ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும்...

எப்படி இந்த டாக்டர் மட்டும் இங்கேயிருந்து அங்கேயும், அங்கேயிருந்து இங்கேயும் தாவறாரு? இப்போதய நியூஸ் பா.ம.க, அதிமுக வுடன் இந்த தேர்ந்தலில் இணைகிறது. திமுக வை விட்டு டாக்டர் விலகிவிட்டார்.

வைகோ எப்படி அம்மாவோடு எப்பவும் ஒற்றுமையாக இருக்காரு? அவங்க எப்படி நடத்தினாலும் அங்கேயே இருக்காறே எப்படி?

விஜயகாந்த் எப்படி தனியாவே இன்னும் போட்டி போடறாரு? முதல்ல விஜயகாந்த் எப்படி அரசியல் தலைவர் ஆனாரு?

அதிமுக ஏன் காங்கரஸ் கூட்டணிக்கு முயற்சி செய்தது?

சரத்குமார் ன்னு ஒருத்தர் அவரு என்ன செய்யறாரு? என்ன செய்ய போறாரு?

மூன்றாவது அணி எப்பவும் தேர்தலின் பொழுது கூடுது..அப்புறம் காணபோயிடுது? அதுவும் அதில் இந்த முறை அம்மா'வை காணோம்? ஏன்?

இன்னும் இப்படி நிறைய இருக்குங்க.. தலைய சுத்துது...

ஆனாலும் டாக்டரை நினைச்சா எப்பவுமே ரொம்ப பெருமையா இருக்கும்... உண்மையான சுத்தமான அரசியல்வாதி இவராக மட்டும் தான் இருக்கமுடியும்.

அணில் குட்டி அனிதா :- கவி.. நமக்கு எதுக்கு அரசியல்...?!! உங்க தலைய தொறந்து வச்சாலும் உங்களுக்கு புரிய போறது இல்ல.. எதுக்கு தேவை இல்லாமல் இம்புட்டு கேள்வி?

பீட்டர் தாத்ஸ் :- Politics is the art of postponing decisions until they are no longer relevant.”