எப்போதும் நம்ம மக்கள் இரண்டு பெரும் கட்சிகள் சார்பாக விவாதம் செய்துக்கறாங்க. .அதை படிக்கும் போது, இதை எழுதனும்னு நினைச்சேன்.

திராவிடம் சின்ன வயசில் இருந்து குடும்பத்தில் ஊற்றி வளர்க்கப்பட்டது. அண்ணா, அவருக்கு அடுத்து கலைஞர் இது தான் எங்கள் வீட்டு பெரியவர்களுக்கு தெரிந்தது, அவர்களை பற்றியே பேசுவார்கள். எம்.ஜி.ஆர் ஐ திட்டிக்கொண்டே இருப்பார்கள், அதனால் நாங்களும் எம்.ஜி.ஆர் ஐ ஒரு வில்லனாகவே பார்த்து பழகிவிட்டோம். அதை மாற்ற முடியுமா என்பது வேறு விஷயம், தரம் பிரித்து பார்க்க நம் அறிவு நன்றாக வேலை செய்ய வேண்டும், தேவையான முதிர்ச்சி வேணடும். இது இரண்டும் இல்லைன்னா. .வழி வழியாக நம் மில் ஊட்டப்பட்ட கட்சியும் அதை சார்ந்த கொள்கைகளும் மட்டுமே தெரியும், தனிமனித துதிபாடல், அவர்களுக்கு பூஜை, புனஸ்காரம் செய்ய தோன்றும்.



நம்பியாரை விடவும் எம்.ஜி.ஆர் வில்லனாக பல வருடங்களாக தெரிந்தார். ஆனால் இப்போது அப்படி இல்லை, அதை விட்டு வெளி வந்தாகிவிட்டது. அதற்காக இது அரசியல் சார்ந்தது என்ற எண்ண வேண்டாம், இல்லை. எந்த கட்சியையும் சாராமல் நடுநிலையாக சிந்திக்க முடிகிறது.

மேலும் இப்படி ப்பட்ட குடும்பத்திலும் என் ஆயா காங்கரஸ் க்கு ஓட்டு போட்டு வந்து தாத்தாவிடம் அப்பாவிடமும் தைரியமாக சொன்னது அப்போது எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் இப்போது பிடிக்கிறது. அந்த காலக்கட்டதிலும் அவங்க அவங்களாகவே இருந்தார்கள் :)

ஆனால் என் அண்ணன்கள் இன்னமும் திமுக வின் துதி பாடுபவர்களாவே தான் இருக்கிறார்கள், ஆழமாக ஊட்டப்பட்டது, அவர்களை வெளியே விடாதோ... இல்லை ஏதோ ஒன்றை சார்ந்து இருக்கனும், அதற்கு நம் வழிவழியாக வந்ததே பரவாயில்லை என்று நினைக்கிறார்களோ என்னவோ.

தெரியல...

அணில் குட்டி அனிதா : எதை தான் முழுசா எனக்கு தெரியும்னு உங்க வாழ்க்கையில சொல்லி இருக்கீங்க.. ?! எதுவும் தெரியாது ஆனா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பில்டப்... இப்படி ஒரு பொழப்பு உங்களுக்கு தேவையா அம்மணி.. ?!! துப்பனும்னு தோணுது. .அதை படிக்க வரவங்க செய்வாங்கன்னு நம்பி கிளம்பறேன்...

பீட்டர் தாத்ஸ் : Every form of addiction is bad, no matter whether the narcotic be alcohol or morphine or idealism.”