எழுதவே தோன்றாத

வெறுமை


எத்தனை மாறினாலும்

மாறாத மனித குணங்கள்


எத்தனை அழுதாலும்

நிற்காத கண்ணீர்


எத்தனை சிரித்தாலும்

போகாத துக்கம்


எத்தனை எழுதினாலும்

திருப்தியே அளிக்காத எழுத்து


எத்தனை பாசம் வைத்தாலும்

வேசமாக போகும் தருணங்கள்


எத்தனை நேசித்தாலும்

புரிதல் இல்லாத உள்ளங்கள்


எத்தனை சுற்றி வந்தாலும்

சேருமிடமோ அதே இடம்


எத்தனை வாழ்க்கை என்னுள்???!!!

ஒன்றுக்கே இத்தனையா??????!!


என்றோடு முடியுமோ...

இந்த வாழ்க்கை

இனியும் தொடருமோ

இந்த வெறுமை...