இதுவரை யார் பதிவையும் காப்பி அடித்தது இல்லை. இன்று நாகைசிவா' வின் பதிவை அப்படியே காப்பி எடுத்து பதிவிட்டுள்ளேன். அவரை போல் இவ்வளவு எல்லாம் தெளிவாக எனக்கு எழுத வரலை. சரி இல்லாத மூளையை கசக்கி எழுதுவதற்கு பதிலாக காப்பி அடிப்பது எளிதாக தோன்றியது.

சிலர் என்னுடைய பதிவுகளை நக்கல் செய்ய அவ்வப்போது காப்பி எடுப்பதுண்டு.. அவர்களை முன்னோடியாக கொண்டு ஆனால் ஒரு நல்ல விஷயத்திற்கு சிவா'வின் பதிவை காப்பி அடிக்கலாமே என்று.....

இதோ.....

சிவா'வின்

ஓட்டு போடுங்க ப்ளீஸ் .....


நாளை இந்தியாவின் அடுத்த ஐந்து ஆண்டுகள் எப்படி அமைய போகின்றது என்பதற்கு உங்கள் பங்கை அளிக்கும் நாள். என்னத்த வோட்டு போட்டு என்னத்த ஆக போகுது என்று நம்மில் பல என்னத்த கண்ணையாக்கள் உள்ளனர். இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகள் ஏன் சார் ஒட்டு போடனும் என்று ஆயிரம் காரணங்களை நம்மால் அடுக்க முடிகிறது. ஏன் ஒட்டு போட வேண்டும் என சிறிது சிந்தித்தால் ஆயிரத்து ஒரு காரணங்கள் கிடைக்கும் என்பது நிதர்சனம். அந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளை புறம் தள்ள உங்கள் ஒட்டு அவசியம் என்பது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது.

நம்மளில் பலர் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் - ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை னு சொல்லி சொல்லியே இப்போ வானரங்களை ஆள விட்டு இருக்கிறோம். கோள்(ஒட்டு) எடுத்தால் ஆடும் வானரங்கள் வானரங்கள் இருந்தவர்கள் இன்று பணம் கொடுத்தால் ஒட்டு போடும் வானரங்களாக நம்மை மாற்றி விட்டார்கள். இதை களைய நம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாத ஒட்டுப்பதிவு அவசியம்.

வக்கனையாக பல அரசியல் நிலைப்பாடுகளை அலசி ஆராய்ந்து விட்டு, ஆமாம் நான் ஒருத்தன் ஒரு வோட்டு போட்டு தான் இந்த நாடு மாற போகுதா என்று கூறும் ஒரு கூட்டம் உண்டு இங்கு. 5000 கோடி ஊழல் என்று பத்திரிக்கையில் வந்த தலைப்பை செய்தியை படித்து சார் இந்த நாடு உருபடவே உருப்படாது என்று பக்கத்து இருக்கையில் இருக்கும் சக அலுவலரிடம் சொல்லி விட்டு 500 ரூபாய் வாங்கி கொண்டு கோப்பில் கையெழத்து இடும் ஏதோ ஒரு அரசு ஊழியருக்கும் மேலே உள்ளவர்களுக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை. ஒரு வோட்டு பல வரலாறுகளை புரட்டி போடலாம்.

யாருப்பா வொட்டு போடுற இடத்தை தேடி போய்....... மேற்கொண்டு படிக்க....

முழுசா படிக்க பதிவை நானா எழுதினேன்... போங்க பாஸ்.. அவரோட பதிவுக்கு போய் படிங்க....


! Please Cast your Vote!