பொதுவாக யாராவது அழுதாலோ, அடம் பிடித்தாலோ நமக்கு பார்க்க பரிதாபமாக இருக்கும். ஆனால் என் விஷயத்தில் எதிராளி டெர்ரராக மாறி ஒன்று என்னை தூக்கி போட்டு மிதிப்பார்கள் இல்லையென்றால் காமெடி பீஸ் ன்னு தூரமா இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு சிரித்துவிட்டு போயிக்கிட்டே இருப்பார்கள். இந்த இரண்டு ரிசல்ட் 'ஐ எதிராளியிடம் இருந்து வரவைப்பது அப்படி ஒன்றும் லேசுப்பட்ட காரியம் இல்லை என்பதை நீங்கள் எல்லாம் இந்த பதிவை படித்து முடிக்கும் போது புரிந்துக்கொள்வீர்கள்.

அடம் பிடிப்பதற்கென்று சில அடிப்படை தகுதிகள் இருக்கு, அது எல்லாருக்கும் இருப்பதில்லை.. அது என்ன அப்படி தகுதின்னு நீங்க ரொம்ப ஆர்வத்தோட கேட்கறது எனக்கு இங்க வரைக்கும் கேட்குது தான்.. உங்க ஆர்வத்தை மதித்து, நானும் நீங்க எங்க இருந்தாலும் அது வரைக்கும் சவுண்டு விட்டு சொல்றேன் கேட்டுக்கோங்க......

முதல் ரவுண்டு தகுதி :- இங்கே..ரவுண்டு என்ற வார்த்தையை யாரும் தவறாக அர்த்தம் செய்துக்கப்பிடாது, ரவுண்டு என்றால் சுற்று.

1. சூடு சுரணை போன்றவை பற்றிய கவலை


ஹி ஹி.. இதுக்கு எல்லாம் கவலை படறவங்க எல்லாம் அடம் பிடிக்கறதை பத்தி நினைச்சி கூட பார்க்கக்கூடாது, அவங்க எல்ல்லாம் முதல் சுற்றுல வெளியில போயிடுங்க.. இவை எல்லாம் இல்லாதவங்க மட்டும் மேற்க்கொண்டு படிக்கலாம்.

குறிப்பாக இதை எதற்கு சொல்றேனா... நாம அடம் பிடிக்கறதை பாத்து எதிராளி ரொம்பவே கோவப்பட்டு கேவலமான* ஆயுதங்களால் உங்களை தாக்கக்கூடம், ஆனால் நீங்கள் மானம் மரியாதை சூடு சுரணை எதுவும் இல்லாதவராக இருந்தால் மட்டுமே அவற்றை எல்லாம் வாங்கிக்கொள்ள முடியும். அப்புறம் நாலு பேரு நம்மை வேடிக்கை பாக்கறங்களே ன்னு கூச்சம் நாச்சம் எதுவும் எல்லாம் எப்பவும் இருக்கப்பிடாது. பெருமையா நினைக்கனும்.

2. அடுத்து, அடம் பிடிக்க நல்லா ப்ளான் பண்ணனும். எப்படிப்பட்ட எதிர்வினைகள் உங்கள் மேல் தொடுக்கப்பட்டாலும் அதை தாங்கக்கூடிய உடல் வலிமையும் மனவலிமையும் உங்க க்கிட்ட கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏன்னா நீங்க அடம் பிடிப்பதை பார்த்து,எதிராளிக்கு கோவம் வந்து அவர்கள் டெர்ராக மாறி....... ஓஒடீஈஈஈ வந்து உங்களை.........

=>ஒரே மிதி மிதிக்கலாம்,
=>திடீரென்று தூக்கி போட்டு கூட மிதிக்கலாம்,
=>பெரிய பிரம்பு எடுத்துவந்து எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு முடியுமோ அவ்வளவு அடிக்கலாம்.
=>துடைப்பம், செருப்பு போன்ற ஆயுதங்களை பயன்படுத்த நேரிடலாம்
=>ஏன் ரொம்பவே டெரர்ராகி உலக்கை, கத்தி, அறிவாள்மனை, சுத்தி, மன்வெட்டி, பாண்டு, செங்கல் போன்ற ஆயுதங்களை எடுத்து வன்முறையில் கூட ஈடுபடலாம்

ஆனால் எப்படிப்பட்ட வன்முறை உங்கள் மேல் அவிழ்த்து விடப்பட்டாலும், உங்களின் மனமும் உடலும் சோர்ந்து போகக்கூடாது. போருக்கு செல்லும் வீரம் உங்களிடம் இருக்க வேண்டும். அடம் பிடிப்பதில் இருந்து எள் அளவும் பின்வாங்கவே கூடாது.

அடுத்து, எவ்வளவு அடித்தாலும், வலிக்கிறதோ வலிக்கலையோ அடிவாங்கிட்டே அழதுக்கிட்டே இருக்கனும்.. அழறதும் சும்மா எல்லாம் அழக்கூடாது கண்டிப்பாக உங்க வீட்டை சுத்தி ஒரு, ஒரு கிலோ மீட்டர் அளவு சத்தம் ரீச் ஆகற அளவு கத்தி அழனும்,. இப்படி சத்தம் போட்டு கத்தி அழறதால *தொண்டை கொஞ்சம் கிழியற ஸ்டேஜ் க்கு போகும்..ஆனா முன்ன சொன்ன மாதிரி எந்த மாதிரி பிரச்சனை வந்தாலும் முன் வைத்த காலை மட்டும் பின் வைக்கவே கூடாது... நல்லா இன்னும் சத்தம் போட்டு கத்தி கத்தி அழனும்.. *தொண்டை புண் ஆறுவதற்கு தேவையான டிப்ஸ் கடைசியில் கொடுக்கப்படும்.

அப்படி சத்தமாக அழறதோட பலன் இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு தெரியும் பாருங்க....! இந்த அழுகை சத்தம் கேட்டு உங்க வீட்டில் மூளை முடுக்கில் இருக்கும் பெருசு, சிறுசு, மீடியம் பர்சனாலிட்டிங்க எல்லாம் வருவாங்க. அது மட்டும் இல்லை அக்கம் பக்கம் வீட்டில் இருக்கவங்க, பக்கத்து தெரு வரைக்கும் சத்தம் ரீச் ஆச்சின்னா அங்க இருக்கவங்க எல்லாரும் என்னவோ ஏதோ ன்னு பதறி அடிச்சிகிட்டு ஓடி வருவாங்க.. சரி சரி... உங்க கவனம் இங்கத்தான் இருக்கனும், கூட்டம் எல்லாம் நல்லா கூடிடுத்தான்னு அழுதுக்கிட்டே நைஸ் ஸா சுத்தி பாத்துக்கோங்க.. இப்பத்தான் பர்ஃபாமன்ஸ் ஸை நல்லா ஆரம்பிக்கனும். "

"அய்ய்யாயோ அய்யோ...யம்மாம்ம்மாஆ.ஆஅ யம்மா யம்மாஆஅ....என்னை இப்படி அடிச்சி அடிச்சி இந்த வீட்டில கொல்றாங்களே இதை யாருமே கேக்கவே மாட்டீங்களா? ? அதுவும் ஒரு பொண்ணு குழந்தை ன்னு கூட பாக்காம அடிக்கறாங்களே....இதை இவ்ளோ பேரு பாக்கறீங்களே கேக்கவே மாட்டீங்களா? எவ்வ்வ்வ்ளோஓஓஓஓஓஒ வலிக்குது தெரியுமா... ம்ம்ம்..:( .தாங்கவே முடியல தெரியும்மா....:( ம்ம்ம்ம்..ஆமா பாருங்க;ன்னு " ன்னு அடிச்ச இடம் ஏதாச்சும் சிவந்து பழுத்து போயி இருந்தா காட்டி ஒரு பரிதாப அலைய உருவாக்கனும். (இந்த லோகேஷன் எல்லாம் நீங்க எல்லார் எதிரேவும் தேடி எடுக்கக்கூடாது, அடிவிழும் போதே எங்க எங்க பன்னு மாதிரி உப்பி இருக்குன்னு நோட் செய்து வச்சிக்கிட்டு இன்ஸ்டன்ட் டா காட்டனும்) ..

பெருசுங்க தான் முதல்ல ஆரம்பிக்கும்.. "ஏன் சின்ன புள்ளைய போட்டு இப்படி அடிக்கறீங்க... பாவங்க எப்படி கன்னி போய் இருக்கு பாருங்கன்னு" நம்மளை அடிச்சி துவைக்கற நல்லவங்களுக்கு அட்வைஸ் செய்வாங்க.. .இந்த சந்தர்ப்பத்தை விடவே கூடாது..

ஆனா நீங்க என்ன பேசினாலும்.. அழுகையை மட்டும் சைட் ல மெயின்டெயின் செய்துக்கிட்டே இருக்கனும், கூட்டத்துல யாரும் பேசறதை பராக்கு பார்த்து பர்ஃபாமென்ஸை கோட்டை விட்டுடக்கூடாது. அழுதுக்கிட்டே பேசறது கொஞ்சம் கஷ்டம் தான், முயற்சி செய்ங்க, செய்ய செய்ய பழகிடும். இப்ப உடனே.. " நல்லா கேளுங்க தாத்தா.. இப்படித்தான் இந்த வீட்டுல அநியாயம் நடக்குது, எது கேட்டாலும் என்ன செய்தாலும் அடிச்சே என்னை கொல்றாங்க....". ன்னு சொல்லும் போதே..நம்மை அடிக்கறவங்க இன்னும் டெரரா ஆகி, இன்னும் இரண்டு உதை கண்டிப்பா கொடுப்பாங்க.. (it is human nature u know) ... ஆனாலும் நாம் பரிதாபம் சம்பாதிக்கறதை விடவேப்பிடாது, அடிக்கறவங்களையும் அழுதுக்கிட்டே திட்டனும்..

"நீ நல்லா இருப்பியா.. சின்ன புள்ளய இவ்வளாம் பெரிய பிரம்பு வச்சி அடிக்கறயே.. உனக்கு மனசாட்சியே இல்லையா... நீ அடிக்கறதை கேக்க யாரும் இல்லைன்னு நினைச்சியா. .பாரு பாரு எவ்வளவு பேரு இருக்காங்க.." ன்னு அழுதுக்கிட்டே பரிதாபமாக கூட்டத்தை பாத்து ஒரு லுக் விடனும்.. ."உன் கிட்ட அடிவாங்கி வாங்கியே நான் ஒரு நாள் செத்து போயிடுவேன் போல இருக்கே.." ன்னு டயலாக் டெலிவரி செய்யனும்....

3. இதுல முக்கியமாக சொல்லவேண்டிய விஷயம் பொஷிஷன்..

அடம் பிடிக்க ஆரம்பிக்க முன்ன, வீட்டில் எந்த இடத்தில் உட்காரனும்னு இடத்தை முதலில் சூஸ் செய்துக்கனும். கை, காலை நல்லா உதச்சி , உருண்டு பிரண்டு அழறமாதிரி இடம் தாராளமாக இருக்கனும், அடுத்து நாம் போடற சத்தம் , வீடு முழுக்க கேட்கறது இல்லாமல் அக்கம் பக்கம் வீடு, தெரு வெல்லாம் ரீச் ஆகனும். .எல்லாத்தைவிடவும் ரொம்பவும் முக்கியம், நம்ம பர்ஃபாமன்ஸ் ஓவர் ஆகி, ஒரு டெரர் க்கு பதிலா வீட்டில் இருக்க எல்லாருமே டெரரா மாறி ஒன்றாக சேர்ந்து கும்ம வந்துவிட்டால்....???!! .அப்படி நடக்கும் பட்சத்தில்....... எழுந்து வேகமாக வீட்டை விட்டு ஓட வசதியாக இருக்கனும். இது தான் ரொம்ப முக்கியம். எல்லாத்துக்குமே ஒரு முடிவு இருக்கு இல்ல.. இவங்க பாட்டுக்கும் மானவாரிக்கு நம்மை அடிச்சிக்கிட்டே இருந்தா, நம்ம உடம்பும் தாங்கனும் இல்லையா... அதுவும் கூட்டமா சேர்ந்து கும்மனும்னு முடிவு செய்த பிறகு நாம அங்க இருக்கலாமா.. கூடவே கூடாது..... அதனால் ஒரு ஸ்டேஜுக்கு மேல .. ஒரேஏஏ ஓட்டம் .. யார் துரத்தினாலும் பிடிக்கமுடியாத ஸ்பீட் ல ஓடிடனும். இந்த ஓட்ட பயற்சி எல்லாம் நீங்க முன்னமே கத்துக்கிட்டு இருக்கனும்.

4. வீட்டை விட்டு ஓடி விட்டால் வருவது எப்படி : இதுவும் ஒரு தனி கலை. ஓட்டாமா ஓடி நான் எப்பவும் போய் தஞ்சம் புகும் இடம் என் அத்தை வீடு தான். அங்க உள்ளே போனவுடன், அத்தைக்கு இங்க என்ன நடந்தது தெரியாதவாறு (தெரிந்தால் அவங்க தனியா அடிக்க ஆரம்பிப்பாங்க), சிரித்த முகத்தோடு அத்தை பிள்ளைகளுடன் நன்றாக விளையாடிவிட்டு, அங்கேயே நல்லா கொட்டிக்கிட்டு, உடம்பு வலி போக அங்கேயே படுத்து நல்லா தூங்கிட்டு, பொறுமையாக வருவேன். வரும்போது, மெதுவாக வீட்டில் யார் யார் எந்த பொஷிஷனில் இருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு சத்தமே இல்லாமல் நைஸ் ஸாக பெருசுகள் எங்க இருக்குன்னு பாத்து செட்டில் ஆயிடுவேன். அவங்க தான் நம்மை மேற்க்கொண்டு காப்பாத்துவார்கள்.

விழு புண்களை சரி செய்ய டிப்ஸ் :- எப்படியோ இப்படியே கண்டிநீயூ செய்து , நினைத்ததை சாதித்த பிறகு - வீட்டுல நம் மேல ஓவரா பாசத்தோட இருக்க ஒரு பெருசா பாத்து செட்டில் ஆகிடனும். தாத்தா/ஆயா ஈஸ் பெஸ்டு. அவங்க கிட்ட வீங்கிய இடங்கள், தொண்டை புண் இவற்றை விக்கி விக்கி...விக்கி அழுதுக்கிட்டே காட்டனும். அவங்களும் பரிதாபப்பட்டு தேங்காய் மரக்கொடி எண்ணெய், அய்யோடக்ஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தேய்த்து நம் விழுபுண் களை ஆற்றி அடுத்த போருக்கு நம்மை தயார் படுத்துவார்கள். தொண்டை புண் னுக்கு பால் குடிக்கனும் பிறகு மனத்தக்காளி பழத்தை சாப்பிடனும், மனத்தக்காளி இளை சாறு, அதில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

இது வரை இப்படி அடம் பிடித்து என்ன சாதித்தேன் னு கேட்கறீங்களா? நல்ல கேள்வி.நிறையவே இருக்கு.. உங்களுக்காக சில.. :)

1.ஒரு முறை சினிமா வுக்கு அழைத்து போக சொல்லி கேட்டு.. ஆயா முடியாது என்ற சொன்னவுடன், செருப்பு விடும் இடத்தில் அழ ஆரம்பித்தது தான், தொடர்ந்து ஒரு 4.5 மணி நேரம் உருண்டு பிரண்டு, கை கால் எல்லாம் உதைத்து அழுதேன்..(அதை எல்லாம் சரியா செய்துவிடுவேன்) நான் அழுவதை பார்த்து தாத்தாவிற்கு நெஞ்சு வலி வந்துவிட, "அம்மா அழாதம்மா நீ அழுதா தாத்தாவால தாங்க முடியலம்மா.."ன்னு சொல்ல...அதை சாதகமாக பயன்படுத்தி அவரிடமே 4 ரூ வசூல் செய்துவிட்டு போனா போகுது என்று அடங்கினேன். ஆனா சினிமா அழைத்து செல்ல யாரும் இல்லாததால் பணம் மட்டும் கொடுத்துவிட்டார்கள். அடியா? இல்ல கிடைக்கல.. அடிவாங்கினது எல்லாம் தனியா பதிவாக போட்டு இருக்கோம் இல்ல...

2. மற்றொரு நாள், மதியம் 12 மணிக்கெல்லாம் எனக்கு பசி எடுத்துவிட்டது. ஆயா அப்போது தான் உலை கொதித்து அரிசி போட்டார்கள், அதை நானும் பார்த்தேன். பசியை அடக்க முடியவில்லை, 10 நிமிடம் இரும்மா வெந்துடும் னு சொல்லியும் நான் கேட்கவில்லை. உடனே உட்கார்ந்து கை காலை உதைத்து அழ ஆரம்பித்தேன்.. "அய்யோ வயறு எல்லாம்...பசிக்குதே. .இந்த வீட்டில் பசிக்கு க்கூட சாப்பாடு போட மாட்டேங்கறாங்களே, இப்படி அழுது அழுது கேக்க வேண்டியதா இருக்கே..என்னால பசிய தாங்கவே முடியலையேன்னு....இதை யாருமே கேக்க மாட்டீங்களா... "ன்னு அழ ஆரம்பிச்சது தான்.. .ஆயாவுக்கு நிஜமா என்ன செய்யறதுன்னு தெரியாமல், கொதிக்கற உலையில் இருந்து வேகாத அரிசியை அப்படியே ஒரு தட்டில் போட்டு உப்பு சேர்த்து, "திண்ணு தொல ஆன உன் வாய மட்டும் மூடு ன்னு கொடுத்துட்டு போயிட்டாங்க.. " நானும் சரி போனபோகுதுன்னு அந்த வேகாத (அவ்வ்வ்வ்வ் .. ) அரிசியை உட்கார்ந்து சாப்பிட்ட்டேன்.... :(

3. லேட்டஸ்ட் : பாத்ரூம் கதவை மூட போகும் போது என்னுடைய இடது கை கட்டை விரல் கதவிடுக்கில் இருப்பதை கவனிக்காமல் வலது கையால் கதவை நன்றாக இழுத்து சாத்திவிட்டேன். கட்டைவிரல் சூப்ப்ராக நசுங்கி....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா என்னா வலி.. வலி தாங்க முடியாமல் ஓஓஒ வென்று அழகை மட்டும் இல்லை.. நிஜமாக கால் பூமியில் நிற்காமல் குதித்து குதித்து அழுகை. அவ்வளவு வலி. கத்தின கத்தில் கூட்டம் சேர்ந்துவிட்து தான். என் மகனுக்கு மட்டும் ஒரே சிரிப்பு... "ஐ..கைய நசுக்கிகிட்டயா?... எங்க காட்டு ...ஐ..உன் கட்டை விரல் இப்பத்தாம்மா ரொம்ப அழகா இருக்கு்.!! ஆமா நீயே தானே நசுக்கிகிட்டே எதுக்கு இப்படி ஊரையே தூக்கற மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ற. . வாயை மூடி சத்தம் இல்லாமல் அழு" என்றான். அவன் சொன்னதற்காகவே.."எனக்கு எவ்வளவு வலிக்குது, நீ எப்படி என்னை சத்தம் போடாமல் அழ சொல்ற" ன்னு இன்னும் கத்தி அழ ஆரம்பித்தேன்" புள்ள பயந்து போய்.. "அய்யோ யம்மா தெரியாம சொல்லிட்டேன்.. நீ கத்தாத... " ன்னு என் வாயை அடைக்க. வர... "என் வாயை அடைச்சா இன்னும் கத்துவேன்" னு இன்னும் சத்தம் போட்டு கத்த.... அவ்வ்வ்வ்வ்.. கடைசியில என் புள்ள ..சரி எப்படியோ அழுது தொலச்சிக்கோஒ.... ன்னு விட்டுட்டு போயிட்டான்.....ம்ம்ம் அது!!

அணில் குட்டி அனிதா : தூஊஊஊஊ..!!!

பீட்டர் தாத்ஸ் : “I have done that," says my memory. "I cannot have done that" -- says my pride, and remains adamant. At last -- memory yields.”