எனக்காக எழுதிய
நாட்கள் சென்று

யாருக்காகவோ
எழுத வந்தேன்

யாருக்காகவோ
எழுதுவதை
நிறுத்தினேன்..

எனக்காக
எப்போதாவது
எழுதிய
பொழுதுகள்

விடியல்
இல்லாத
இரவுகளாயின...

இருப்பினும்
விடியலில்
வரும்
அன்பான
மின் அஞ்சல்கள்

"உனக்காக நீ எழுதாதே"

இதை
இன்னார்
என்று
சொல்ல

எனக்கு
யாரும்
இருந்ததில்லை

சொல்லுபவர்
அத்தனை
பேரும்
இன்சொலார் !!

எழுதியது
அழிந்துபோகும்
மறைந்து போகும்
மறந்தும் போவேன்..

மீண்டும்
ஆரம்பிப்பேன்..

மீண்டும்
முடிப்பேன்...

யாருக்காகவோ....
.
.
,
.
எனக்காக நான்
இல்லை
என்பதில்
மட்டும்
ஏகத்துக்கும்
தெளிவு....

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

.
.