கவி : நவீன் என் நீயூ ஃபிரண்டு பாருடா வா...வா.. இங்க.... (பப்புவும் நானும் இருக்கும் போட்டோவை அவனுக்கு காட்டுகிறேன்)

நவீன் :
..............................
................................ (போட்டோவை பார்த்துவிட்டு.. என்னையும் ஒரு மாதிரி பார்த்துவிட்டு திரும்ப சென்று டிவி பார்க்க ஆரம்பித்தான்..)

கவி :
ஏன்ன்டா... மெனக்கேட்டு உன்னை கூப்பிட்டு என் நியூ ஃபிரண்டை காட்டினேன் ஒன்னுமே சொல்லாம போற.... பொறாமை புடிச்சவனே.. !!


நவீன் :
.... ம்ம்ம்ம் .. அவக்கூட இன்னும் கொஞ்ச நாள் ல உன்னை விட வளந்துடுவாம்மா............!!!!

கவி :........... :((((((

************************************************

கவி : (ராத்திரி தூங்க வரும் நவீனை பாத்து )- எனக்கு ஒரு கேள்விடா...

நவீன்... : (நிறைய மொக்கை கேள்விகளை கேட்டு கேட்டு பழக்கமாகி நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பதாலும் வேண்டானாலும் விடாமல் நான் கேட்டே தீருவேன் என்பதாலும் பதில் ஏதும் சொல்லாமல் என் கேள்வி யை மிக கடுப்பாக எதிர் பார்த்துக்கொண்டே படுக்கையை விரித்துக்கொண்டு இருந்தான்...)

கவி : எனக்கு ஒரு பெரிய டவுட்டுடா... இந்த எறும்பு எல்லாம் நைட் ல தூங்குமா? தூங்காதா?...

நவீன் : (இவ்வளவு கேவலமான கேள்விய எதிர்பார்க்காத அவன்... வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்)...ஏம்ம்மா ..ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்.?? ஏன் இப்பூடீஈஈ.?

கவி : டூ யூ திங்க் மை குவஸ்ஸின் ஈஸ் நாட் வேலிட்..........?

நவீன்..: ம்ம்ம்மா.. ராத்திரி மணி 12.20 ஆகுது, இப்படி கேள்வி கேக்கறீயே உனக்கு மனசாட்சியே இல்லையா? என்னை விட்டுடு நான் தூங்கனும்..!!

கவி : :(((((

*****************************************************

கவி : இங்க பாருடா..... வெளி நாடு எல்லாம் போனா அதுவும் பர்டிக்குலரா அமெரிக்கா போனா... அமெரிக்காக்காரிய தயவு செய்து லவ் பண்ணி தொலச்சிடாதடா..........

நவீன் : :)))))))) ஹி ஹி..ஏன் ஒன்ன்னால அந்த அளவு பீட்டர்ல பேச முடியாதுன்னு பயப்படறீயா...

கவி: :((((((((((((((((

**************************************************

கவி : நவீன் ப்ளிஸ்.... எனக்கு wma to mp3 conversion tool எது நல்லதுன்னு கொஞ்சம் ரெஃபர் செய்யேன்..

நவீன் : ஏன் உன்னோட இன்டர்நேஷனல் வெட்டி ப்ளாகர்ஸ் நிறைய பேர் இருப்பாங்களே அவங்களை கேளூ.... நீங்க எல்லாம் இன்டர்நேஷனல் அறிவாளிகளாச்சே....!! ...

கவி : (ஏன் இப்புடி.. ஒரு வேளை என்னைக்காச்சும் ப்ளாகர் எல்லாத்துக்கும் சேத்து வச்சி சப்போர்ட்டி இருப்பேனோ...இவ்வளவு கடுப்பா இருக்கான்...).... ஏண்டா.. உன்னால முடியலன்னா முடியாதுன்னு சொல்லு அதுக்கு எதுக்குடா.. ப்ளாகர்ஸ் எல்லாரையும் திட்டற..

நவீன் : பின்ன நீ வெட்டியா செய்யற வேலைக்கு ஏன் என் உயிரை வாங்கற...!!

**************************************************

கவி : நாங்க எல்லாம் சில்ட்ரன்ஸ் பார்க் போறோமே...

நவீன் : யாரு எல்லாம்?

கவி: நானும் என்னோட ப்ளாகர் பிரண்ட்ஸ்'சும்

நவீன் : ஹி ஹி... ஆல் வெட்டிஸ்' போறோம்னு சொல்லேன்.. ரொம்ப டீஸன்ட்டா ப்ளாகர்ஸ் னு சொல்றே.......

கவி : :((((((((((((((((((((((((((

******************************************************

கவி : நவீன் இன்னும் கொஞ்சம் வளந்துடுடா... இன்னும் ஒரு 2 இன்ச் ஹைட் போதும்.. ...

நவீன் : ம்மா .. நீயும் அப்பாவும் ரொம்ப ஹைட் ன்னு நினைப்பா? உங்க கூட பாக்கும் போது, இவ்வளவு ஹைட் டா நான் வளந்ததே பெரிய விஷயம் இது போதும், அமைதியா இரு..!!

கவி: ப்ளீஸ் டா ரொம்ப இல்ல...இன்னும் 2 இன்ச் போதும்....அதுக்கு தான் இன்னும் உனக்கு நான் காம்ப்ளான் எல்லாம் கொடுக்கறேன்...!!

நவீன் : ஓ..என்னை டீ, காப்பி குடிக்கக்கூடாதுன்னு இம்சை பண்றதுக்கு பின்னால இப்படி ஒரு சதி இருக்கா...? ஏன் என்னை எக்ஸிபிஷன் ல கொண்டு போயீ நிக்க வைச்சி சம்பாதிக்க போறியா?

கவி: :(((((((((((((((

******************************************************

கவி : நவீன் குட்டி உனக்கு என்ன டிபன் வேனும்டீ ?!

நவீன் : என்ன முடியூதோ செய்யிமா..

கவி: இல்ல நீ கேளு நீ என்ன கேக்கறயோ செய்து தரேன்...

நவீன்; சரி உன்னால என்ன செய்து தரமுடியும் மெனு சொல்லு?

கவி :ம்ம்ம்ம்ம்ம்... இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பூரி, சப்பாத்தி, இடியாப்பம்.. பிரட் ஆம்லெட், பிரட் ப்ரென்ச் ப்ரை... நீர் உருண்டை, நூடுல்ஸ், இதை எல்லாம் செய்யமுடியும்..ஆனா ஐ வான்ட் யூ டூ பிரிஃபர் ஒன்லி சம்பா கோதுமை கஞ்சி......

நவீன் : அதானே..அதுக்கு தான் முன்னமே உன்னால என்ன முடியுமோ செய்து தான் னு சொன்னேன்.. உன்னை பத்தி தான் எனக்கு நல்லா தெரியுமே... கிளம்பு கிளம்பு ....ஏரியாவை காலிப்பன்ணு...!!

கவி: :((((((((((((
*************************************************

கவி : டேய் ஜிம் ல "வரலா" (வரலட்சுமி) உன்னை "எருமைமாடு " ன்னு சொன்னாடா... எல்லாரும் சிரிச்சாங்கடா.... :)))) ஹி ஹி .....

நவீன் : நீயெல்லாம் ஒரு தாயா? பெத்த புள்ளைய 'எருமைமாடு' ன்னு சொல்லி இருக்காங்க.... கொஞ்சம் கூட ரோஷப்படாம அவங்க கூட சேந்து நீயூம் சிரிச்சது இல்லாம என்கிட்ட வேற வந்து சொல்ற.. உனக்கு வெக்காமா இல்ல..?

கவி : அட..ஆமா இல்ல... நான் உன்னை பெத்த தாய் ஆச்சே...நான் மறப்பேனா.. அதனால் தான் அவக்கிட்ட சொன்னேன்... "வேணாம் வரலா' நீ எருமைமாடு னு மட்டும் தான் திட்டுவ.... .ஆனா என் புள்ள கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவான்.. அசிங்கம்மா உன்னை திட்டிடுவான்.." ன்னு சொன்னேன் டா.. அதுக்கு அவ.... "ஓ அசிங்கமா வேற திட்டுவானா... அவன் மூஞ்சியில நான் காரி....த்த்தூஊஊஊன்னு துப்பனேன்னு சொல்லுங்க.... இப்படி ஒரு நல்ல தங்கமான அம்மாவுக்கு இவ்வளவு கேவலமான புள்ளையா ன்னு நான் கேட்டேன்னு சொல்லுங்க ன்னு" சொன்னா டா...................

நவீன் :......ம்ம்மா.... இது மட்டும் என்னமோ அவங்க என்னை திட்டினமாதிரி தெரியலையே......... :(((

கவி : :))))))))))) ஹி ஹி......ஹி ஹி....

*************************************************

அணில் குட்டி அனிதா : ............ அம்மணி இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எவ்வளவு அடிப்பட்டாலும்...மாற போறது இல்ல.... இது தேறாத கேஸூ...... :(((

பீட்டர் தாத்ஸ் : “For a mother the project of raising a boy is the most fulfilling project she can hope for. She can watch him, as a child, play the games she was not allowed to play; she can invest in him her ideas, aspirations, ambitions, and values -- or whatever she has left of them; she can watch her son, who came from her flesh and whose life was sustained by her work and devotion, embody her in the world. So while the project of raising a boy is fraught with ambivalence and leads inevitably to bitterness, it is the only project that allows a woman to be -- to be through her son, to live through her son.”