என்னை சுற்றி உள்ள நண்பர்கள் அனைவரும் எனக்கு ஒரு வரப்பிரசாதம். விலகி விலகி தவிர்த்து விட்டு போகும் என் இயல்பை பொருட்படுத்தாமல் என் மேல் அன்பு செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி எத்தனை பேருக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். ஒரு நாள் இரு நாள் இல்லை வருடங்களாக, அவர்களின் அக்கறையும், அன்பும் என்னை வியப்படையத்தான் செய்கிறது, அப்படி இருப்பவர்களிடம் கூட இன்னமும் நான் தொடர்ந்து அவர்கள் சொல்லுவதை கேட்டு, நல்ல முறையில் நடந்துக்கொள்வதில்லை என்பது வருத்தமாக த்தான் இருக்கிறது. என்ன செய்வது, யாரிடமும் ஒட்டாத தள்ளி தள்ளி போகும் என் இயல்பை என்னால் பல காரணங்களுக்காக மாற்றிக்கொள்ள முடியவில்லை.இந்த நண்பர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை.

இப்படி வருடங்களாக என் மீது அன்பும், அக்கறையும் உள்ள ஒரு நண்பர் செயகுமார். அவரின் பெயரை குறிப்பிட்டு எழுதுவதை அவர் விரும்புவாரா என்று தெரியவில்லை, ஆனால் குறிப்பிட விரும்புகிறேன். என் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறார், பின்னூட்டம் இடுவதில்லை. ஏனென்று எனக்கு தெரியவில்லை, நானும் கேட்கவில்லை. எனக்கு தேவையான மாரல் சப்போர்ட்’ஐ எப்போதும் நான் கேட்காமலேயே ஈமெயிலில் அனுப்பிக்கொண்டே இருப்பவர், நான் அவற்றை படிக்கிறேனா இல்லையா என்று கூட அவருக்கு தெரியாது. இவை எல்லாம் பலனை எதிர்பார்க்காத அன்பு. [சிங்கு……இப்ப சொல்லிக்கிறேன்... நீங்க அனுப்புகிற எல்லா ஈமெயிலையும் படிச்சிடுவேன் :)]

தொடர்ந்து முதல் ஆளாக என் பதிவுகளை படிப்பது இவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் என் பாடல் பதிவுகளையும் பார்த்து பாடல்களையும் கேட்டு, எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார். "செய்கின்ற வேலையை சரியாக செய்ய வேண்டும், குரல் நன்றாக இருக்கிறது, நல்ல பாடல்களை நன்றாக பயின்று பாடலாமே ஏன் ஏனோ தானோ என்று பதிவிடுகிறீர்கள்? " என்று சொல்லி, அலைபாயுதே படத்தில் வந்த இந்த பாடலையும் (ஆடியோ), மற்றும் பாடல் வரிகளையும் ஈமெயிலில் அனுப்பி இருந்தார்.

ஆனால் அந்த ஈமெயில் கத்திமுனையில் மிரட்டி அனுப்பப்பட்டிருந்தது. ஒழுங்காக, நன்று பயின்று , தரமாக, சரியாக ரிக்கார்ட் செய்து பதிவிட விருப்பமிருந்தால் மட்டுமே இந்த பாடலை நீங்கள் பாடவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார், எனோ தானோ என்று பாடி நல்ல பாடலை கெடுத்து விடாதீர்கள் என்றும் சொல்லி இருந்தார்.

முதல் முறை கேட்டவுடனேயே அவருக்கு நான் அனுப்பிய பதில், ரொம்ப கஷ்டம் பாஸ், நிறைய பிராக்டீஸ் செய்யனும், ரெக்கார்ட் செய்து உங்களுக்கு அனுப்புகிறேன் நீங்கள் சரி என்றால் பதிவிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன். ரிக்கார்ட் செய்து அவருக்கு அனுப்பி, "அவர் தயவுசெய்து பதிவிடாதீர்கள்," என்று சொன்ன பிறகு வேண்டுமென்றே பதிவிடுகிறேன்.. சிங்கு எஸ்கியூஸூமீ…. இதை பதிவிட்டே ஆகனும்னு முடிவு செய்துட்டேன்.. :) (எப்பவும் போலவே சொன்ன பேச்சு கேட்கற பழக்கம் இல்லல..)

இதோ பாடல்…

குரல்: சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
படம்: அலைபாயுதே
இசை: ஏ. ஆர். ரஹ்மான்


evno3.mp3


அணில் குட்டி அனிதா : சிங்கண்ணே உங்களுக்கு இது அவசியமா??? அம்மணி பாட்டுப்பாடி கொல்றது தாங்காம எத்தனையோ பேரு எழுதறதை விட்டுட்டு ஓடிட்டாங்க.. ..ம்ம் எனக்கேன்ன வரவங்க எல்லாம் உங்களைத்தான் கும்ம போறாங்க... வாங்கிக்கோங்க..

பீட்டர் தாத்ஸ் :“Music speaks what cannot be expressed, soothes the mind and gives it rest, heals the heart and makes it whole, flows from heaven to the soul.