திருமதி. சிபி & திரு. சிபி - க்கு 8 ஆம் ஆண்டு திருமணநாள் நல்வாழ்த்துகள்!!



கவிதை எழுதணும்னு நினைச்சி ஆரம்பிச்சா.. சிபி எப்பவும் என்னை கலாய்ச்சிகிட்டே இருக்கறதால எனக்கு கன்னா பின்னா'ன்னு கவிதை வருது... சரி திருமணநாள் அதுவுமாக அவரை எதுக்கு இன்னும் நோக அடிக்கனும்னு கவிதை எழுதவில்லை.. .அதை உங்க கிட்ட விட்டுடறேன்... வரவங்க எல்லாம் ஒரு கவிதை சொல்லிட்டு போவீங்களாம்..:)

இருந்தாலும் இரண்டு வரி....

கூல் = சிபி
சிபி = மிஸஸ் சிபி





பீட்டர் தாத்ஸ் :“Two souls with but a single thought, two hearts that beat as one.”

அணில் குட்டி அனிதா:- அவசர அவசரமா வாழ்த்து சொல்றேன்னு என் பாசமலர் அண்ணாச்சிக்கு என்னைய வாழ்த்து சொல்ல விடமா பண்ண கவி'ய நான் தனியா கவனிச்சிக்கிறேன்.. அவங்க கவிதை எழுதலன்னா என்னா உங்களுக்கு நான் எழுதறேன்..

சிபி' ஐ நினைச்சாவே வருது சிரிப்பு
அவரோட பதிவு எல்லாம் எப்பவுமே ஒரே களிப்பு

நூற்றுக்கணக்கா நீ வச்சியிருக்க பளாகர் கணக்கு
அதனால சுத்துது த(ள)ல எனக்கு

பதிவுலகில் நீ ஒரு கலாய்த்தல் டெரரரு
ஆனா வீட்டுக்குள்ள ....?????.. நீ எப்பவும் பதுங்குற அட்ட ஃபிகரு..

கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.. கேட்டுக்கோ....

கும்மியும் நீயும் போல
நீயும் வூட்டுக்காரம்மாவும் எப்பவும் இருக்கனும்னு
வாழ்த்திட்டு

எஸ்' ஆகிக்கிறேன்..!!