மனித வளத்தில் நூற்று க்கனக்கானவர்களுக்கு வேலை கொடுக்கும் போது உள்ள சந்தோஷமும் பெறும் வாழ்த்துக்களும், ஒரே ஒருவரை வேலை விட்டு எடுக்கும் போது எதிராக மாறிப்போகும்.

சிலர் நேருக்கு நேராக சாபம் கொடுப்பார்கள், சிலர் பின்னே சென்று சாபம் கொடுப்பார்கள், சிலர் குடும்ப பிரச்சனைகளை சொல்லி அழுவார்கள், கெஞ்சுவார்கள். சிலர் மிரட்டுவார்கள். இவர்களின் எல்லா வித மனநிலையையும் பொறுத்து போகவும் அதற்கு தகுந்தார் போன்றோ(அ)அதற்கு ஆட்கொள்ள படாமலோ முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். பொதுவாக அதிக அளவு சென்டிமென்ட்' எல்லாம் பார்க்க கூடிய சூழ்நிலைகள் வருவதில்லை. பெண்ணாக இருப்பதால், எதிராளி இதை அதிகம் எதிர்ப்பார்ப்பதும் உண்டு. அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களின் கோபமும், ஏமாற்றமும் அதிகமாவதை நான் உணர்ந்திருக்கிறேன். அலுவல் ரீதியாக உதவி செய்யமுடியாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு என்னால் முடிந்ததை அலுவலகத்துக்கு வெளியில் செய்ய முயற்சிப்பது உண்டு.

என்னுடைய அனுபவத்தில் எந்த வித உச்சக்கட்ட மனநிலைக்கும் தள்ளப்படாமல் வேலையை விட்டு சிலரை தூக்கியே ஆகவேண்டும் என்ற நிலைமை வந்து, அவர்களை வேலையை விட்டு தூக்கி இருக்கிறோம். என்னுடைய சிபாரிசின் காராணமாக வேலை இழந்தவர்களும் உண்டு. இதை நினைக்கவும் செய்யவும் எனக்கே மிகவும் கடினமாக /வேதனையாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் எந்த காழ்புணர்ச்சியும் இல்லாமல் கம்பெனி நலம் கருதி இப்படிப்பட்ட தீர்க்கமான முடிவுகள் எடுக்கவேண்டியுள்ளது. மிகவும் கண்டிப்புடன், இரக்கம் என்பதே இல்லாமல் பேசும்படியாக இருக்கும். ஆனால் அவர்களிடம் அப்படி பேசக்கூடிய சூழ்நிலையை அவர்கள் தான் ஏற்படுத்துகிறார்கள் என்பதை அவர்கள் எப்போதுமே உணர்ந்ததில்லை.

சில முக்கிய காரணங்களாக எடுத்துக்கொள்வது :-

1. Discipline
2. Violation of safety rules or office rules
3. Performance - General inefficiency (quality, quantity,
accuracy)
4. Carelessness / Negligence
5. Discourtesy towards fellow colleagues
6. Discourtesy towards client/guests
7. Frequent late attendance
8. Irresponsible
9. Insubordination / Disobedience
10. Irregular attendance
11. Quarrelsome
12. Smoking in restricted area
13. Clocking another staff attendance/
altering the attendance Register

இதில் எல்லா காரணங்களுக்குமே முதலில் மெமோ கொடுத்தோ, கவுன்சிலிங் செய்தோ அவர்களுக்கு திருந்திக்கொள்ளா ஒன்று அல்ல 3, 4 முறை வாய்ப்பு கொடுக்கத்தான் செய்கிறோம். ஆனால் தொடர்ந்து உதாசினப்படுத்தி வந்தால் அவர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டியுள்ளது. பெறும்பாலும் முதல் விஷயமாக Discipline காரணம் ஆகிறது. இதில் ஒன்றிலேயே 4- 13 ஆம் பாயிண்டு வரை அடங்கிவிடும். மிக மோசமாக நடந்து கொள்ளும் சிலரை பார்த்து இருக்கிறேன்.

சொந்த வேலைக்காக இணையத்தையும், கணினியையும் உபயோகிப்பது, அலுவலகத்தின் முக்கிய கோப்புகளை எடுத்து செல்வது, பணக்கையாடல், அலுவலக முக்கிய ரகசியங்களை வெளியில் சொல்லி காசாக்குவது அல்லது தன் சொந்த வேலைக்கு பயன்படுத்துவது என்று தவறுகளை சுட்டிக்காட்டி கொண்டே போகலாம்.

ஒரு பெண்ணாக இருப்பதால் மனிதவளத்தில் நிறைய ஆதாயம் இருக்கிறது, ஊழியர்கள் சட்டென்று கோபம் கொண்டு பேசமாட்டார்கள், கம்பெனியின் மீது கோபம் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அதை எங்களிடம் காட்ட மாட்டார்கள், பிரச்சனை தரவேண்டும் என்று நினைத்தாலும், எங்களுக்காக போனால் போகட்டும் என்று விட்டுவிடுவார்கள். பிரச்சனை கொடுக்க ஆரம்பித்தால் அதன் ஆரம்பம் மனிதவளமாகவும் அதில் இருக்கும் ஊழியரையும் தான் முதலில் பிரச்சனைக்கு உள்ளாக்கும், அதனால் வேண்டாம் என்று நினைப்பார்கள். இவை எல்லாவற்றிக்குமே "பெண்" என்ற ஒரே ஒரு காரணம் தான். அதே சமயம் சில டிஸ்அட்வான்டேஜ்' களும் உண்டு. பெண்தானே.. என்று மிரட்டி பார்க்கும் ஊழியர்களும் உண்டு. :). அவர்களையும் எப்படி சமாளிக்க வேண்டும் என்ற திறமையையும்,அறிவையும் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவம் மூலமே தெரிந்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இவை எல்லாம் கண்டிப்பாக ஏட்டு பாடம் இல்லை அனுபவப்பாடம் மட்டுமே கற்றுத்தரும்.

மனிதவளத்தில் முடிவுசெய்து வேலையை விட்டு எடுக்கும் ஆட்கள் மிக குறைவே, மற்ற பிரிவுகளில் இருந்தும், உயர் அதிகாரிகளிடம் இருந்து வரும் உத்தரவுகளின் பேரிலும் தான் மனிதவளத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடைசியாக எழுத்தின் மூலம் உத்தரவு மனிதவளத்தின் வழியாக எங்களின் கையெழுத்தை எடுத்து செல்வதால், ஊழியர்களின் கோபத்திற்கும், ஆதங்கத்திற்கும் இறுதியில் நாங்களே பொறுப்பாளிகளாக இருக்க வேண்டியுள்ளது.

இந்த பதிவு 1000 கணக்கில் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் கம்பெனிகள் சொல்லும் காரணங்களுக்காக எழுதியது இல்லை. பொதுவாக ஊழியர்கள் செய்யும் தவறுகளால் எப்படி அவர்கள் வேலையை இழக்கிறார்கள் என்பதை சொல்ல எழுதியது.

அணில் குட்டி அனிதா: சரி...ரைட்டு!! (டாக்ஸு சாக்லேட்டு அண்ணன் கோபி'க்கு) எனக்கு தூக்கம் வருது !! நான் கெளம்பறேன்.... நீங்களும் தூங்குங்க.. கீழ அம்மணி ரெடியா சோபா போட்டு வச்சி இருக்காங்க பாருங்க..போங்க.. நிம்மதியா தூங்கிட்டு கிளம்புங்க..

பீட்டர் தாத்ஸ் :- The human mind is our fundamental resource.