தன் தீவரவாத வெறி ஆட்டத்தை பாக்' தன் மண்ணிலேயே நிரூபித்துவிட்டது. இனியும் எப்போதும் போல பாக்'குடன் உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்குமா? இந்தியாவிற்கு எதிரான திவரவாதத்தை தான் பார்த்துக்கொண்டு எல்லோரும் சும்மா இருந்தார்கள்.. இன்னமும் அப்படியே இருப்பார்களா?

பேச்சுவார்த்தைகளில் திருந்தும் மனமும் குணமுமா அவர்களிடம் இருக்கிறது.. ?!! பேச்சுவார்த்தைக்கு என்று எப்போதுமே ஒரு மரியாதை இருக்கிறது. பேசுபவர்களுக்கும் சரி..கேட்பவர்களுக்கும் சரி.. ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை என்ற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் புரியாதவர்கள் அவர்கள். இன்னும் இதையேதான் உலக நாடுகள் நம்பிக்கொண்டு இருக்குமா? இந்தியாவையும் சேர்த்து...?!!

எல்லா நாடுகளின் கவனத்தையும் அவர்களாகவே மிக நன்றாக எங்களின் விகார முகத்தை பாருங்கள் என்று எடுத்துக்காட்டி விட்டார்கள். இதைவிட நல்ல சந்தர்ப்பம் உலக நாடுகளுக்கும் கிடைக்குமா?

இன்னமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் அவர்களின் விகார முகம் கோழைத்தனமானது என்பதை புரியவைக்க இதை ஒரு நல்ல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அணில் குட்டி அனிதா:- அம்மனி எப்ப என்னவா இருப்பாங்கன்னு.. எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியல.. உங்களுக்கு ஏதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா...

பீட்டர் தாத்ஸ் :- We will continue to fight the scourge of terrorism against humanity and reject the culture of extremism and violence in any form or shape, from whatever source or place, regardless of justifications or motives, being fully aware of their dangers as a plague that threatens the peace and stability of the whole world.”