பதிவர் *ஜீவ்ஸ்* ஸிடம் இந்த பாடலை பாடி பதிவிட போகிறேன் என்று சொன்னபோது, இதற்கு முன் சில பாடல்களில் நான் பாடிய வரிகள் தவறாக இருந்ததால், அப்படி பாடி விடாதீர்கள் என்று இந்த பாடல் வரிகளை எனக்கு கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பி இருந்தார். இத்தனை மாதங்கள் கழித்து இப்போது தான் இந்த பாடலை பதிவிடுகிறேன். நன்றி ஜீவ்ஸ்... :)

பாடல் வரிகள் - கண்ணதாசன்

இசை : எம்.எஸ்.வி.

Get this widget | Track details | eSnips Social DNA



புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)


குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)



பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)



***************************

அணில் குட்டி அனிதா : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....இவிங்க ச்சும்மா இருந்தாலும் அக்கம் பக்கத்துல இருக்கவங்க ச்சும்மா இருக்க மாட்டாங்க போல... . என்ன கொடுமை சார்..இது...!! :(

பீட்டர் தாத்ஸ் :- Always keep a song in your heart - it's like karaoke for the voices in your head