அணில் குட்டி அனிதா: கவிக்கு பல்பு வாங்கறது ஒன்னும் புதுசு இல்ல... ஆனா பப்புக்கிட்ட கூட பல்பு வாங்கினது தான்……. ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல… வாங்க.. வந்து கவிய நீங்களும் பாராட்டிட்டு போங்க..
* * * * * *
குழந்தைகள் பூங்காவில் கவியும் காயுவும் முதலில் சென்று முல்ஸ்'க்காக வெயிடிங். முல்ஸ் & பப்பு வந்தவுடன்... வண்டியை விட்டு பப்பு இறங்காமல் இருக்கும் போதே..

கவிதா :- ஹாய் பப்பு குட்டி....!! :)
பப்பு :- ........................ (கவியை பார்த்துக்கொண்டே... தலையில் அடித்து க்கொள்கிறாள்)..
கவிதா : ஞே.....!!
காயூ:- ஹா ஹா ஹா.. கவி.. பப்புவிற்கும் உங்களை பத்தி நல்லா தெரிஞ்சி போச்சி...........
முல்ஸ் :- ஹா ஹா ஹா இதுக்கு தான் வயசுக்கு ஏத்த மாதிரி இருக்கனும்னு சொல்றது.....!!
கவிதா : ஞே..!! (கண்ணாடியும் தொப்பியும் போடறது ஒரு பிரச்சனையா??? .....?? ஒன்னும் புரியலையே!!!! )
***************************


கவிதா :- பப்பு, வா...என் கைய பிடிச்சிக்கோ.................
முல்ஸ் :- பப்பு, என் கைய விட்டுடு... ஆன்ட்டி கைய மட்டும் பிடிச்சிக்கோ....
பப்பு : ( பப்பு, முல்ஸ் கையை விட்டு விட.....)
காயூ:- சரி வேணும்னா என் கைய பிடிச்சிக்கோ..
பப்பு :- ....................................
முல்ஸ் :- ஹி ஹி..அவ கண்ணாடி போட்டவங்க கைய மட்டும் தான் பிடிச்சி நடந்து வருவா...
கவிதா : ஓஒ..... ஏன்...?
காயூ :- ஹய்யோ....கவி......கண்ணு தெரியாதவங்க தானே.. கண்ணாடி போடுவாங்க...அவங்களுக்கு தானே ஹெல்ப் தேவை..!!
கவிதா : ஞே...!!
*******************************


கவிதா:
பப்பு, இங்க பாரு...இது பேரு Python!!
காயூ: ஏன் தமிழ்'ல சொல்லித்தரமாட்டீங்களா?
கவிதா : முல்ஸ்'ஐ பார்த்து பப்புக்கு தமிழ் தெரியுமா?
முல்ஸ் : தெரியாதுன்னு நான் சொல்லவே இல்லையே.. கவிதா :................................! சரி பப்பு இது பேரு மலைப்பாம்பு!! முல்ஸ் :ம்ம்....இனிமே இப்படியே சொல்லிட்டு வாங்க..
கவிதா: எப்படி எல்லா பாம்பையும் மலைப்பாம்பு' ன்னே சொல்லித்தர முடியும்?
முல்ஸ்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !!
************************************



கவிதா:-
ஹே காயூ, முல்லை... இங்க வாங்க! இங்க ஒரு முதலை வாய தொறந்துக்காட்டுது...
முல்ஸ் :- ஹா ஹா ஹா.. அசல் உங்களை மாதிரியே இல்ல கவி........
கவிதா : ஹை... என் பக்கமா திரும்பி பாக்குது... ஹே ஹே... என்னை பாத்ததும் பயந்து வாய முடீடுத்து..
காயூ :- அடக்கொடுமையே.. அங்க பாருங்க. பயத்துல அது யூ-டர்ன் போட்டு ரிடர்ன் போகுது :(

முல்ஸ் :- காயூ, எதுக்கும் நாம இவங்கள விட்டு கொஞ்சம் தள்ளியே இருப்போம்.
காயூ :- சேச்சே.. நாம அந்த முதலை மாதிரி கோழை எல்லாம் இல்லை.. நாம தைரியசாலிங்க :)
முல்ஸ் :- அதுக்கு சொல்லலை.. இவங்க கூட நம்மள பாத்து நாமளும் இவங்கள மாதிரி தான்னு தப்பா நினைச்சிட போறாங்க..
காயூ :- ஆஹா.. அதுவும் கரெக்ட்டு தான்.. கவி.. நீங்க முன்னாடி போங்க.. நாங்க ஒரு 10 அடி கேப் விட்டே வர்றோம்
கவிதா : ஞே!!
**********************************

காயூ
:- கவி கவி இங்க வாங்க இங்க ஒரு முதலை வாய தொறந்து இருக்கு... உங்களை பாத்தா மூடுதா பாக்கலாம்..
கவிதா.. : ஹோ....இதோ வரேன்...இதோ வரேன்...!!
காயூ..: ஒரு வேளை இது கல்'லா இருக்குமோ.? கவிய பாத்துக்கூட வாய மூடல....
முல்ஸ் :- ஹா ஹா.. ஹா... அதான் அதுக்கு பதிலா கவி வாய மூடிட்டாங்களே..!!
கவிதா :- ஞே!!!
**********************************

பப்பு
:- இங்க பூராவும் முதலையா இருக்கு....மான் பாக்கலாம் வாங்க...
கவிதா :- இரண்டு மான்கள், மான்களை பார்க்க செல்கின்றன....
முல்ஸ் & காயூ : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ......
***********************************


கவிதா :-
ஏன்ப்பா இந்த கூண்டுக்குள்ள பாம்பையே காணோம்..
காயூ : கவி, கண்ணாடிய கழட்டிட்டு பாருங்க…
முல்ஸ் :- ஹே அவங்க கண்ணாடிய கழட்டினா…அடுத்தது கூண்டு எங்கன்னு கேட்பாங்கப்பா…. :)
கவிதா : ஞே!!
************************************


காயூ :
(மயிலை போட்டொ எடுக்கும் போது கூண்டின் கம்பி வராமல் இருக்க ரொம்பவும் கஷ்டப்பட்டு போக்கஸ் செய்யறாங்க)
கவிதா :காயூ….யூ…. இங்க நான் இருக்கும் போது நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்படறீங்க..…???
முல்ஸ் :- கவிதாஆஆஆஆஆஆஆஆ!!!
காயூ : இதுக்கு மேல யாராவது இங்க பேசினா…. இங்க ஒரு கொலை விழும்..!!
**********************************


கவிதா :
இப்படி இரண்டு பேரும் மாறி மாறி போட்டோ எடுத்தா நான் யாருக்கு போஸ் கொடுக்கறது.. ம்ம்?!!
முல்ஸ் :- நீங்க வாய மூடினா போதும்.. ஒரு போட்டோ விடமா முதலை மாதிரி வாய பொளந்துக்கிட்டு இருக்கீங்க…
கவிதா : வாய மூடிட்டா அப்புறம் எப்படி கேள்வி கேக்கறது..?
முல்ஸ் : கவிதாஆஆஆஆஆஆ !!
காயூ: முல்ஸ்..அவங்க என்ன சொன்னாலும் அடங்க மாட்டாங்க. .நாம் ஆக்ஷன்லியே போட்டோ எடுத்து.. உலகம் பூரா லிங்க் அனுப்புவோம் அப்பத்தான் அடங்குவாங்க....
கவிதா : ஞே!!
**********************************


காயூ :
ஸ்ஸ்…என்னா Height Difference இரண்டு பேருக்கும் ..!!
கவிதா : அட ஆமா இல்ல..
காயூ : ஹல்லோ… இப்படியா சொன்னவுடனே அவங்களை திரும்பி பாக்கறது… ???
கவிதா : ஆமா..அப்படி பாத்தாத்தானே நீங்க அவங்களப்பத்தி தான் பேசனீங்கன்னு அவங்க புரிஞ்சிப்பாங்க....
முல்ஸ் : கவிதாஆஆஆஆஆ!!
காயூ: அய்யோ..விட்டா என்ன பேசினோம்னு போய் சொல்லிட்டு வருவீங்க…போல...???
கவிதா : ஹோ அது வேற இருக்கா.. சொல்லிட்டா போச்சி….:)
காயூ & முல்ஸ் :- கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !!
*****************************


கவிதா :
சரி எது எதுல விளையாடனும்னு நான் முடிவு செய்துட்டேன்..
முல்ஸ் : கவி அது எல்லாம்….குழந்தைகள் விளையாடறது……
கவிதா : ஓ. .நான் விளையாடினா….
முல்ஸ் : ம்ம்ம்…ஒத கிடைக்கும்…!!
கவிதா : என்ன அடிப்பாங்களா…? யாரு்…………….??
முல்ஸ் :. ம்ம்ம்…..இதுக்காக என்ன ஆள் எல்லாமா வைச்சு அடிப்பாங்க..… நாங்களே பின்னி பெடல் எடுப்போம்…
கவிதா : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !!
****************************************
கடைசியாக பப்பு…. (பூங்காவை விட்டு வெளியில் வந்த பிறகு)

பப்பு: இப்ப எங்கம்மா எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி தருவாங்க பாருங்க…
கவிதா : ஓ அம்மா சொன்னாங்களா..???... (கடை ஒன்று அருகில் வர)… இங்கயா வாங்குவாங்க….???
பப்பு : ஓ இந்த கடையில வாங்கித்தரேன்னு.....அம்மா உங்ககிட்ட சொன்னாங்களா????........
கவிதா : ………………………………???????..!!
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!..... புள்ள என்னம்மா போட்டுவாங்குது!! , நிஜமாவே நம்மல பத்தி தெரிஞ்சிப்போச்சோ..?!! சைலன்டா எஸ் ஆகனும் இல்லன்னா முல்லை என்னை கொன்னே போட்டுவாங்க….,,,,,,,,!! )
*****************************
கவிதாவின் கேள்வி நேரம் :

முல்ஸ்’க்கு :- நீங்க ஏன் கோவம் வந்தா கவிதாஆஆஆ? ன்னு கத்திட்டு அப்படியே நிறுத்திடறீங்க.. மேற்க்கொண்டு புரோசீட் செய்யவே மாட்டேன்ங்கறீங்க…? அப்படியே புரோசீட் செய்தா விளைவுகள் எப்படி இருக்கும்???

காயூ’க்கு… :- நீங்க வளைச்சி வளைச்சி என்னை போட்டோ எடுத்தீங்களே… உங்க ஆசைய நான் நிறைவேத்தி வச்சனே… உங்களை மட்டும் ஏன் போட்டோ எடுக்கவே விடலை ..??

முல்ஸ் & காயூ’ க்கு :-
1. ஏன் உங்க இரண்டு பேருக்கும் ஒரு பேஸிக் மேனர்ஸ் தெரியாதா? ஒரு போட்டோ எடுத்தா..எடுக்கறவங்க கிட்ட… ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், ஸ்மைல் ப்ளீஸ் எல்லாம் சொல்ல தெரியாதா?
2. இரண்டு பேரும் மாறி மாறி எடுத்தா எந்த கேமராவை நான் பார்க்கறதுன்னு எனக்கு ஏன் சொல்லவே மாட்டறீங்க.. அப்படி என்னை அலையவிடறதுல உங்களுக்கு என்ன அப்படி ஒரு ஆத்ம திருப்தி..?
3. இவ்வளவு பல்பு வாங்கியிருக்கேனே.. இதை பாராட்டி சீராட்டி எனக்கு ஏதாச்சும் பரிசு உண்டா..???