நேற்றைய
மனநிலை
இன்று
இல்லை

இன்று
இருப்பது
நாளை
இருக்க
போவதுமில்லை

கண்விழிக்கும்
ஒவ்வொரு
விடியலிலும்-

புது
உலகம்
பார்க்கிறேன்..

புரிதல்
இல்லாத
உள்ளங்கள்
பார்க்கிறேன்.......

புண்படுத்தும்
மனிதர்கள்

பார்க்கிறேன்...


இது தான்
வழி
இது தான்
பயணம்
இது தான்
வாழ்க்கை

என்ற
எளிமை
சிந்தனையோடு
உள்ளத்தால்
இருக்க
முடிவதில்லை...

முடியாத
தருணங்களில்
முடிவு
சலனமற்ற
உடலும்
மனமும்..!!

சலனமற்றதை
பிணம்
என்று
கூட
சொல்லலாம்..


.