பதிவெழுத வந்த கதையை எழுத சொல்லி.. தம்பி கோபிநாத் அழைத்து இருக்கிறார். பெரிய கதை ஒன்றும் இல்லை. எப்போதும் எல்லாவற்றிலும் வேகம் போலவே இதுவும் நடந்தது.

எனக்கு ப்ளாக் என்ற ஒன்று இருப்பது தெரிந்ததே என்னுடைய ஆன்(ண்)லைன் நண்பரால், அவர் அப்போது (2006) அமெரிக்காவில் இருந்தார், இப்போது இங்கத்தான் இருக்கிறார். (ரொம்ப முக்கியம் மா? ன்னு கேப்பாரு.. அதை எல்லாம் நாம கண்டுக்கக்கூடாது, சொல்லனும்னு நினைக்கறதை சொல்லிடனும் :) ) என்னைப்பற்றி தெரியாமல், தெரியாத்தனமாக அவருடைய ப்ளாக் யூஆர்எல் எனக்கு அனுப்பி வைத்து இருந்தார், இது அவரைப்பற்றி நான் தெரிந்துக்கொள்ள.

அவரை பற்றி தெரிந்துக்கொண்டேனோ இல்லையோ.......கொஞ்ச நாளில் நாமும் ஏன் இப்படி எழுதி தள்ளக்கூடாது என்று முடிவு செய்து நானே ப்ளாக் எல்லாம் கிரியேட் செய்துவிட்டு, அவரிடம் எனக்கு கூட எழுத ஆசை என்றேன். அவரும், "நீங்களும் எழுதுங்க, ஒரு ப்ளாக் கிரியேட் செய்துக்கோங்க" ன்னு சொன்னார், சொல்லி முடிக்கும் முன், "கிரியேட் செய்துட்டேனே.. இன்ட்ரோ க்கு உங்க பேரை போட பர்மிஷன் வேணும் னு" கேட்டேன். நிச்சயமாக நான் ப்ளாக் கிரியேட் செய்திருப்பேன் என்று அவர் எதிர் பார்த்திருக்கவில்லை தான். ஆனாலும், "என் பெயரை போடவேண்டாம்" என்று கண்டிஷன் போடவே.. அவருடைய பெயரை குறிப்பிடாமல் எழுதத்தொடங்கினேன்.

இன்னமும், இந்த பதிவு எழுதும் வரையிலும் எனக்கு பர்மிஷன் கிடைக்கவில்லை :(, அதே கண்டிஷனில் தான் வண்டி ஓடி க்கொண்டு இருக்கிறது. இப்பவும் அவரு யார் ன்னு சொல்ல முடியல, சொன்னால் எனக்கு இருக்கும் ஆபத்தை விடவும் அவருக்கு ஆபத்து அதிகம். அவருக்கு ஆபத்து அதிகமானால் அது அப்படியே இந்த பக்கம் திரும்பும் அபாயம் இருப்பதால்.. போனாபோகிறது என்று அவரை யாருன்னு தெரியாமையே விட்டுடுவோம். இதையும் தாண்டி யாருக்காவது கண்டுபிடுக்கனும் னு நினைத்தால், கண்டுபிடிங்க.. ஆட்டோ அனுப்புங்க.. ஹி ஹி..எனக்கு இல்ல அவருக்கு.. :))

முதன் முதலாக .. எங்கிருந்தோ சொய்ய்ய்யினூ நடுவில் வந்து குதித்தார் நம்ம பாலா (பாரதி), என்னுடைய பளாக் டெம்லேட் சரி செய்தது, அழகாக்கி கொடுத்தது, தமிழ்மணத்தில் என்னை சேர்த்துவிட்டது, தமிழில் திருத்தங்கள் என்று ஏகப்பட்ட உதவி செய்து இருக்கிறார். அப்பவெல்லாம் இதை அவர் முழு நேர வேலையாக வைத்திருந்தார் என்றே நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல, நிறைய புது வரவுகளுக்கு உதவியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். ரொம்பவே நல்லவர்.

சுவாரசியமான விபரம் வேற என்ன இருக்கு பதிவெழுதவந்துன்னு பார்த்தால், ம்ம்ம்ம்.. பிரச்சனைகள் நிறையவே பார்த்துவிட்டேன். பொதுவாக என்னை நேரில் பார்த்து பேசி பழகும் நண்பர்களிடம் சந்தித்திராத புதுவிதமான ஒரு பிரச்சனையை ப்ளாகர் நண்பர்களிடம் சந்தித்தேன்.

அதற்கு காரணம் என் எழுத்தின் தாக்கம், அதனால் மட்டுமே நான் வேறு விதமாக இங்கே பார்க்கப்படுகிறேன் என்பதை சமீபத்தில் மிக தெளிவாக நண்பர் ஒருவரால் புரிந்துக்கொண்டேன். இப்படி எல்லாம் பேசுவார்கள், என்னைப்பற்றிய அப்படி ஒரு எண்ணம் அவர்களிடம் இருக்கிறது என்பதை கூட என் எழுத்து எனக்கு காட்டிக்கொடுத்து இருக்கிறது எனலாம். அது அவர்கள் தவறு அல்ல என் எழுத்தின் தவறு.

நானும் என் எண்ணங்களும் மட்டுமே எழுத்தாகிறோம் என்றால் ஏன் ப்ளாகர் அல்லாத நண்பர்களிடம் எந்த பிரச்சனையும் இதுவரையில் நான் சந்தித்தது இல்லை என்று கேட்டுக்கொள்கிறேன். சண்டைக்கோழி என்ற பெயர் வைத்திருப்பதாகவும் கேள்விபட்டேன் :). வைத்தவர்களுக்கு நன்றி. என் செல்லப்பெயர்கள் லிஸ்ட் டில் (ம்ம்ம்..லிஸ்ட் போடும் அளவிற்கு எனக்கு செல்ல பெயர்கள் உண்டு) இதையும் சேர்த்துவிட்டேன்.

பல நேரங்களில் எழுதவே பிடிக்காத வெறுமையை கூட ஏற்படுத்தி இருக்கிறது, 3 முறை வெளியில் சென்று திரும்ப வந்து இருக்கிறேன். எல்லாம் தனிநபர் (கவிதா என்ற தனிநபர்) சம்பந்தப்பட்டது என்று வைத்துக்கொள்ளலாம். வேறு யாரையும் குற்றம் சொல்வதற்கு முன், என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி ஏன் நீ எழுதவந்தாய்? கேட்டுக்கொண்டு நானே அதற்கு விடையும் சொல்லிக்கொண்டு, திரும்பவும் இது போல் என்னால் முடிந்த அளவு எழுதி தள்ளிக்கொண்டு தான் இருக்கிறேன்.. .என் அறிவுக்கும், மனதுக்கும் முடிவு இது தான் என்று தெரிந்திருந்தும் முடிவுகள் இல்லாது தொடருகிறது....

நிற்க, எல்லாவற்றையும் மறக்கசெய்யும் பல நல்ல விஷயங்களும் நடந்திருக்கிறது. எப்போது உதவி என்று கேட்டாலும் எப்படியும் யாராவது செய்துவிடுவார்கள், முகம் தெரியாதவர்களுக்காக கேட்ட போதும் என்னை நம்பி நம் மக்கள் உதவியிருக்கிறார்கள். அதை எப்போதும் மறப்பதற்கு இல்லை. மறந்துவிட்டால் நான் மனுஷியும் இல்லை.

தவிர்த்து, எனக்காக கேட்ட போதும், (அ) ஏதோ ஒரு விதத்தில் ப்ளாக் சம்பந்தமாக உதவி செய்து கொடுத்த நல்லவர்கள் இருக்கிறார்கள். முதலில் *பாலா(பாரதி), பொன்ஸ், சிவகுமார்ஜி, சிந்தாநதி, சீனு, (நாகை)சிவா, ஜொள்ஸ், கொத்ஸ், கைப்ஸ், தேவ், சந்தோஷ், ஹே ராம், ஜியா,அருள், உஷா, மைஃபிரண்டு, முல்ஸ், காயத்'திரி, ஜம்ஸ், ரவி, லக்கி, துர்கா, சிபி, ரங்கன், கோபி, சென்ஷி, கல்வெட்டு, புருனோ,மங்கை,டுபுக்கு, முத்து,செல்லா, தெகா, ஆயில்யன், வெயிலான், மதுரா(தமிழச்சி), சிங்கு & கடைசியாக ராஜா.* ப்ளாக் விஷயமாக அதிகமாக நான் உயிரை வாங்கியது சீனு தான். :). He is an intellectual, weird & highly stupid guy.

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு


என்று வள்ளுவர் சொன்னதை நினைவில் எப்போதும் நிறுத்தி, யார் எந்த உதவி செய்திருந்தாலும் அதை எளிதில் மறக்காமல் இருக்க என்னை தயார் படுத்தி இருக்கிறேன். இப்பவும் இனியும் அப்படியே இருக்க எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொண்டும், உதவிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லாவற்றிக்கும் அப்பார்ப்பட்டு, என்ன கொடுமையை நான் எழுதினாலும் அதை படிக்க வரும் மக்கள் தான் நிஜமான நல்லவர்கள், பொறுமை சாலிகள் அதிலும் பாராட்டி விட்டு வேறு செல்வார்கள். :) அப்படி செய்யும் போது எல்ல்லாம்.. எவ்வளவு நல்லவங்களா இருக்காங்கப்பா என்று நினைப்பதுண்டு.

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... !!! ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. !! அம்மணி மாதிரி நானும் இன்னைக்கு மூட் அவுட் ல இருக்கேன்.. சோ அப்புறம் வச்சிக்கலாம் கச்சேரிய..... !!

பீட்டர் தாத்ஸ் :“Memories are the treasures that we keep locked deep within the storehouse of our souls, to keep our hearts warm when we are lonely.”

* யாருடைய பெயரையாவது விட்டு இருந்தால், தயவு செய்து தவறாக எடுக்க வேண்டாம் , என்னவோ இந்த பதிவு எழுதும் போது நினைவுகள் ஒன்றும் சரியாக இல்லை, அதனால... மன்னிச்சி விட்டுடுங்க.ப்பா....