இன்று....

நான் ஆதவன்:

நட்பு....பக்கம் பக்கமாக எழுத வேண்டியதை பத்து வரிக்குள் அடக்குவது கடினமாகத்தான் இருக்கிறது. குழந்தை பருவத்தில் விளையாடும் பொம்மையில் கூட தன் விருப்பத்தை பெறமுடியாத நிலையில், சுயம் எடுக்க முடிகின்ற ஒரே பெருமையான விசயம் நட்பு. பருவத்தின் பல அறைகளை கடந்தாலும் கசிந்தூறும் மழை நீராய் நம்மையும் அறியாமல் படர்ந்து அந்தம் வரை தொடர்கிறது நட்பு. காதலின் வலியை, பெ(உ)ற்றோரின் இழப்பை, பொருளாதார இயலாமையை, தாழ்வு மனப்பான்மையை என அனைத்து பிணி தீர்க்கும் அற்புத மருந்து அது.

வெளிநாட்டு வாழ்க்கைக்கு வந்த பின், தனிமையை உணர்ந்த ஒரு நாள் பதிவுலகத்திற்கு வந்த போது கிடைத்த நட்புகளை, பொம்மை கடைக்குள் புகுந்த குழந்தை போல சந்தோஷத்தோடு வாரிச் சுருட்டி அணைத்துக்கொண்டேன். அதில் மேலும் இறுக்க அணைத்து கொண்ட நட்புகள், தோளில் சாய்ந்த நட்புகள், அணைப்பிலிருந்து வெடுக்கென விலகிய நட்புகள் என என் சின்ன உலகத்தை சுவாரஸியமாக்கி வருகிறது. இது போன்று நட்பிற்கென சில நாட்களை மட்டும் விழாக்களாக கொண்டாடுவதில் உடன்பாடில்லை என்றாலும் நண்பர்களைப் பற்றி இது போல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தமையால் மகிழ்வாக உணர்கிறேன்.

கயல்விழி முத்துலட்சுமி

நட்பு கற்றுக்கொள்ள பலகாலம் பிடித்தது. தயங்கி நிற்கும் என்னை தானாக வந்து சேர்ந்த தோழிகள். இமைபோல தோழிகள் இருந்த காலம் ஒன்று. அது பள்ளிக்காலம்.

பின் ஒருகாலம் நானாக வலியத்தேடியடைந்த நட்புகள். தெரியாதவர்கள் இல்லை அறியாதவர்கள் இல்லை என அலைகளைப்போல ஓயாமல் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் கூட்டமாய் ஒன்றாய் மனம் கலந்த தோழிகள் என கல்லூரிக்காலம் ஒன்று. என்ன கொடுத்து என்ன பெற்றோம் தெரியாது.

சிதறிய முத்துக்களாய் எங்கோ பதிந்து வைக்கப்பட்டவர்களாய் தொலைந்து போன நட்புக்களை எண்ணி ஏங்கியபடி இன்று. நீண்ட கரங்களில் எல்லாம் நட்புரிமை குலுக்கி..இழந்தவர்களை கண்டடைய ஒருமுயற்சி. நட்பில் கரைந்து போவது அப்போதும் இப்போதும் எப்போதும் ஒன்று போலவே தான். பத்தாவதில் பிரிந்து பன்னிரண்டில் இணைந்த சுதாவைத்தேடுகிறேன். செம்பருத்தி அணிந்த தேவதை சீதளாவைத் தேடுகிறேன். கலகலவென்று சிரிப்புடன் உள்நுழையும் அருளை தேடுகிறேன்....

இழந்த நட்புகளை சொர்க்கத்தில் சந்திக்கலாம். தொலைந்த விலகிய நட்புக்களை
எண்ணியபடி நாட்கள் . அவர்களை கொண்டுவந்து சேர்க்கும் நட்புதினம் என்று
வரும்? ........

தெக்கிக்காட்டான்


பால்ய காலத்து நட்புகள் கள்ளமில்லாதது என்றாலும், காலத்தோடு வளரும் பொழுது அவைகளிலும் பிணக்கு காண்பது தவிர்க்க முடியாததாகிப் போகும். அப்படியே வளர்த்(ந்)து வந்தாலும், சில பல சாக்கு போக்குகளைக் கொண்டே பூசி வளர்ந்து வர வேண்டுமாய் இருக்கும். இருப்பினும், புரிதலற்ற திருமண வாழ்க்கையில் நாங்கள் 30ஆவது வருடத்தில் காலெடுத்து வைக்கிறோம் என்று கூறிக் கொள்வதில்லையா அது போல கூறிக் கொள்ளவாவது அந்த நட்புகள் தேவைப்படலாம்.

பால்யம் தாண்டிய நட்பு உலக நடத்தையுடனாக மிக எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. என்னய பொருத்த மட்டிலும் நட்புகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. மனதுக்கு நெருக்கமானதும், உண்மையானதுமாக!! நம்மையேதான் எதிர்த்தரப்பிலும் பார்ப்போம், ஏனெனில் எப்பொழுதும் நமக்கும், நண்பர்களுக்குமான மூன்றடி இடைவெளியில் ஒரு கண்ணாடியை தூக்கியே அலைகிறோமென்பதால்.
நட்பு என்னைப் பொறுத்தவரை என்னை மையமாக வைத்து 3 வட்டத்துக்குள் வரும். முதல் வட்டம் மனதிற்கு நெருங்கிய நட்பு, பேசினாலும் பேசாவிட்டாலும் என்றும் தொடரும். அந்த நட்புக்கு பெற்றவர்களைவிட முக்கியத்துவம் அதிகம். இரண்டாவது நமது விருப்பு வெறுப்புகள் ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும் நட்பு. சில சின்ன சண்டைகளும், சந்தோசங்களுமாக தொடரும். மூன்றாவது நம் சிரிப்பை மட்டும் பகிரும் நட்பு, நம்மில் அதிகம் இந்த வகைதான் இருப்போம். எதுவானாலும் எல்லா நேரத்திலும் எதோ ஒரு வகையில் நட்பு சங்கிலி தேவை, இல்லன காலில் சங்கிலி கட்டும் நிலைக்கு வந்துடுவோம்.

*************

அன்று.. (04-August-2006)

தேவ்:-

Friendship is something which nurtures no expectations...It allows you to be yourself... Its the most comfortable feeling mankind has been ever blessed with. Friends are reflections of oneself...Friendship is nothing but just taking a look at yourself in a mirror

தேவ் பதிவிலிருந்து எடுத்த அவரின் சில வரிகள்:-
மேடைப்போட்டு அறிவிக்கத் தேவையில்லை கடமையென்னும் கயிற்றில் கட்டிவைக்க அவசியம் இல்லை இதயத்தின் ஒரு ஒரம் போதும் நினைத்தவுடன் பூப்பதற்குஅதற்கு நட்பு என்று பெயர்..

கார்த்திக்ஜெயந்த்:-

"A friend is a beautiful gift you give your self"
It is by chance we met, by choice we became friends... Friendship is a strange thing....we find ourselves telling each other the deepest details of our lives....But what is a friend? A confidant? A lover? A fellow email junkie? A shoulder to cry on? an ear to listen? a heart to feel?... A friend is all these things...and more. No matter where we met, I call you friend. A word so small...yet so large in feeling...a word filled with deep emotion.

சந்தோஷ்
:-

விதை இல்லை
செடி இல்லை
காய் இல்லை
பழம் இல்லை
ஆனாலும்
பூக்குது இந்தப்பூ!

அட அதுதாங்க
நட்பு

செந்தழல் ரவி
:-

எனக்கு நிறைய நண்பர்கள்..எங்க வீட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்..காரணம் எங்க வீட்டில் இருக்கும் எங்க அண்ணாவைத்தேடி யாரும் வரமாட்டாங்க..ஆனால் எனக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்தெல்லாம் நண்பர்கள் வருவாங்க...லெட்டர் போடுவாங்க..போன் செய்வாங்க...
ஒருமுறை - என் 10 வயதில் நானும் என் அண்ணாவும் விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்திட்டோம்..அப்போது குடும்பம் நெய்வேலியில் இருந்தது.. என்னுடைய குட்டி குட்டி பிரண்ட்ஸ் வந்து என்னை தேடி இருக்காங்க...என் அம்மா சொல்லி இருக்கார் - அதாவது அவங்க ஊருக்கு போயிட்டாங்க - காசு இல்லையாம் திரும்ப என்று..எவ்வளவு ஆகும் என்று அவங்க கேட்க - 100 ரூபாய் என்று சொல்லி வைத்திருக்காங்க... என் நன்பர்கள் - ஆளுக்கு ஒரு ஒரு ரூபாயாக சேர்த்து - ஒரு வாரத்தில் 100 ரூபாய் சேர்த்து - என் அம்மாவிடம் கொடுத்திருக்காங்க... அம்மாவுக்கோ - ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த சின்னதுக்கு மட்டும் எவ்வளவு பிரண்டுக என்று.. பிறகு வீட்டைவிட்டு வெகு தொலைவில் - வருடத்துக்கு ஒருமுறை முழு ஆண்டு விடுமுறைக்கு மட்டுமே - வீட்டிற்க்கு வரும் நிலை ஆனது - காரணம் நான் சேர்ந்த புனித வளனார் உள்விடுதி (boarding). அங்கு நேரத்துக்கு படிப்பு - நேரத்துக்கு சாப்பாடு - நேரத்துக்கு - தூக்கம் என்று ஆனபோது - கை கொடுத்தது வேறு யார் - நன்பர்கள் தான்.. எல்லாரும் வீட்டை பிரிந்து சோகத்தில் இருந்தபோது - சேர்ந்து விளையாடி - சேர்ந்து வார்டனிடம் அடிவாங்கி - சேர்ந்து அழுது - இணை பிரியாதவர்களாகிப்போனோம்.. பிற்ப்பாடு கல்லூரியில் - திருச்சியில் - புத்தனாம்பட்டி கல்லூரியில் சேர்ந்தபோது - எந்த விதமான பொழுதுபோக்கும் இல்லாத சின்ன கிராமத்தில் - நன்பர்களை தவிர வேறெதுவும் அறியாதவர்களானோம்...என்ன சாதி - என்ன மதம் - அறியோம் ஆனால் - மனம் ஒத்த அந்த நட்பு... வார்த்தைகளால் விவரிக்கயியலாதுங்க..சேர்ந்து சினிமாவுக்கு போய் - சேர்ந்து தம் அடித்து - சேர்ந்து தண்ணியடித்து என இங்கோ வேறு விதமான இணைகள் பிறகு வேலை தேடும் படலத்தில் - ரங்கனாதன் தெருவில் - எட்டுக்கு எட்டு அறையில் - சரியாக எட்டு பேர் வசித்தபோது - ஆந்திரா மெஸ்ஸில் - இரண்டு சாப்பாடு வாங்கி - ஆறுபேர் கிர்ந்துண்டபோது -இந்த நட்பு ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது.. பிறகு அவர் அவர் ஒர் வேலையில் செட்டில் ஆனபிறகு - இமெயில் - போன் - சாட், வார இறுதிகளில் மீட், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொஞ்சம் ஜாலி என்று இது ஒரு பரிமாணம்... ஆனால்.. எனக்கு அவன் இருக்காண்டா...என் நன்பன் இருக்காண்டா...நான் எப்போ போனாலும் - என்னிடம் காசு இருந்தாலும் இல்லைன்னாலும் என்னை வெச்சு சோறு போடுவாண்டா என்று ஒரு எண்ணம் வருது பாருங்க...அது ஒரு விதமான தன்னிறைவுங்க.... பொருளாதாரத்துல இல்லை.. மன நிறைவாதாரத்துல...

பிரியன்
:-

பாய்மரக்கப்பல் வாழ்க்கையில் நம்மை அன்பால் செலுத்தும் துடுப்பு தாய் , சரியான திசையினில் செலுத்துவது தந்தை உறவு.நம்மை தாங்கி நிற்கும் மரம் இறைவன்.இவர்கள் கூட கைவிட்டுவிடும் ஒரு நிலையில் , கடலில் தத்தளிக்கும் நிலையில் கையில் கிடைக்குமே ஒரு மரக்கட்டை அது நட்பு.
பெண் நட்பை பொறுத்தவரை: எந்த நண்பி கடைசி வரை காதலியாகாமல் இருக்கிறாளோ அவள் நண்பி. என் வீட்டில் ஒரு புத்தம் புது பூ பூக்கிறது! வந்து நீயே பறித்துக் கொண்டால் நீ நண்பி! பறித்து நான் தரும் வரை காத்திருந்தால் நீ காதலி!