ஆடு புலி ஆட்டம் இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக சொல்லப்படுகிறது. திண்ணையில் அமர்ந்து விளையாடுவார்கள்.

எங்க வீட்டில் இந்த ஆடு - புலி ஆட்டம் அடிக்கடி விளையாடுவோம். (எங்க வீடு ன்னா.. ஆயா, தாத்தா வீடு) , திருமணத்திற்கு பிறகு ஒரு முறை கூட இந்த விளையாட்டை விளையாடவில்லை. எங்கள் வீட்டில் ஆயா வை இது வரையில் இந்த ஆட்டத்தில் யாரும் வெற்றி பெற்றது இல்லை.

அப்பாவும் ஆயாவும் இந்த விளையாட்டை விளையாடி பார்த்ததில்லை. அப்பா ஒரு வேளை ஆயாவை தோற்க்கடித்து இருக்கலாம் என்றாலும் ஆயாவை போன்ற சமயோஜிதமாக யோசிக்கும் திறன் அப்பாவிற்கு உண்டா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஆயாவுடன் விபரம் தெரிந்து நான் விளையாடவில்லை என்றாலும், விளையாடிய வரை தோற்று த்தான் போயிருக்கிறேன். 16 ஆடுகளில் 12 ஐகொண்டே புலியை அடக்கிவிடுவார்கள். ஆச்சரியம்.. மீதமுள்ள 4 காய்களை எங்களின் கையில் திணித்துவிட்டு வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்.
ஆயா வை இதில் மட்டும் இல்லை, எதிலுமே வெல்வது அத்தனை சுலபமல்ல.. A great Courageous Woman !!. :) ..

இது ரொம்பவும் இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கும். மேலுள்ள படம் தான் ஆடு - புலி ஆட்டத்தின் கட்டங்கள். தரையில் சுண்ணாம்பு கட்டி /சாக்பீஸ் கொண்டு வரைந்து கொள்ளலாம். தேர்வு எழுத பயன்படுத்தும் அட்டையின் பின்புறம் வரைந்தும் வைத்துக்கொள்ளலாம்.

இருவர் விளையாடகூடிய விளையாட்டு

புலிகள் - 3 - படத்தில் இருப்பது போன்று ஆட்டத்தை ஆரம்பிக்கும் போது வைத்துக்கொள்ள வேண்டும்

ஆடுகள் - 16 இதை புலிகள் நகராதவாறு ஆடுகளை வைத்து விளையாட வேண்டும்.

3 புலிகளையும் நகராதவாறு செய்துவிட்டால் ஆடுகள் புலிகளை அடக்கிவிட்டன. இல்லையேல் புலிகள் ஆடுகளை விழுங்கிவிட்டது. புலிகளுக்கு பக்கத்தில் ஆடுகளை வைத்தால் தாண்டி வெட்டிவிடும். அதனால் புலிகளை கட்டும் போது அது தாண்டாதவாறு பார்த்து ஆடுகளை வைக்கவேண்டும்.

சோழிகளை காய்களாக பயன்படுத்துவோம்.
புலிகளுக்கு தான் இதில் நிறைய வாய்ப்புகள் உண்டு. மிக எளிதாக ஆடுகளை விழுங்க முடியும். அதனால் ஆடுகளை தேர்ந்தெடுத்து விளையாடுபவர்களுக்கு தான் இந்த ஆட்டம் கஷ்டம். ஆடுகளாக விளையாடி பார்ப்பதில் தான் ஒரு திரில் இருக்கும்.

குறிப்பு- ஆடு-புலி ஆட்டத்தை பற்றி ஏதும் தகவல் இருக்கிறதா என்று கூகுலில் தேட, கிடைத்தது பதிவர் சிந்தாநிதி யின் இந்த இடுகை. நன்றி சிந்தாநதி.

அணில் குட்டி அனிதா : - ஓஓஓஓ்......அம்மணி .செம வெட்டியா ... ?!! அவனவன் கம்பூயூட்டர் ல உலகத்தையே சுத்திட்டு வரான்.. இப்பத்தான் இவங்க....ஆடு.. புலி ன்னு க்கிட்டு இருக்காங்க...... மக்கா பாத்து... அப்படியே கற்காலத்துக்கு போயி இது தான் கல்...இரண்டு கல்லை இப்படி தேச்சா....நெருப்பு வரும் னு சொல்லிக்கொடுக்காம பாத்துக்கோங்க............ ...... முடியலடா சாமி....!!!!

பீட்டர் தாத்ஸ் : It's not so important who starts the game but who finishes it.

.