அணில் குட்டி அனிதா:- எங்க ஓனரை ஓவரா கலாய்ப்பதால் அவங்க இப்படி எல்லாம் ஐடியா செய்யறாங்க.. உஷார் உஷார்.... !!

சிபியின் தொல்லை தாங்கமுடியாமல் எப்படி பழிவாங்கலாம் என்று யோசித்தபோது சிக்கியது சிபியின் கன்னத்துக்குழி :-

1. இரவில் மின்சாரம் போய்விட்டால் , சிபியின் கன்னத்துக் குழியில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி வீட்டுக்கு வெளிச்சம் தரலாம்.
2. மெழுகுவத்தி ஸ்டேன்டாக பயன்படுத்தலாம்..
3. அப்படியே சுட சுட உருகும் மெழுகை அதில் சேமித்து வைத்து , திரும்பவும் திரிப்போட்டு எரியவிடலாம்.
4.. சிமெண்டு குழைக்க பாண்டாக பயன்படுத்தலாம்
5. பெயிண்ட்ங் செய்யும் போது கலர் குழைக்க பயன்படுத்தலாம்.
6. தாளிக்க கரண்டி இல்லைன்னா. .சுடசுட எண்ணெய் காயவைத்து குழியில் ஊற்றி அதை தாளிக்க பயன்படுத்தலாம்
7. யார் சாமிக்கு வேண்டிக்கிட்டாலும் சிபி யின் வாயில் அலகு குத்தறேன்னு வேண்டிக்கிட்டு.. குழிக்கு குழி ..கம்பியை விட்டு அலகு குத்தலாம். குழியின் காரணமாக நீளம் குறைவான கம்பியே போதும்
8. தீபத்திருநாளில் சிபியின் கண்ணத்தையும் தீபமாக்கிவிடலாம்...
9. குண்டூசி, ஸேஃப்ட்டி பின் போட்டு வைக்கலாம் எடுக்கும் போது எல்லாம் ஒரு குத்து குத்தலாம்.
10. தீபாவளிக்கு ராக்கெட் விட ஸ்டான்டாக பயன்படுத்தலாம்
11. புஸ்வானம் கூட வைத்து விடலாம்
12. பாம்பு மாத்திரை குழிக்குள் போட்டு ஆசைத்தீர கொளுத்தலாம்
13. சுடச்சுட அவித்த வேர்கடலையை கொட்டி அதிலிருந்து எடுத்து சாப்பிடலாம் நம்ம கை சுடாமல் இருக்கும்.
14. லவுட் ஸ்பீக்கரை இரண்டு கன்னத்துக்குழியிலும் பிக்ஸ் செய்துவிடலாம்
15. நெல்லு, அரிசி குத்த பயன்படுத்தலாம்.
16. அந்த குழியில் சின்னதா மஞ்சல் வட்டம் போட்டு வில் வித்தை அல்லது துப்பாக்கி சுடும் பொழுது மார்க்கிங்ஸ்டேண்டாக பயன் படுத்தலாம்.
17.. பூரி, வடை சுட்டு மீந்த கொதிக்கும் எண்ணெயை கொதிக்க கொதிக்க ஊற்றி வைக்கும் பாத்திரமாக பயன் படுத்தலாம்
18. மிளகாய் அதிகம் போட்டு ஊறுகாய் போட்டு வைக்கும் ஜாடியாக பயன் படுத்தலாம்