பப்பு : போதும்..

கவி : என்ன போதும்...

பப்பு : எல்லாமே போதும்..

கவி: என்ன எல்லாமே போதும்..

பப்பு: ப்ப்ப்போதூஊஊஊம் !! (கோவமாக)

கவி: என்ன போதும்.. ஓ சிப்ஸ் சாப்பிடறேனே அது போதுமா?

பப்பு: ஆமா..!! (செம கடுப்பாக)

கவி: அப்ப நான் வீட்டுக்கு போறேன்.. (நானும் செம கடுப்பாக)

பப்பு: (இது வரை பேசியது எதுவுமே குரல் மட்டும் தான் வந்தது என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, விளையாடிக்கொண்டு இருந்தாள், இப்போது வேகமாக என்னை பார்த்து..) ஏன்ன்ன்ன்?

கவி: நீந்தான் எல்லாமே போதும் னு சொன்னியே. .அதான் வீட்டுக்கு போறேன்.

பப்பு : வேணாம் வேணாம். .நீ சாப்பிட்டுக்கோ .... நாம விளையாடலாம்...

கவி: ம்ம்ம்..அப்ப சரி நான் எல்லாத்தையும் சாப்பிட்டுக்கவா?

பப்பு: (கொஞ்சம் யோசனை, பின் இரண்டு கையையும் குவித்து காட்டி) இவ்வளவு ஆச்சிக்கு வச்சிட்டு மிச்சம் எல்லாம் சாப்புடு..

ஆச்சி : ஹி ஹி ஹி ஹி.. (ஒரே சந்தோஷமாம்ம்ம்ம்!! )

************************


பப்பு : நீ வரத்துக்கு முன்ன அந்த புலி உன்னை கடிச்சிருச்சி...

















கவி: டேய், நான் வராதப்ப புலி என்னை எப்படி கடிக்கும்?

பப்பு: ஆமா கடிச்சிச்சீஈஈஈஈஈஈ..!! (I shd agree with her...it seems..)

கவி : ஆமா..நான் இருந்தாலும் இல்லாட்டியும் புலி எப்பவுமே என்னை கடிச்சிக் கொதறிக்கிட்டே இருக்கு.. !! :(((((

பப்பு : :)))))))))))))))))

அணில் குட்டி அனிதா : ம்ம்.. நல்ல வேளை, இரண்டு பேரும் சேர்ந்து கேரட் காயகொழம்பு வச்சாங்க அத சொல்லலியே.. ஆயா கேட்டுட்டு, இவிங்க இரண்டு பேரையும் டிவி க்கு சமையல் செய்யற ப்ரோக்ராம் கு அனுப்பலாம் னு சொல்லி... .................ஹி ஹி.. :))))))) உங்களுக்கு இதுக்கு மேல புரிஞ்சிடும்..

பீட்டர் தாத்ஸ் :The world is as many times new as there are children in our lives.