(துபாய்) ராஜா வின் இந்த கவிதையை படித்தவுடன் என்னவோ எதிர்கவிதை எழுதவேண்டும் என்று தோன்றியது.

மண்டப்பத்தில் யாரும் எழுதி கொடுக்காட்டியும், எப்போதும் எழுதும் கவிதை போல் இது இல்லாததால்,

"இது நானே தான் எழுதினேன் ஆனால் இது நான் இல்லை " ன்னு சத்தம் போட்டு கத்தனும் போல இருக்கு... :((((

(துபாய்) ராஜா..... இனிமே இப்படி எல்லாம் கவிதை எழுதுவதை நிறுத்திடுவார் என்ற நம்பிக்கையில்........ ....



அடர்மழை நாளொன்றில்
குளிரோடும்
சிறுது சிலிர்போடும்
ஒரு பயணம்

மழை நீர் துளிகள்
போல் துள்ளும்
என் உள்ளத்தில் உன்முகம்
கண்டு மகிழ்கிறேன்

இருட்டும் மழைமேகம்
போல இடையறாது
உன்னையே துறத்தும்
என் நினைவுகள்

கார்மேகம் கலைந்தாலும்
நான் கண்ட
கனவுகள் கலையாது....

அடாது பெய்யும்
மழைபோல் விடாது
தொடரும் உன்
நினைவுகள்....

மழைநீர் வடிந்தாலும்
உன் நினைவுகள்
வடியாது...

வெள்ளநீர்
விலகினாலும்
உன்னை விலகாது
என் நினைவுகள்...

அணில் குட்டி அனிதா : .........அய்யய்யோஒ.ஓஓ.. என்னால முடியலயேஏஏஏஏஏஏஏஏ!! ... கவி..ய யாராச்ச்சும் மிரட்டி .. அதட்டி... ஏதாச்சும் செய்து எழுதவிடாம செய்ங்களேன்... ... :(((((

பீட்டர் தாத்ஸ் :- None but blockheads copy each other.