பேசாத
பல மொழிகள்
பேசுகிறது...

கிடைக்காத
பல சுகம்
கிடைக்கிறது..

பார்க்காத
பொழுதுகளும்
பார்த்தவை
ஆகிறது...

புரியாத
பல
வார்த்தைகள்
புரிகிறது...


பேசுகின்ற
மொழி
மட்டுமே
மொழியாகுமா ?!!

உன்
பேசாத
மொழியும்
என்
இதயம்
பேசுகிறதே...

***************************************
அணில் குட்டி அனிதா : அம்மணி கவிதை எழுதிய ச்சிசூவேச்சன்.. னை எல்லாரும் கேளுங்க...... டிவி ல லைவ் ஷோ... டான்ஸ் கூத்து ஒரு பக்கம், ஆன்லைன் ல வெப்சைட் கிரியேட் செய்து கொடுத்த மகராசன் க்கிட்ட வெப்சைட் பத்தி டிஷ்ஷூம்ஸ் அண்ட் டிசைன், ஃபான்ட் கலர் மாத்த சொல்லி சண்டை ...., ஆதவன் சினிமா புள்ள டவுன்லோடு செய்து வச்சி இருக்கு, அத பாக்கனும்னு அடம் பிடிச்சி ஒரு பக்கம் வாட்சிங்.. இதுக்கு நடுவில்.... "இதயத்தின் மொழி".... .. எகொச..!! இது !!

பின்குறிப்பு : வெப்சைட் செய்து கொடுத்த மகராசன் கவிதை எழுதும் போது விட்ட சாபம் " உன் கவிதை நாசமாபோக.. அது கேவலமாத்தான் வரும்.. !! "

பீட்டர் தாத்ஸ் : It is a mistake to look too far ahead. Only one link in the chain of destiny can be handled at a time.”

.