தொலைக்காட்சிகளில் பார்க்கின்ற போதே கலைஞரின் தள்ளாமை தெரிகிறது.. இந்த வயதிலும் யாருக்கும் இல்லாத நல்ல நினைவாற்றல், எப்போதுமே குறையாத நகைச்சுவை உணர்வு, அவரின் கோபாலபுரம் வீட்டிற்கு மிக அருகில் (என்) அம்மாவின் வீடு. அதனால் அங்கு போகும் போது எல்லாம் அவரின் பேச்சு வருவது இயற்கை. சின்னவயதில் அவரை பார்க்க விடியலிலேயே காத்திருப்பேன். ஒரு விஐபி வீட்டிற்கு பக்கத்தில் இருப்பதால் ஏற்படும் குறைந்த பட்ச ஆர்வம் இது.

பொங்கல் விடுமுறை, பெரியம்மாவைப் பார்க்கச் சென்றோம், வாகனங்கள் முன்பு போல் எளிதாக வீட்டு வாசலில் விடமுடிவதில்லை. கருப்புப் பூனைப் படை கையில் ஏந்திய துப்பாக்கியுடன் எப்போதும் காவல். இவர்கள் இருந்தாலே ஐயா வீட்டிலிருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.

பெரியம்மாவைப் பார்த்துவிட்டு கிளம்பி வெளியில் வரும்போது ஐயா புறப்பட்டு வெளியில் வர தயாராகிவிட்டது தெரிந்தது. எங்களுக்கும் வாகனம் எடுத்து செல்ல அனுமதி இல்லை. நாங்களும் ஐயாவைப் பார்த்துவிட்டுப் போகலாமே என்று நின்றுருந்தோம்.

எப்படியும் அவர் எங்களை பார்ப்பார் என்று மனதுக்குள் என்னவோ ஒரு நம்பிக்கை. பெரியம்மாவிடம் அவரின் கண்பார்வையைப் பற்றி விசாரித்தேன்... நன்றாகதான் இருக்கிறார், நடப்பதற்கு தான் சிரமப்படுகிறார் என்றார்கள். இதை விசாரித்தது கூட அவர் எங்களை அங்கிருந்து பார்ப்பாரா என்று எண்ணத்தில் தான்...

நடுவே பெரியப்பா அவரின் நகைச்சுவை உணர்வு பற்றி சொல்லிக்கொண்டே வந்தார். என் அண்ணன் 80களில் அமெரிக்கா சென்று செட்டில் ஆனவர், வரும்போது எல்லாம் ஐயாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கச் செல்வார். அப்போது ஒரு முறை , "ஏம்பா உன் தலையும், என் தலையை போல் ஆகிவிட்டதே... ?!!.. என்றாராம். இப்படி இன்னும் நிறைய அவரை பற்றி பெரியப்பா சொல்லியவாறே இருக்க நாங்களும் கேட்டுக்கொண்டே அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

எனக்கு தெரிந்து அவரின் கார் ரோடில் தான் நிறகும் , வெளியில் வந்து தான் வண்டியில் ஏறுவார்கள், ஆனால் இப்போது எல்லாம் அவரால் நடக்க முடியாததால் இடது புறம் இருக்கும் கேட் வழியாக அவரின் கார் வீட்டு வாசலிலேயே நின்றிருந்தது. பாதுகாப்புக்காக வெளியில் நின்றிருந்த எல்லா கார்களும் இப்போது ஸ்டார்ட் செய்யப்பட்டன. இரண்டு இளம் வயது செகரட்டரிகள் முதலில் வெளியில் வந்தார்கள், (பெரியப்பா தான் அவர்கள் யார் என்பதை சொன்னார்) அவர்களை பார்த்து எல்லா போலிஸ்காரர்களும் சலியூட் அடித்தனர்.. இது என்ன வேடிக்கை ஏன் அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்று என் கணவரை நோண்டினேன்.. "அவர்கள் எல்லாம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், சும்மா இல்லை. உங்க ஆபிஸ் செகரட்டரின்னு நெனச்சியா? சும்மா வாயை மூடிக்கிட்டு பேசாமல் பாரு " என்றார்.

ம்ம்....ஐயா வந்துவிட்டார் ஆனால் நடந்து வரவில்லை..வீல் சேர் படி வரை வந்தது. மெதுவாக எழுந்து , பாதுகாவலர்களின் கைகளை பிடித்து மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கினார்.. முதல் படியில் கால் வைக்கும் போதே எங்களை பார்த்துவிட்டார் போல....

நாங்கள் எதிர்பார்க்காத தருவாயில் அங்கிருந்து எங்களை பார்த்து "கை அசைத்தார்..." ஹய்யோ!! நான் எதிர்பார்க்கவேயில்லை..!!! எங்களை கண்டிப்பாக பார்ப்பார் என்று யூகித்தேனே தவிர, கை அசைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை..... நாங்கள் மூவர் மட்டுமே. .எங்களுக்காக மட்டுமே "கை அசைத்தார் , " ஹய்யோ !! எனக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை .! :))) பெரியப்பாவும், என் கணவரும் உடனே கைக் கூப்பி வணக்கம் சொன்னார்கள்.. அவர்களை பார்த்தபிறகு தான் எனக்கு கையே மேலே வந்தது. .சந்தோஷத்தில் மரியாதையை மறந்து அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.. பிறகு நானும் வணக்கம் சொன்னேன்...

பொங்கல் அதுவுமாக ஐயாவின் ஆசிர்வாதம் கிடைத்த மகிழ்ச்சி... :)))

அணில் குட்டி அனிதா: ஆமா எதுக்கு இப்ப இந்த போஸ்டு,? தேவையா இது ? ஏன் கவி, சப்ப மேட்டர் க்கு எல்லாம் பெரிய பில்டப் கொடுத்து ஓவரா எழுதறீங்க.. என்னவோ நல்லா இல்ல சொல்லிட்டேன்...

பீட்டர் தாத்ஸ் : Sir, I wish to understand the true principles of the Government. I wish them carried out. I ask nothing more.