அணில் குட்டி அனிதா:- ரொம்ப நாளா ப்ளான் போட்டு மூன்று தேவிகளும் (மூதேவி'கள்) வெளியில கிளம்ப ரெடி ஆனாங்க.... உங்க எல்லாருக்கும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகனும், கவி இருக்காங்களே.. யாராவது ஒருத்தர் கிட்ட ஏதாவது லூஸூ மாதிரி பேசி பல்பு வாங்கலன்னா அவங்களுக்கு தூக்கம் வராது.. அதான் என் கிட்ட எப்பவும் வாங்கறாங்க ஆனாலும் பத்தல... அடிக்கடி.. நம்ம அக்கா'ங்க G3, முல்ஸ்' கிட்ட உங்க வீட்டு எங்க வீட்டு பல்பு இல்ல.. வெளியில சொல்ல முடியாத அளவு வாங்கி இருக்காங்க...ஆனாலும் அதை வெளியில காட்டிக்காம... அவங்களோட ஒரு மன தைரியத்தோட கிளம்பிட்டாங்க...

ஆனா நம்ம இரண்டு அக்காங்க பேருமே ஜெண்டில் உமன்'ங்க... அவங்களா வந்து கவிய ஓட்டறதே இல்ல.. இவிங்களா போயி போயி.. மாட்டிக்கறது. .சொந்த செலவில் சூனியம் வச்சிக்கறதுனுன் சொன்னா அது கவி'க்கு மட்டும் தான் பொறுந்தும்.

சரி இவிங்க டிரிப்' க்கு வருவோம்... பஸ்'ல கிளம்பலாம்னு முடிவு பண்ணி, மூதேவி;களும் பஸ் ஸ்டாண்ட்'ல மீட் பண்ணாங்க... G3 பஸ்'ஸை பார்த்தவுடன் உட்கார இடம் பிடிக்க ஓடிட்டாங்க.. நின்னுக்கிட்டு போன பாட்டு கேக்க முடியாதாம். அதனால் ஒரே ஓட்டமா ஓடி ஏறிட்டாங்க.. ஆனா கவி'க்கும் முல்லை'க்கும் இடம் கிடைக்கல... சரி.. நின்னுக்கிட்டு போலாம்னு ஏறிட்டாங்க.. G3 எங்கன்னு தேடிக்கிட்டே நின்னுக்கிட்டு இருக்கும் போது.. ஓவர் கூட்டம், மக்கள் எல்லாம் சேர்ந்து ரொம்ப நசுக்க ஆரம்பிச்சவுடனே... முல்ஸ்'சும் கவி'யும் பஸ்'ஸை விட்டு இறங்கிட்டாங்க...

கவி, முல்ஸ்'சிடம் G3 ஐ பஸ்ஸில் ல கண்டுப்பிடிச்சி நீங்க கீழ இறக்குங்க..நான் வேற பஸ்ல இடம் பிடிக்கிறேன்'ன்னு கிளம்பினாங்க...

அதுக்குள்ள இங்க..G3 உட்கார்ந்து இருந்த பஸ் டிக்கட் போட ஓரங்கட்ட... பொறுமை இழந்த பல மக்கள் அந்த பஸ்ஸில் இருந்து இறங்க ஆரம்பித்தார்கள்.

கவி வேக வேகமா ஓடி போயி பின் கதவு வழியாக கிளம்பிக்கிட்டு இருந்த ஒரு பஸ்'ல ஏறி மூணு பேரு இருக்கிற சீட்டை பிடிச்சி உட்கார்ந்து பெருமூச்சி விட்டுக்கிட்டே... முன்னாடி பார்த்தா யாருமே பஸ்; ல இல்ல.. ஆஹா என்ன இது பஸ்'ல யாருமே இல்லன்னு கண்டக்டர் ரை கேட்கலாம்னு நினைக்கும் போது, கண்டக்டர் வந்தாரு.. "ஏம்மா.. ஷெட்'குள்ள போற வண்டியா பாத்து ஏறி சீட் பிடிக்கற.. எறங்கி தொல.." என்று கத்த...

"ஹி..ஹி..தெரியாம ஏறிட்டேன்.." ன்னு சொல்லி கவி ...முல்ஸ்'ஐ யும், G3 யையும் தேட...

அவங்க இரண்டு பேரும் இவங்கள தேடினாங்களேன்னு சந்தேகமா இருந்தது.. கவி பஸ் ஸ்டாண்டு பூராவும் ஓடி ஓடி பார்க்க.. மக்களை காணோம்.. "ஆஹா...இரண்டு பேரும் நம்மை விட்டுட்டு போயிட்டாங்களா? " என்று யோசிக்கும் போதே.. டிக்கட்'க்கு போட்ட பஸ்'நிற்பதை பார்த்த கவி.. வேகமாக அதில் ஏறி இவிங்க இரண்டு பேரும் இருக்காங்களான்னு பாத்தாங்க.....

அட...இரண்டு பேரும் உள்ளத்தான் இருக்காங்க...

இவிங்கள பார்த்ததும்.. முல்ஸ்'சும், G3 யும் சிரிச்ச சிரிப்பு இருக்கே...அதை எல்லாம் சொல்ல முடியாது.. பாத்து ரசிக்கனும்.. :)

முல்ஸ் சிரிப்பை அடக்க முடியாமல்....."கவி எங்க கவி..அவ்வளவு அவசரமா எங்க போனீங்க.." :)

G3 சிரிக்காமல் ரொம்ப சீரியஸாக...."கவி பஸ்'ல இடம் பிடிக்க போனாங்கப்பா.."

கவி...".................."

முல்ஸ்.."கவி.. பஸ் ஸ்டாண்டை நல்லா சுத்தி பாத்தீங்களா?...

G3.."சே சே இல்லப்பா அவங்க இன்னும் அந்த ஷெட்'குள்ள போகவே இல்ல..."

கவி.."...................."

முல்ஸ்.."அந்த பஸ்'ல இடம் இல்லையா கவி? .."

G3.."அட என்ன முல்லை.. இடம் இல்லாமல் தானே ஓடியாந்தாங்க....:) "

கவி "...ஏன்ப்பா இதுல தானே இருக்கீங்க என்னை கூப்பிடலாம் இல்ல..."

முல்ஸ்.."நீங்க தான் பஸ் ஸ்டாண்டை சுத்தி பாக்க ரொம்ப ஆசை பட்டு ஓடி ஓடி வந்தீங்க.. சரி எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்னு விட்டுட்டோம்...:) "

"டிங்..டாங்க்.."

கவி... "என்னப்பா பஸ் ல காலிங் பெல் எல்லாம் வச்சி இருக்காங்க..?" எதுக்கு இப்ப காலிங் பெல் அடிக்கறாங்க.."

G3."கவி அந்த சவுண்டு..பஸ் ல இருந்து இல்ல.. உங்க மொபைல்'ல இருந்து வருது..

கவி..".ஓ...ஹி ஹி.............." வேக வேகமாக எடுத்து மெஸேஜை பார்க்க....

"குட் மார்னிங்...ஹாவ் ய நைஸ் டே..!! யாரோ மார்னிங் விஷ் அனுப்பி இருந்தார்கள்...

பட்டென்று தூக்கம் கலைந்து ஏழுந்து உட்கார்ந்த கவிதா'க்கு முகத்தில் ஈ 'ஆடவில்லை.. அப்ப இது எல்லாம் கனவா????? மக்கள் கனவுல வந்தாலும் விட மாட்டாங்க போல....அட கடவுளே... புள்ளைங்க கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்யனும்.. அப்பத்தான் இப்படி கனவு எல்லாம் நமக்கு வராது... :(

பீட்டர் தாத்ஸ் :- Life is full of beauty. Notice it. Notice the bumble bee, the small child, and the smiling faces. Smell the rain, and feel the wind. Live your life to the fullest potential, and fight for your dreams.”