பிரவாகம் காயத்திரி குட் மார்னிங் மெயில் அனுப்புவாங்க. அதில் ஒரு முறை இந்த இயற்கை காட்சி வந்தது. வரைந்து பார்க்கலாமே என்று முயற்சி செய்தேன். இதை வரைந்த பிறகு ஒரிஜினல் படத்தை பார்க்க எனக்கே ரொம்ப பாவமாக போச்சி.. ஏன்னு எல்லாம் கேட்கப்பிடாது.... :))))))))

* படத்தை க்ளிக்'கி பெரிதாக்கி பார்க்கவும். :)

அணில் குட்டி அனிதா :
ஆமாம்ம்மா...... ஏன்ன்னு எல்லாம் கேட்கப்பிடாது.. ஒரிஜினல் படத்தை காட்ட மட்டும் சொல்லுங்க... த்த்தூஊஊஊஊ... ன்னு துப்பிட்டு போயிடுவீங்க.. அதுக்கு தான் அம்மணி பில்டப் டு கொடுத்து இருக்காங்க.. (ஆனா மக்கா நான் சொல்றனேன்னு உணர்ச்சி வசப்பட்டு துப்பிடாதீங்க. .உங்க கம்பியூட்டர்க்கு தான் டோட்டல் டேமேஜ். .ஹி ஹி.. ... )

காயத்திரி யக்கோவ்வ்வ் ..! ஏண்டா இவிங்களுக்கு இப்படி எல்லாம் மெயில் அனுப்பினோம்னு.. !! இப்பவாச்சும் நீங்க ஒரு நிமிட் யோசிச்சி பாக்கனும்.. சொல்லிட்டேன்..!!

பீட்டர் தாத்ஸ் :- Drawing is the honesty of the art. There is no possibility of cheating. It is either good or bad.

அணில் குட்டி அனிதா : பீட்டரு....போதும் நிறுத்திக்கோ....!!! வர வர நீ டூ மச்சா கவி க்கு குவாட்(டர்) கொடுக்கற ....என்னால முடியல......நிறுத்திக்கோஒ.... :(( சொல்லிட்டேன்.. டென்ஜன் பண்ணாத என்னைய !! :(