அணில் குட்டி அனிதா : ம்ம்..அடுத்து இலியாஸ், அம்மணி ஆடி போயிட்டாங்க இல்ல.. இவரு கிட்ட பேச ஆரம்பிச்சி ஆட்டங்கண்டு போயி சேட்'டவே ஒரு பிரேக் எடுத்தாங்க... .அம்மணிய ஆடவச்சவரு கதைய கேட்டு நீங்களும் ஆடி போவிங்களாம்...

* * * * * * * * * * * * * * * * ** * *
பப்ளிக் சேட் சென்ற போது இலியாஸ் தான் முதன் முதலில் பிங் செய்து என்னை அவரே ஆட் செய்தார். ரொம்பவும் மரியாதையுடன் பேசுவார். +1 படித்துக்கொண்டு இருந்த இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். இவரைப்பற்றி சொல்வது என்றால் Pious Musulman எனலாம், மாணவராக இருந்தாலும் கடவுள் பக்தி நிறைந்தவராகவும், பேச்சில் நிதானமும், அன்பும் நிறைந்தவராகவும் தெரிந்தார். அந்த வயதுக்கு தகுந்தார் போன்று இல்லாமல் மிகவும் முதிர்ச்சியுடைவர் போன்று பேசுவார். நிறைய அறிவுரை சொல்லுவார். அவர் எனக்கு சொல்லிய ஒரு அறிவுரையோடு ஆரம்பிப்போம்.

"தவறான எண்ணத்தோடு உன்னிடம் பேசவோ பழகவோ தொடவோ வரும் ஆண்கள் எல்லாம் மனதளவில் கோழைகள். அவர்களை நீ தைரியமாக எதிர் கொள்ளலாம், பயந்து பின் வாங்குவார்கள், அவர்களை கண்டு ஒரு போதும் நீ பயம் கொள்ளாதே. நீ ஒதுங்கி போகாதே அவர்களை உன்னை விட்டு ஒதுங்கி போகுமாறு உன் வார்த்தைகளை கடுமையாக்கிக்கொள். பயந்து , புறமுதுகிட்டு ஓடுவார்கள்"

இவரிடம் இன்னொரு விஷயம் எப்போதும் உருதுவில் வணக்கம் சொல்லி ஆரம்பிப்பார். அவரை பார்த்து நானும் சொல்லுவேன்.

முழுமையாக அவருடைய சேட் ஐ எழுத ஆரம்பித்தால் நீங்கள் எல்லாம் குறட்டைவிட ஆரம்பித்துவிடுவீர்கள். அதனால் தேவையானது மட்டும்...

"கவிதா நான் தோற்றத்தில் எப்படி இருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்"

"நீங்கள் ஒரு மாணவர், வயதுக்கேற்றார் போல் இருப்பீர்கள், இஸ்லாமியர் என்பதால் நல்ல கலராக இருக்க வாய்ப்புகள் அதிகம், வேறு என்ன ? "

"ஹா ஹா.. இல்லை நான் நீங்கள் நினைப்பது போல் இருக்கமாட்டேன்."

"ம்ம்.. இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி போட்டு இருப்பீர்களோ...? அப்புறம் தொழுகை செய்வதால் நெற்றியில் வடு இருக்குமோ..?!!"

"ஹா ஹா.. தொப்பியும் அணிவேன்... "

"எனக்கு தெரியவில்லை.. எனக்கு போட்டோ அனுப்புங்கள் பார்க்கிறேன்.."

"என்னுடைய போட்டோ எதுவும் இல்லை. நானே சொல்கிறேன்.. ஓரளவு உயரம், ரொம்ப குண்டு இல்லை, நீளமான தாடி வைத்திருப்பேன், பைஜாமா குர்தா மட்டுமே எப்போதுமே என் ஆடையாக இருக்கும்'.

"ஓ... தாடி எல்லாம் வைத்து இருப்பீர்களா? பள்ளியில் அனுமதி உண்டா..?"

"உண்டு "

"ஏன் நீங்க இந்த வயதில் இப்படி இருக்கனும்? இது தான் அங்கு பழக்கமா? "

"என் வாழ்க்கையின் லட்சியத்தை அடைய தோற்றம் முக்கியம் அல்ல. நான் தோற்றத்திற்கு முக்கியத்துவம் தரவிரும்பவில்லை..."

"அப்படி என்ன லட்சியம்? "

"என் மக்களை என் நாட்டை நான் மீட்கவேண்டும்.."

"??? 'புரியவில்லை........."

"காஷ்மீரத்து மக்களையும், காஷ்மீரத்தையும் மீட்டு எங்களுடன் சேர்க்க வேண்டும் அது தான் என் லட்சியம்...."

"என்ன்ன்ன்ன்னனனனனன? காஷ்மீரத்து மக்கள் உங்கள் மக்களா? காஷ்மீரம் உங்கள் நாடா? என்ன கதை இது? "

"ஆம் அதிர்ச்சி அடையாதீர்கள் கவிதா, காஷ்மீரத்தை மீட்காமல் நான் சாகமாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறேன்....அப்படியே நான் இறந்தாலும் அதுவும் கூட அதற்காகத்தான் இருக்கும்"

"காஷ்மீரமும் மக்களும் எங்களுக்கு சொந்தமானவர்கள், அதை ஒரு போதும் நாங்கள் விட்டுக்கொடுக்கவே மாட்டோம், என்ன தைரியம் இருந்தால் இப்படி என்னிடம் நீங்கள் பேசுவீர்கள்..."

"ஹா ஹா ஹா.. அநாவசியமாக கோபபடாதீர்கள் கவிதா, நீங்களும் உங்கள் அரசாங்கமும் காஷ்மீரத்து மக்களின் ஆசை என்னவென்று இதுவரையில் கேட்டு பார்த்ததுண்டா? கேட்டுபாருங்கள், ஒவ்வொரு காஷ்மீரியும், பாகிஸ்தானோடு தான் இருக்க விருப்பம் என்று சொல்லுவார்கள், அவர்களின் ஆசையை நிறைவேற்றி வையுங்கள்."

"இல்லவே இல்லை... இதற்கு சாத்தியமே இல்லை அவர்கள் என் மக்கள் இந்நாட்டு மக்கள் அவர்கள் ஒரு போதும் அப்படி சொல்லவே மாட்டார்கள், அதுவும் எந்த நேரமும் அவர்களை பிரச்சனைக்குள்ளாக்கும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள். அவர்கள் எங்களை விட்டு செல்ல ஒரு போதும் நினைக்கக்கூட மாட்டார்கள். நீங்களாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள் நீங்கள் அவர்களை எங்களடமிருந்து பிரிக்கவே முடியாது

"பிரித்துக்காட்டுவோம், அது தான் ஒவ்வொரு பாகிஸ்தானியுடைய விருப்பம்.

"My Dear Young Man ! இலியாஸ், கவனியுங்கள், நாங்கள் எல்லாம் காதில் பூ வைத்து க்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம் என்று நினைக்காதீர்கள் ! உங்களை போன்ற தீவிரம் எங்களிடம் இல்லை, அதற்காக நாங்கள் கோழைகள் இல்லை, விட்டுக்கொடுத்துவிடுவோம் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்... உங்களால் அப்படி எளிதில் எங்கள் நாட்டையும் மக்களையும் கைப்பற்றிவிட முடியாது, வீணாக உங்களின் நேரத்தை இதில் செலவிடாமல் படிக்கும் வழியை பாருங்கள்..

"இல்லை கவிதா என்னை சிறுபிள்ளையாக நினைத்து பேசாதீர்கள்.."

"நீங்கள் சிறுபிள்ளைதானே... +1 படிக்கும் நீங்கள் எனக்கு சிறுபிள்ளைதான்! "

"கவிதா இல்லை, உங்களிடம் உண்மையை தான் பேசுகிறேன், சும்மாவாக வாய்சண்டை இடவில்லை, அப்படி வாய்சண்டையிட்டு என் நேரத்தை வீணடிக்கும் ஆள் நான் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமல்லவா... ??

"ஆம் தெரியும்..!! "

"நான் போராளி அதற்கான அடிப்படை தகுதியை, பயற்சியை முறையாக எடுத்துக்கொள்ள இந்த ஆண்டு விடுமுறையில் முகாமிற்கு செல்கிறேன்.. 1.5 மாதங்கள் அங்கு தங்கி என்னை தயார்படுத்துவேன்... திரும்பி வந்தபிறகு என் லட்சியத்தை நிறைவேற்றுவேன்..."

"..என்ன???!! "

"ஆமாம், ஒரு வாரம் சென்று முதல் கட்ட பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.. திரும்பவும் செல்ல இருக்கிறேன்..."

"............................... என்ன பயிற்சி..??

"ஆயுத பயிற்சி.... "

"............என்ன ஆயுத பயிற்சியா? இலியாஸ் நிஜமாகவா சொல்கிறீர்கள்...? எங்கே செல்ல இருக்கிறீர்கள் ?"

"இடம் எல்லாம் தெரியாது, நாடு கடந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் காட்டு எல்லைக்குள் சென்றுவிட்டால் அவர்களே வந்து அழைத்து சென்றுவிடுவார்கள்.. "

".......................................... நீங்க என்ன சொல்றீங்க உண்மையா ? சினிமா கதையை போன்று இருக்கிறது..."

"... இப்போது நீங்கள் தான் சிறுபிள்ளையை போல் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் கவிதா.... "

".................................... இலியாஸ் கொஞ்சம் காத்திருங்கள்.."

"..சரி"

* * * * * * * * * * * ** * * **

(ஜே.கே, ஜனா, சுந்தர், கனேஷ், கார்த்திக்.. இங்க வாங்க.. இவன் சொல்றதை படிச்சி பாருங்களேன்...., எல்லோரும் சேட் ஹிஸ்டிரியை படிக்கிறார்கள்.....)

சுந்தர்.. : (படித்தவுடன் டென்ஷன் ஆகிவிட்டார்) கவிதா !! போதும் இவனோட நீங்க பேசவேண்டாம்... இவன் நமக்கு எதிராக செயல் படறவன் போல தெரியுது...உண்மையோ பொய்யோ.. தேவையில்லாத பேச்சு ...

ஜனா: இவன் கிட்ட ஏதாவது உங்க தகவல் சொல்லி வச்சி இருக்கீங்களா..?

கனேஷ் : ஜனா இவங்கள நம்பாதே.. ... டே ஒன் ல இருந்து சேட் ஹிஸ்டிரி எடுத்துப்பாரு...

கவிதா : ம்ம்.. என்னுடைய இமெயில் ஐடி தெரியும் அவ்வளவு தான்... ம்ம் வேற என்ன? கல்யாணம் ஆயிடுத்துன்னு தெரியும், நவீன் பத்தி தெரியும்..

ஜனா : சரி.. எங்க எதிர்ல அவனை ப்ளாக் பண்ணுங்க...

கவிதா : .. ஜனா.. ....ஒரு பை சொல்லிட்டு வரேன்..

ஜனா : ம்ம் ரொம்ப முக்கியம்... தேவையில்லை.... நானே சொல்லிக்கிறேன்... தள்ளுங்க..!! " எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது..உங்களிடம் பிறகு பேசுகிறேன்... பை.............. "

ஜே.கே.: ஜனா ஐபி எடு ட்ரேஸ் செய்து பாத்திடறேன்.. நிஜமா அவன் பாக்..தானான்னு.... ?

ஜனா : ம்ம்ம்... எடுக்கிறேன்டா.. கவிதா நீங்க போய் அந்த சிஸ்டம்ல உட்காருங்க... எங்களுக்கு வேலை இருக்கு இங்க.. கிளம்புங்க... !

மக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து என் மெயில் பாக்ஸை குடை குடை என்று குடைந்து என்ன செக் பண்ணனுமோ செக் செய்துவிட்டார்கள். பாக், தான் என்றும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

கவிதா: எஸ்கியூஸ்மீ கைஸ்.. ! அவர் எனக்கு எந்த பிரச்சனையும் தரமாட்டார். பயப்படவேண்டாம் !!

எல்லோரும் திரும்பி : உங்க திருவாய மூடறீங்களாஆஆஆஆ.... !!

கவிதா: :(((((((((((((((((((((( சரி... !! :((((((((((((((((

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பீட்டர் தாத்ஸ் :- “People who go to places of worship, people who go to libraries, people who are in chat rooms, are going to have 'Big Brother' listening in even though there's no evidence that they are involved in anything illegal whatsoever.