இளைஞர்கள் அத்தனை பேரும் இந்த கை ஏட்டு பதிவினை கவனிக்க வேண்டுகிறேன். 1954 ல் என் அப்பா இளைஞராக இருக்கும் போது அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து மாதம் இரு முறை இந்த கையேட்டினை எழுதி வெளியிட்டு வந்துள்ளார். பொழுதை கழிக்க காலத்திற்கு ஏற்றார்போன்று எத்தனையோ வழிகள் இருந்தாலும், அப்பா தன் நேரத்தை எப்போதுமே நல்ல விதமாக பயன்படுத்தி வந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

எங்களின் வீட்டு தீ விபத்தில் எல்லாமே எரிந்துவிட, இந்த ஒரு புத்தகத்தை மட்டும் எப்படியோ என் அத்தை மகளிடம் இருப்பதாக கேள்விப்பட்டு வாங்கி பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

கெஜா - என்பதை அப்பா அப்போது எல்லாம் கெசா என்றே எழுதி வந்திருக்கிறார். இந்த புத்தகம் முழுதுமே அப்பாவின் கையெழுத்தில் வெளிவந்தது, அவரே வரைந்த படங்கள்... கதைகள்..எல்லாவற்றிலும் PK (P.Kesananan, இதை பிறகு P.Gajananan என்று மாற்றிவிட்டார்) குறிப்பாக எல்லிச்சத்திரம் என்ற ஒரு டாக்குமென்டரி எனக்கு ரொம்பவும் பிடித்தது.. அதை பதிவிட முயற்சி செய்கிறேன்.. இதோ என் அப்பாவின் கையேடு....















அணில் குட்டி அனிதா :- கவி ஏன் இப்படி இருக்காங்கன்னு தெள்ள தெளிவா தெரிஞ்சி போச்சி.....குடும்பமே ஒரு மாதிரி குடும்பந்தான் போல.......!!

பீட்டர் தாத்ஸ் :- OLD is GOLD.