கவிதை எழுதனும்னு உட்கார்ந்தால் கவிதை எழுத வராது... ஆனாலும் கண்ணே !! உனக்காக உட்கார்ந்து எழுதுகிறேன், ஏனென்றால்

நீ பிறந்த இனிய நாளன்றோ..!! :)

அன்பான சிலரை
அடிக்கடி பார்ப்பதுண்டு
நீர்குமிழியாக
மறைந்துபோவார்கள் !!
உன்னிடம்
எனக்கு
கிடைக்கப்பெற்றதோ ..
வேறு....

என்னின்
கட்டுக்குள்
இல்லாத அதையும்
உன்னருகில் இருக்க
செய்வதும்
உன் இயல்பே...

நம் நட்பில்
என்னை
நம்புவதைவிட
உன்னை
நம்புகிறேன்...
நீ .........
உணர்ந்தவள் !
உணர்த்துபவள் !
புரிந்தவள் !
புரியவைப்பவள் !

நீ பிறந்தநாளாம் இன்று!!

உன்னை வாழ்த்தி
அகம் மகிழ
சந்தர்ப்பமாக்கி
கொள்கிறேன்

இந்த நன்னாள்
போன்று
ஒவ்வொரு நாளும்
உனக்கு
பொன்னாளாக
இருக்க...

வாழ்த்துக்கள்..... !!
என் நவீன் சார்ப்பாகவும் வாழ்த்துக்கள்...!

I Just showing you some

LOVE , HUG & KISSES !!







I LOVE YOU DEAR !!!