மெளனமே

உன்
மெளனம் தானே அழகு

உன் முடிவில்லாத
பேச்சு

புரிதல் இல்லாத
கோவங்கள்

எளிதாக எறியப்படும்
வார்த்தைகள்

தாமரை இலை நீராக
தள்ளிவிடுகிறதே!!

உன் மெளனங்கள்
உடையும் போது

நானும் சேர்ந்து
உடைந்து போகிறேன்..

உடைந்தாலும்
மகிழ்கிறேன்

உன் மெளனங்கள்
முடிக்காததை

உன் வார்த்தைகள்
முடிக்கின்றன.......


முடிக்காத உன்
மெளனமும் அழகு !

முடிகின்ற உன்
வார்த்தைகளும் அழகு !

மொத்தத்தில் நீ அழகு !


அணில் குட்டி அனிதா :- ஓ கவுஜ கவுஜ கவுஜ..... கவுஜ கவிதா கவுஜ எழுதிட்டாங்க...ஆமா எதுக்கு இப்ப கவுஜ...?!!

பீட்டர் தாத்ஸ் :- The miracle of friendship can be spoken without words... hearing unspoken needs, recognizing secret dreams, understanding the silent things that only true friend know.