மெளனம்

உன்
பெயரே
தலைப்பானால்...


சிகிரெட்

என்
முகத்தை
எட்டு கோணலாக்கும்
எளிய
சாதனம் !!

உழைப்பு

வியர்வையும்
மணக்கும்..!!

அழுகை

அழுகையும்
சுகம்
உன் மார்பில்
முகம் புதைக்கும் போது ..........

பட்டம்


சுதந்திரமாக
பறக்கிறாய் தான் !!
எப்போதும்
உன்
சுதந்திரம்
யாரோ ஒருவரின் கையில்.........

கீ போர்டு

உனையன்றி
யாரறிவார்
எனை :)

காதல்

முட்டாள்களின் மூச்சு !
அறிவாளிகளின் யதார்த்தம் !
அனைவரும் கடந்து போகும் பாதை !
கானல் நீர் !
கிடைத்துவிட்டால் பைத்தியம் !
கவிதைகள் என்ற கிறுக்கல்கள் !
கல்யாணத்திற்கு பிறகு காணாமல் போகும் !!

திருமணம்

வாழ்க்கையை
போல
ஒருமுறை வருவது....

கடவுள்

நம்முள்
அன்பிருப்பதால்
நாமும் கடவுள் !!


நட்பு

என்
உயிரை குடிக்கும்
மருந்து!!


சொந்தம்

தனி மரம்
தோப்பாகாது ...!!
பழமொழிக்காக
தேவை...!!

சுதந்திரம்

தேவைக்கு
தேவை
எப்போதும்
தேவையில்லை


அழகு

உன்
நினைவுகளில்
எப்போதும்
நான்
அழகு !! :)

பூக்கள்

கவிதா'க்கள் !!
பூக்களை பறிக்காதீர்கள்!!

கனவு

துரத்த துரத்த
ஓடுவேன்

ஓடி ஓடி
கலைப்பேன்

உயரத்திலிருந்து
பாதாலத்திற்கு
குதிப்பேன்

தண்ணீரில்
மூழ்கி
மூச்சி முட்டி
தவிப்பேன்...

கனவு
பயம்..

இதுவும் காதலாம்......

நல்வாழ்த்துக்குள்
பல சொல்லி
நலம் வாழ

வாழ்த்த இயலாத
வயிற்றெரிச்சலை
வார்த்தைகளால் வாரி
இறைத்து ........

தன் நலம்
மட்டுமே
கண்ட/ கொண்ட
சுயநல பிதற்றல்களோடு....

புனித பிம்பங்களாக
காட்டிக்கொள்ளும்
சிலருக்கு
அது தான்-
"காதல்" என்ற "கருமாந்திரமோ?????