என்பது என்ன? மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், சுய மதிப்பீடு தான் சுய மரியாதை. நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்து மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. நம்மை பற்றிய சுய விமர்சனங்கள், சுய அலசல்கள் தான் நமக்கு சுயமரியாதையை சொல்லி தருகிறது. சுயமரியாதை இல்லாத மனிதர்கள் இருப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை ஆனால் அது தான் என்று தெரியாமல் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இதற்குள் தான் ஒருவரின் தன்னம்பிக்கை யும் இருக்கிறது. தன்னை பற்றி நன்கு அறிந்த ஒருவர், இதை நம்மால் செய்ய முடியும், நாம் இதற்கு தகுதியானவர் போன்றவை சுயமரியாதையை குறிக்கும். தனக்கு தகுந்த மரியாதை ஒரு இடத்திலோ, சக மனிதர்களிடமோ கிடைக்காத பட்சத்தில், அதை உணர்ந்தவர்கள், தன் சுயமரியாதை காக்க அவர்களுக்கு தான் யார் என்பதை தன் (நல்ல) செய்கைகள் மூலம் புரிய வைப்பார்கள், அல்லது புறந்தள்ளி, ஒதுங்கி, மற்றவரை காயப்படுத்தாமல், பிரச்சனை செய்யாமல் தன் சுயமரியாதையை காப்பாற்றி கொள்வார்கள். (what ever the decision, it ends with positive result)

பலரை நாம் பார்க்கிறோம், "இதுக்கு எல்லாம் நான் ஒர்த் இல்ல" என்று சொல்லுவார்கள். சுய மதிப்பீடு இருப்பவர்கள் இப்படி சொல்ல வாய்பில்லை, தன்னை சரியாக புரிந்தவர்கள், தன்னால் முடியும் என்று நினைப்பவர்களுக்கு விளையாட்டாக கூட இப்படிப்பட்ட வார்த்தைகள் வராது.

சுயமரியாதை உடைய ஒருவர் அவரை அவர் எந்த அளவு நேசிக்கிறார் என்பதை சுட்டிக்காட்டும். என்னால் முடியும், என்னால் இதை சாதிக்க முடியும் என்ற வைராக்கியம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். தன்னை நேசிக்க தெரியாத மனிதன் மற்றவர்களை நேசித்து என்ன பலன்..?!

அன்பிற்கும் , பாசத்திற்கும் முன் இந்த சுயமரியாதை என்பது தாக்கு பிடிக்குமா? சிவசங்கரி அம்மா தொலைக்காட்சியில் பேட்டி அளித்துக்கொண்டு இருந்தார்கள், அப்போது அவரை ஒரு 70 வயதானவர் தொலைபேசியில் அழைத்தார், "அம்மா எங்களுக்கு ஒரே மகன், அவனுக்கு 15 வருடங்கள் குழந்தை இல்லை, இப்போது தான் பிறந்து இருக்கிறது, எங்களுக்கு அவனுடனே இருந்து அவனையும் குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் இருக்கிறது. அவனை விட்டு பிரிந்து இருக்கும் சூழ்நிலையில் இருக்கிறோம். இது எங்களுக்கு இந்த வயதான காலத்தில் மிகுந்த வேதனை அளிக்கிறது ஆனால் என் மருமகளுக்கு என்னை பிடிக்கவில்லை. என்று முடித்தார்.

நம்மை பிடிக்காத ஒரு இடத்தில், பிடிக்காத ஒருவரிடம், நம்முடைய சுயமரியாதையை இழந்து இருக்க வேண்டுமா? ஒரே மகன் தான், ஆனால் அவனுடைய வாழ்க்கை மனைவியை சார்ந்து உள்ளது, பெற்றவர்களை வைத்துக்கொள்ள அவன் ஆசைப்பட்டாலும் மனைவிக்கு பிடிக்கவில்லை.. மனைவியின் பெற்றோர் அவனுடன் இருக்கின்றனர். இதில் அந்த மகனின் நிலையை விட, அவனின் பெற்றோரின் நிலை மோசம் . இப்படிப்பட்ட குடும்ப சூழலில் பிடிக்காத மருமகளிடம் இருப்பதை விட தனியாக இருந்தால் தானே அவர்களின் சுயமரியாதை காப்பாற்றப்படும்?!

பாசத்தையும் நேசத்தையும் விட... ஒரு மனிதனுக்கு சுயமரியாதை முக்கியமாக பல நேரங்களில் இருந்து விடுவது தான் நடைமுறை வாழ்க்கையில் நடந்து வருகிறது..அதை தாண்டி சுயமரியாதை பார்க்காமல் தன்னை இழந்து மற்றவர்களிடம் வளைந்து கொடுத்து அன்பு செலுத்துபவர் யாருமே அவர்களுக்குள் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள். இது மற்றவர்களுக்காக செய்ய வேண்டிய கடமை யில் ஒன்றாக சேர்ந்துவிடுமே அன்றி தனக்காக வாழ்ந்ததாகிவிடாது.

அணில் குட்டி அனிதா : நான் கடிச்ச அந்த கொய்யாபழம் மேல சத்தியமா.....சொல்றேன்.... எனக்கு எதுவும் பிரியல. .உங்களுக்கு பிரிஞ்சா...கவி ய பிரிச்சி மேஞ்சிட்டு போவீங்களாம்.....

பீட்டர் தாத்ஸ் :
If you want to be respected by others the great thing is to respect yourself. Only by that, only by self-respect will you compel others to respect you

Self-respect is the fruit of discipline; the sense of dignity grows with the ability to say no to oneself.”

Respect your efforts, respect yourself. Self-respect leads to self-discipline. When you have both firmly under your belt, that's real power.”

.