என் பெயரை பயன்படுத்தி, ப்ளாக் நண்பர்களிடம் உதவி கேட்டு பணம் வாங்குவதாக எனக்கு ஈமெயில் வந்து இருந்தது, இது இரண்டாவது முறை. கொடுத்தவரும், என் பெயரை பயன்படுத்தியதால், யோசிக்காமல் கொடுத்தும் இருக்கிறார். இது எனக்கு தெரியாமல் நடந்து இருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னிக்கவும்.

இப்படி திரும்பவும் எதுவும் நடக்காமல் இருக்கவே இந்த வேண்டுகோள். என் பெயரை பயன்படுத்தி, யாராவது உதவி கேட்டு வந்தால், என்னிடம் கேட்டுவிட்டு பண உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ஈமெயில் முகவரி அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். தயவுசெய்து, என்னை ஒரு முறை கேட்டு விட்டு கொடுங்கள். ஏனென்றால் பண உதவி என்பது சரியான இடத்திற்கு, சரியான நேரத்தில், சரியான முறையில் பயன்படவேண்டும். யாரும் தவறாக என் பெயரை உபயோகிக்க கூடாது என்பதால் இந்த வேண்டுகோள். இரண்டு முறையும் தவறாக தன் சுயநலத்திற்காக கஷ்டம் என்று சொல்லி ஏமாற்றி இருக்கிறார்கள்.

தயவுசெய்து யாரும் என் பெயரை சொல்லி கேட்பதால் ஏமாந்து பண உதவி அல்லது பிற உதவிகளை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரின் புரிதலுக்கும் மிக்க நன்றி