மெது மெதுவாய்
செதுக்கி
சிற்பமாக்கினாய்

நெளிவு சுளிவுகளுடன்
அற்புதமாய்
உன் கைகளில்
அழகாய்
இருக்கிறேன்..

ஆனால்
நீயாக இருக்கிறேனே
நான் எங்கே....????

****

இடித்தாய்
குழைத்தாய்
குத்தினாய்
மிதித்தாய்
இழைத்தாய்
உருட்டினாய்
மிரட்டினாய்
சுத்தினாய்
வெட்டினாய்
உலர்த்தினாய்



ஏதேதோ
செய்கிறாயே

அத்தனையும் புதிது
எத்தனை அழகு...

அட....
இதிலும்
நீயாகவே இருக்கிறேனே......

நான் எங்கே..?

என்னை இழந்து
உன்னை பெறுகிறேனா..??
இல்லை
என்னுள் உன்னை
நீ தேடுகிறாயா?

அணில் குட்டி அனிதா : அம்மணி.. ஏன் எப்பவும் உங்களை நீங்க தேடிக்கிட்டே இருக்கீங்க? பேசாம போலிஸ் ல கம்ப்ளைட்டு கொடுங்க. .அவங்களுக்கு எப்படி உண்மைய உங்கக்கிட்ட இருந்து வரவெக்கனும்னு தெரியும்.....

பீட்டர் தாத்ஸ் : “If a householder moulds himself according to the circumstances just like nature moulds Herself according to seasons and performs his Karma then only shall he acquire happiness. One who does this successfully gains in all walks of life.”