தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சற்றே வேகமாக
கடந்திருக்குமோ வாகனங்கள்


http://iruppu.blogspot.com/2009/07/blog-post_13.html

இராவணன் எழுதிய இந்த கவிதை படித்த போது எனக்கு தோன்றிய சில வரிகள்...... நன்றி இராவணன்.

***************************************
தூசிகள்
படர்ந்த
வெற்றுத்திண்ணையில்
உன் பெயர்
எழுதி...
ரசித்தேன்..!!!


**********************
வாகனங்கள்
கடந்தபின்
தூசிகளை
சுத்தம்
செய்துவிட்டேன்....


**********************
அடுத்த
வாகனம்
எப்போது வருமென
காத்திருக்கிறேன்.........
தூசிகள்
திரும்பவும்
படருமே....!!

***********************
வாகனங்கள்
கடந்து செல்லாமல்
இருக்காது

தூசிகள்
படராமலும்
இருக்காது...

வெற்றுத்திண்ணையாய்
இருப்பது
என் தவறோ.......??!!

****************************

உங்களுக்கு தோன்றுவதையும் சொல்லிவிட்டு செல்லுங்கள்... :)