சோனா கஞ்ச் என்ற இடம் இருப்பது தெரியவந்தது, மகாநதி என்ற திரைப்படத்தின் மூலம். என்னை போன்றோர் திரைப்படங்களின் மூலம் ஓரளவு பொது அறிவை இப்படித்தான் வளர்த்துக்கொள்கிறோம் என்று சொல்லவேண்டும். :) மகாநதி வெளிவந்த ஆண்டு 1994. அதில் சோனா கஞ்ச் என்ற விபசாரம் செய்யும் இடத்திற்கு பெண்கள் விற்கப்படுகிறார்கள், கடத்த படுகிறார்கள் என்ற செய்தி தெரிந்தது. பச்சிளம் சிறுமிகள் கூட அந்த படத்தில் காட்டப்படுவார்கள். என்னை மனதளவில் ரொம்பவே பாதித்த ஒரு படமாக அது இருந்தது. ஆனால், சமீபத்தில், அதே சோனா கஞ்ச் இடத்தை பற்றி சன் டிவி யின் 'நிஜம்' நிகழ்ச்சியில் காண நேர்ந்தது..

மனதை பாதிக்கவில்லை, மாறாக அதுவும் ஒரு தொழில் என்றே என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. இதனை ஒரு பார்வையாளராக மட்டுமே முடிவு செய்துக்கொள்ளவில்லை, அதில் பேசிய பெண்கள், அவர்களின் பணம் மற்றும் உடல் தேவைகள் குறித்து பேசியதை கொண்டும், அவர்களின் முகத்தில் எந்த வருத்தமோ, சலனமோ அல்லது கஷ்டமோ இல்லை என்பதை அவர்கள் உடல் மொழி மற்றும் பேச்சின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. அடிப்படை காரணம் வறுமை என்றாலுமே, இந்திய நாட்டை பொறுத்தை வரை வறுமையின் காரணமாக சிறு வயதில் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்வது என்பது, குழந்தைகளில் ஆண், பெண் என்ற பேதமின்றி நடைபெறுகிறது என்றே சொல்லலாம். :(

இந்த சோனா கஞ்ச் இடத்தை பற்றி மேலும் அறிந்துக்கொள்ள, கூகுலில் தேடிய போது, மேற்கு வங்க அரசு, இந்த தொழிலுக்கு சட்ட பூர்வமாக ஒப்புதல் அளித்து உள்ளது. அவர்களுக்கு அரசு சம்பந்தப்பட்ட எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. பாலியல் நோயிலிருந்து காக்க இலவச மருத்துவ வசதி, மருந்துகள், ஆணுறை போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு 65000 மேலான பாலியல் தொழிலாளிகள் இருக்கிறார்கள், இவர்கள் அனைவருமே அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட Durbar Mahila Samanwaya Committe யில்உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கமிட்டி 1995 ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இதில் உறுப்பினர் அல்லாதவர்கள் இந்த தொழிலில் ஈடுபட வாய்ப்பில்லை. உறுப்பினர்கள் அனைவருமே அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரிலே அங்கு இந்த தொழிலை செய்து வருகிறார்கள்.

திருமணம் ஆனவர்கள், கணவரின் அனுமதியோடு, அவருக்கு தெரிந்து, அவரால் அனுப்பப்பட்டும் இந்த தொழிலுக்கு வருகிறார்கள். அவர்கள் பொதுவாக சொல்லும் கருத்து, மற்ற தொழில்கள் போல இதுவும் ஒரு தொழில் தான். படிப்பு இல்லை, வறுமை, குழந்தைகள், குடும்பம் என்று எல்லோரையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை போன்றவை எங்களை இந்த தொழிலில் ஈடுபட வைக்கிறது. "எங்களை பற்றி தவறாக பேசும் யாரும், நாங்கள் வறுமையில் இருக்கும் போதோ, சாப்பாடு இல்லாமல் இருக்கும் போதோ உதவி செய்ய முன்வரவில்லையே. அப்படி இருக்க, எங்களின் வயிற்றுக்கு தேவையானதை எங்களுக்கு தெரிந்த வழியில் சம்பாதித்து கொள்கிறோம், அதைப்பற்றிய மற்றவர்களின் கருத்துக்கள் எங்களுக்கு தேவையே இல்லாத ஒன்று", என்கின்றனர்.

அவ்வபோது இவர்களுக்காக அமைக்கப்பட்ட கமிட்டி, பாலியல் தொழிலாளர்களுக்கு பாலியல் தொற்று நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதை சொல்லிக்கொடுக்கிறார்கள். அது மட்டுமல்லாது 1992 ல் தொடங்கிய ஹெச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு தேவையான அறிவுரையையும், உதவியையும் தொழிலாளிகளுக்கு அளித்து வருகின்றன.

மகாநதியில் காண்பித்தது போன்ற மனதை பாதிக்கும் கொடூரங்கள் (இப்போது) அங்கு இருப்பதாக தெரியவில்லை. அதாவது கட்டாயபடுத்தியோ, ஆட்களை கடத்தியோ, விற்றோ அங்கு தொழில் செய்துவிட முடியாது. அதை அவர்களுக்கான கமிட்டி அனுமதிக்காது. விருப்பத்திற்கு மாறாக வரும் பெண்கள், பாதுக்காப்போடு அவர்கள் இடத்திற்கு அனுப்பி வைக்க படுகிறார்கள். மேலும், ஒன்றிரண்டு முறை தொழிலில் ஈடுபட்டு, பிடிக்கவில்லை என்று திரும்பி செல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டாலும், அவர்களின் விருப்பம் நிறைவேற்ற படுகிறது. எங்கும் போக வழியில்லை, மேற்க்கொண்டு படிக்கவோ, வேறு வேலைக்கு செல்லவோ விரும்பும் பெண்கள் அதனையும் செய்ய அந்த கமிட்டி உதவி செய்கிறது. அதே இடத்தில் தனியாக இருந்துக்கொண்டு பெண்கள் தங்களுக்கு பிடித்தமாதிரி வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளலாம். அதற்காக அவர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கேயே பல வருடங்களாக தொழில் செய்து, வயதாகி உடல் மனம் தளர்ந்தவர்களுக்கும், ஓய்வு ஊதிய வசதி செய்யப்பட்டும், அவர்களும் அங்கேயே தொடர்ந்து தங்குவதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும், இவர்களின் குழந்தைகளும் இதே தொழிக்கு தான் வர வேண்டும் என்று யாரும் கட்டாயம் செய்வதில்லை. அது அவர்களின் சொந்த விருப்பமாக கருதப்பட்டு முழு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது என்பது சந்தோஷமான செய்தியே.

இங்கு, பெண்கள், நிரந்தரமாக ஒரு இடத்தில் (விடுதியை போன்று) தங்கிக்கொண்டு, தொழில் செய்ய மட்டும் அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்கின்றனர். அதற்கான அறை, சம்பந்தப்பட்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேடிக்கொள்ள படுகிறது. அதற்கான வாடகையும் அவர்களே தான் கொடுக்க வேண்டும். அதனால் இந்த அறைகள் வாடகைக்கு விடுபவர்கள் இதையும் தனி வியாபாரமாகவே செய்து வருகின்றனர். புதிதாக வருபவர்களை ஏமாற்றி பணத்தை பிடிங்கிக்கொண்டு அனுப்பும் கும்பளிடமிருந்து, அவர்களை இந்த கமிட்டி ஆட்களே கண்கானித்து காப்பாற்றி, ஏமாந்துவிடாமல் உதவியும் வருகிறார்கள்.

ஆக, சோனாகஞ்ச் பற்றிய தகவலை சேகரித்த போது, பெண்கள் மிக பாதுக்காப்போடும், விருப்பப்பட்டுமே இந்த தொழிலை செய்து வருகிறார்கள் என்று தெரிகிறது. இதிலும் வருத்தப்பட கூடிய விஷயம், 15-16 வயதுடைய சிறுமிகள், வறுமையின் காரணமாக இங்கு தஞ்சம் புகுந்தது மட்டுமல்லாது, குடிக்கு தன்னை அடிமைப்படுத்தி க்கொண்டு இந்த தொழிலை செய்கிறார்கள். அவர்கள் மட்டுமே அல்லாது அங்கிருக்கும் ஏனைய பெண்களும், குடித்தால் மட்டுமே இந்த வேலையை செய்ய முடியும்,அதனால் பழக்கி கொண்டோம், முதலில் ரொம்பவே கஷ்டமாக இருந்தது..ஆனால் இப்போது பழகிவிட்டது என்று சிரித்துக்கொண்டே சொல்கின்றனர். வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் ஆண்குழந்தைகளும் கூட சிறு வயதிலேயே இப்படி கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிவிடுவது வாடிக்கையாக பார்ப்பது என்றாலும். சிறு வயதிலேயே கையில் பணத்தை பார்க்கும் இவர்கள் அதனை தன் ஆசைப்படி செலவு செய்யவும் பழகிவிடுகிறார்கள் என்பது நடைமுறை உண்மை.

இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து இங்கு பெண்கள் வருகின்றனர். குறிப்பாக, ஆந்திராவிலிருந்து பெண்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்தியன் என்பதை தாண்டி சந்தோஷப்பட்ட விஷயம் தமிழ் பெண்களை இதில் குறிப்பிடிவே இல்லை.

சரி , இந்த சோனா கஞ்ச எப்படி உருவானது.? ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்தில், அவர்களின் சிப்பாய்களின் உடல் தேவைக்கு, பெண்கள் அனுப்பப்பட்டு வந்தனர். அது கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து, ஒரு தொழிலாகவே மாற்றப்பட்டது, இதற்கான சரித்திர சான்றுகள் ஒன்றும் இல்லை.. செவி வழி கேட்டு கேட்டு வந்தவை மட்டுமே. இருந்தாலும் மிக பெரிய அளவில் நடக்கும் இந்த தொழில், அவசியமா அவசியம் இல்லையா என்ற கேள்விக்கு முன், பல பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் குடும்பமும் பிழைக்கின்றனர்.

மங்கைஜி - யின் கருத்துக்களை இந்த பதிவிற்காக வரவேற்கிறேன்.

நன்றி :-
http://www.durbar.org
Sun News Channel
http://en.wikipedia.org/wiki/Sonagachi
http://www.youtube.com/watch?v=hUO_RZdM-is

அணில் குட்டி அனிதா : இதனால் தாங்கள் சொல்ல வரும் கருத்து என்னவோ?

பீட்டர் தாத்ஸ் : * If nobody wants to sell sex, it is a crime to force anyone to do so. But when men or women do want to sell their bodies, they should have that full right without encountering punishment or discrimination. If the client behaves decently, the relationship between the sex buyer and the sex seller must be considered a purely private transaction.

* Prostitution will always lead into a moral quagmire in democratic societies with capitalist economies; it invades the terrain of intimate sexual relations yet beckons for regulation. A society's response to prostitution goes to the core of how it chooses between the rights of some persons and the protection of others.

சோனா கஞ்ச் பற்றி தொடர்புடைய பதிவு : நன்றி ஆயில்யன்