யாருக்கு ??!! என்பது முதல் கேள்வி. FC , BC, MBC, SC, ST இப்படித்தான் நாம் வகைப்படுத்தி பிரிக்கப்பட்டு இருக்கிறோம். இதில் FC பிரிவினருக்கு, அவரை விடவும் மற்றவர்கள் குறைவு என்ற திமிர். அதே போல் BC, க்கு மற்றவர்கள் எல்லோரும் அவரைவிடவும் குறைவு என்ற திமிர், இப்படியே தான் மற்ற சாதி பிரிவினரும் தனக்கு கீழ் உள்ளவர்களை குறைவாக மதிப்பிடுகின்றனர்.

நாம் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருந்தால், இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்திருக்கவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்.

கணினியில் காலம் கழித்துக்கொண்டு நாம் இருந்தாலும் இன்னமும் சந்தில், தெருவில், தோட்டத்தில், புழக்கடையில் உட்கார்ந்து சாப்பிடும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி அவர்களை சாப்பிட வைப்பது உயர் சாதியினர். அவர்களை வீட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை. என்னால் சகித்து க்கொள்ள முடியாத ஒரு பழக்கமாக இதை கருதுகிறேன். ஐயா, அவன் சக மனிதன். நம்மை போன்று ரத்தம், சதை, இதயம், கண்கள் கொண்ட ஒரு மனிதன். விலங்கு அல்ல. ஏன் எத்தனையோ வீடுகளில் நாய்களை கூட வீட்டிற்குள் விடுகிறார்கள், மடியில் வைத்து கொஞ்சுகிறார்கள். இவர்கள் வந்தால் என்ன, உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன.?

சரி எப்படி இந்த உயர் சாதித் திமிர் நம்மிடையே ஆரம்பிக்கிறது. ஆரம்பிக்கும் இடம் முதலில் வீடு தான். சாப்பாடு ஊட்டும் போதே குழந்தைக்கு இதுவும் சேர்த்து ஊட்டிவிடப்படுகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் இந்த FC பிரிவில் இருப்பவர்களுக்கு இருக்கிற திமிர் இருக்கிறதே. .என்னவோ கடவுளிடமிருந்து நேராக இறங்கி வந்தவர்கள் போன்று அவர்கள் நடந்து க்கொள்வதும், அவர்களுக்கு மட்டுமே கடவுள் அதிக அறிவையும், பண்பையும் படிப்பையும் கொடுத்தவிட்ட மாதிரி அவர்கள் நடந்து க்கொள்வது மட்டுமே அல்லாது அவரை விட கீழ் சாதியில் பிறந்தவர்களை கொட்டி கொட்டி நீ இதற்கு மேல் எழுந்துவிடக்கூடாது என்பதில் அதிகம் கவனம் வைப்பதும் சகிக்கமுடியாத ஒரு செயல்.

உயர் சாதியினரால் தனிப்பட்ட முறையில் மிக மிக மோசமாக நான் அடிக்கடி பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதுவும் இந்த அறிவு, படிப்பு, வேலை, திறமை, வாய்ப்புகள் என்று வரும்போது உழைப்பு, நேர்மை என்ற இந்த இரண்டும் இல்லாமல் வெறும் சாமர்த்தியத்தால் மட்டுமே முன்னுக்கு வர முயன்று அதற்காக என்னை முதுகில் குத்திய நிறைய கேடு கெட்ட உயர் சாதியினர் உள்ளனர். அவர்களின் அந்த பல் இளிக்கும் சாமர்த்தியம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது என்பது ஒரு தகுதியின்மையாகவே நினைக்கிறேன். அப்படிப்பட்ட தகுதியும் எனக்கு வேண்டாம் என்றும் நினைக்கிறேன்.

எப்போதும் நேர்மையற்ற முறையில் தன்னை முன்னிலை படுத்தும் இவர்களை பின்னுக்கு தள்ள நேர்மையாக போராடி அப்படிப்பட்டவர்களை கண்டாலே மனிதர்களாக எனக்கு மதிக்க தோன்றவில்லை. நிறைய உதாரணங்கள் என்னால் எடுத்துச்சொல்ல முடியும். அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது அலுவலங்களில். அவர்களை விட அடுத்தவர்கள் முந்தி செல்லுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடிவதில்லை. அதற்காக அவர்கள் எடுக்கும் குறுக்குவழி நடவடிக்கைகள் அருவருப்பை தரக்கூடியவை. என்ன வேண்டுமானலும் சிரித்துக்கொண்டே செய்து முடிக்கும் கேவலமான குணத்தை உடைவர்கள் எனலாம். இந்த சிரிப்பு நம்மை குழித்தோண்டி புதைத்த பின்னும், அந்த குழிக்குள் மேல் நின்று அதற்கு காரணம் அவர்கள் இல்லை என்பது போன்று சிரித்து சிரித்து பேசுவார்கள் பாருங்கள்... தூ என்று முகத்தில் உமிழ தோன்றும்.

அடுத்து வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் இவர்களின் அட்டூழியங்களுக்கு அளவில்லை எனலாம். அதற்கு முக்கியக்காரணம் அதே சாதிப்பிரிவை சேர்ந்த ஒட்டுமொத்த கூட்டமும் அங்கேயே இருக்கும். தங்கள் இனத்தை பார்த்தவுடன் அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பது. அப்படிக்கொடுப்பது மட்டும் இல்லாது நமக்கு திறமை இல்லை என்று சொல்லி வெளியில் அனுப்புவார்கள். வாய்ப்பு கேட்பவனும் ஜால்ரா அடிப்பான், கொடுப்பவனும் ஜால்ரா அடிப்பான். அதை தாண்டி நாம் அங்கு நிற்க வேண்டுமென்றால் பல தியாகங்களை செய்ய வேண்டும். இல்லையேல் பின்னங்கால் வைத்து அப்படியே வந்துவிடவேண்டியதுதான். அதில் முக்கியமானது பல் இளிப்பது.. ... இந்த கருமத்தை எப்படித்தான் இவர்கள் செய்கிறார்கள் என்பது இன்றளவும் எவ்வளவு ஆராய்ச்சி செய்தும் என்னால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

அடுத்து உணவு முறை, இதில் இன்னமும் பத்து பேருக்கும் முன்.. "அசைவ உணவை சாப்பிடும் போது, அய்யோ.. கடவுளே எப்படித்தான் இந்த கருமத்தை எல்லாம் சாப்பிடுகிறீர்களோ.. ?? ச்சேக்..!! வாந்தி வருது " என்று நாம் ஒரு உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே சிரித்துக்கொண்டே சொல்லும் கேவலமான பிறவிகள். நானும் திருப்பி அவர்கள் நிலைக்கு இறங்கி, நீ திங்கும் கொழ கொழ... தயிருஞ்சாதத்தையும், ஊறுகாயை யும் பார்த்தால் எனக்கும் கூட தான் வாந்தி வருகிறது, எப்படித்தான் இதையே தினமும் தின்னு..சூடு சுருணை என்று எதுவுமே இல்லாமல் இருக்கியோ."ன்னு சிரிக்காமல் சொல்லிவிடுவது உண்டு. அப்படி சொல்லாமல் அமைதியாக அவர்களை பொருட்படுத்தாமல் சாப்பிடும் நம்மவர்களும் உண்டு. அல்லது மற்றவர்கள் எதிரில் இப்படி சொல்லும் போது உடம்பு கூசி, நா பேச எழாது அசிங்கப்படுபவர்களும் உண்டு. இப்படி இருக்க விரும்புவதில்லை..

கூழோ..கஞ்சியோ.. இல்லை நிஜமாகவே அது கருமமோ... ஒருவர் உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது எதற்கு அப்படி சொல்லவேண்டும். ஒன்று சாப்பிட்டு முடித்தப்பிறகு அதன் நல்லது /கெட்டதை எடுத்து சொல்லி சொல்லலாம், இல்லை சாப்பிடுவதற்கு முன் சொல்லலாம். அதை செய்ய மாட்டார்கள். .ஏனென்றால் அவர்கள் அறிவுஜீவிகள், உயர் சாதியில் பிறந்த வென்றுகள். முட்டை கலந்த கேக், ஐஸ்கீரிம் சாப்பிடுவார்கள், தனியே அசைவ உணவகம் சென்று ஒரு கைப்பார்ப்பவர்களும் உண்டு, வீட்டிலேயே தனியே பாத்திரம் வைத்து சமைத்து சாப்பிடும் வேஷதாரிகளையும் நேரில் பார்த்து இருக்கிறேன்.

உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, கட்டியிருக்கும் வீடு, படுத்துறங்கும் பாய் முதற்கொண்டு ஒரு கீழ்சாதிக்காரன் செய்தது என்று அறியாதவர்களா? கீழ்சாதிக்காரன் உழைப்பில் , வியர்வையில் தானே அன்றாடம் நீங்கள் சுவாசித்து உயிர்வாழ்கிறீர்கள்? பிறகென்ன.. உங்களைவிடவும் கீழ்சாதிக்காரனுக்கு அறிவு உண்டு, திறமை உண்டு, பண்பு உண்டு, மனிதநேயம் நிறையவே உண்டு. அதை புரிந்து, அவர்களுடன் சேர்ந்து நடந்து பழகுங்கள், நடக்க பிடிக்கவில்லை என்றால், ஓரமாக நின்று ஒதுங்கி நின்று பழகுங்கள்.. இல்லையேல் இடித்து த்தள்ளிக்கொண்ட செல்ல எங்களுக்கும் உங்களை படைத்த அதே ஆண்டவன் நல்ல அறிவையும், ஆரோக்கியத்தையும், உடன் உங்களைவிடவும் நல்ல குணத்தையும் கொடுத்து இருக்கிறார்.

அணில் குட்டி அனிதா :- அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! ரம்பம்பம்ம்ம்ம்..ஆரம்பம்ம்ம்ம்... பம்பம்பம் பேரின்பம்.. 6 , 7 மாசமாச்சி.. அம்மணி நீங்க இப்படி எழுதி... ஆனா..லும் இது ஓவர் சூடு மச்சி...... !!

பீட்டர் தாத்ஸ் :- A community is democratic only when the humblest and weakest person can enjoy the highest civil, economic, and social rights that the biggest and most powerful possess.