முன் குறிப்பு : அவ்வ்வ்வ்!! என்ன கொடுமைங்க இது..!! நான் என்னவோ இதயத்துடிப்பின் வலியை எழுதினால் எல்லாரும் காதல் கவிதை ன்னு நினைச்சிக்கிறாங்க... ஏங்க இப்படி தப்பு தப்பா புரிஞ்சிக்கிறீங்க. .தலை வலித்தால் தலை பிச்சி எடுத்துடுலாம் போல இருக்கும் .அப்படித்தான்.. இதயமும்.. ஒரு உறுப்பாக கருதி எழுதப்பட்டது..

எழுத்தை வைத்து தவறாக நினைப்பது என்பது இதுதானோஓஓஓஓஓஓஓஒ !!




.. ..
.. ..
.. ..
.. ..
.. ..


கடிகாரமுள்ளாக
என் கையில்
நீ
கிடைத்தால்
எளிதாக
நிறுத்திவிடுவேன்.

உன்
ஒவ்வொரு
துடிப்பும்
எனக்கு
வலிக்கிறது
நீயாக
நிறுத்திவிடு

என்
உடலிலிருந்து
உன்னை
தனியே
பிய்த்து
எடுத்து

நான்
இல்லாமல்

நீ
துடித்து
நிற்பதை
பார்க்க
ஆசை...


அணில் குட்டி அனிதா :- ஹய்யோ யம்மாஆஆ....இது என்னா ரத்த காட்டேறியா இருக்குமோ... ..ஹார்ட்டை அப்படியே புடுங்கி வெளியில எடுத்து காட்டறாங்க.. அவ்வ்வ்வ்வ்! இனிமே நான் இங்க இருக்கமாட்டேன்.. எனக்கு பேய் பிசாசு ரத்த காட்டேறி கூட இருக்காப்பலேயே இருக்கே... யாராச்சும் வந்து என்னை காப்பாத்துங்க..

பீட்டர் தாத்ஸ் : “Life is one of those precious fleeting gifts, and everything can change in a heartbeat.”