தமிழ்மணத்தில் 2008 பதிவுகள் போட்டி நடக்கிறது. .தெரிந்த விஷயம். அதிக ஓட்டுக்கள் பெறுபவர் வெற்றிபெறுவார்... தெரிந்த விஷயம்..

தன் எழுத்து ஆற்றலினால், நல்ல எண்ணங்களினால் , நோக்கினால் எழுதப்பட்ட எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. நேர்மையாக எல்லா பதிவுகளையும் முடிந்த வரை படித்து அல்லவா ஓட்டு இட்டு ஒருவரை வெற்றி பெற செய்யவேண்டும்?..

ஒருத்தர் எனக்கு பின்னூட்டம் போட்டு இருக்கிறார்..

அவர் யாருரென்று எனக்கு தெரியாது. இது வரை என் பதிவுகளின் நான் அவரை பார்த்தது இல்லை. பின்னூட்டம் போடகிறவர்களை எல்லாம் தெரிந்து வைத்து க்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. சரி. ஆனால் இது வரை என் பதிவு பக்கமே வராதவர் இப்போது வந்து இரண்டு வார்த்தை என் பதிவை பற்றி எழுதிவிட்டு, எனக்கு ஓட்டு போடுங்கள் என்று

ஒரு அரை பக்கத்திற்கு ஒவ்வொரு பிரிவின் கீழ் அவரே தேர்தெடுத்த பதிவுகளை தனித்தனியாக சுட்டி உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள் என்று கேட்டு இருக்கிறார்.

என்ன சுயநலம் ? எத்தனை சாமர்த்தியம்...?!! இப்படி கேவலமாக ஓட்டு கேட்க வேண்டுமா? சரி கேட்டாரே.. தனி மடல் அனுப்பி கேட்டு இருக்கலாம், கண்டிப்பாக கோபம் வந்து இருக்காது... சரி இமெயில் கிடைக்கவில்லை என்றால் பின்னூட்டத்தில் //Not for Publish// என்று எழுதி இருக்கலாம்.. எதுவும் இல்லாமல் என்னுடைய ப்ளாக்'ஐ அவரின் ஓட்டு வேட்டை நடத்தவும், விளம்பர இடமாகவும் பயன்படுத்திக்கொள்ள நல்ல யுத்தியை முயற்சி செய்து இருக்கிறார். !! சின்ன சின்ன விஷயத்தில் கூட நம்மால் நேர்மையாக நடந்து கொள்ள முடியவில்லை.?. இப்படி எல்லாம் ஓட்டு வாங்கி வெற்றி பெற வேண்டுமா?

இப்படி எத்தனை பேருக்கு அவர் செய்து இருக்கிறாரோ தெரியவில்லை...

தமிழ் மணத்தில் வெற்றி பெறுபவர் இப்படிப்பட்ட ஓட்டுகளினால் தான் என்றால்.. நினைத்து பார்க்கவே வேதனையாகத்தான் இருக்கிறது. கண்டிப்பாக நல்ல படைப்புகள் பின்னால் தள்ளப்படும். இப்படி ஓட்டு கேட்டு தன் பதிவுகளை முன் நிறுத்த தெரியாத பலர் காணாமல் போவார்கள். இப்படி கேவலமாக கொஞ்சமும் நாகரீகமும், நேர்மையும் இல்லாமல் ஓட்டுகள் வாங்கும் படைப்புகள் முதலில் நிற்கும்...

எனக்கு பிடிக்காத பட்சத்தில் கண்டிப்பாக அந்த பின்னூட்டத்தை ரிஜெக்ட் செய்ய எல்லா உரிமையும் எனக்கு இருக்கிறது இப்படி பதிவு போட வேண்டிய அவசியமில்லை தான். ஆனால் மேலே சொன்ன படி அவர் என் பதிவுக்காக 2 வரிகள் எழுதாமல், நேரடியாக ஓட்டு கேட்டு இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் நானும் படித்து பார்த்து பிடித்து இருந்தால் பதிவை ஓட்டில் சேர்த்து இருப்பேன், இல்லையேல் விட்டு இருப்பேன்..ஆனால், தன்னை மிகவும் சாமர்த்திய சாலியாக நினைத்து பார்வைகள் படிக்க வருபவர்கள் அத்தனை பேரும் அவரின் பின்னூட்டத்தை பார்த்து ஓட்டு போடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள என் பதிவினை பயன்படுத்திக்கொள்ள நினைத்து போடப்பட்ட பின்னூட்டம் என்பதால் இதை எழுத வேண்டியதாகிவிட்டது. என் பதிவை பற்றி ஒரு வரி எழுதியதால் மட்டுமே அவரின் பின்னூட்டத்தை நான் வெளியிடுவேன் என்று நினைத்திருந்தால்.. :)))) அப்படி ஒரு பின்னூட்டமே எனக்கு தேவையில்லை.!! :)))

அவரின் பெயரை குறிப்பிட எனக்கு விருப்பமில்லை.. காரணம் அதனால் திரும்பவும் அவருடைய பதிவுகள் என்னால் விளம்பரப்படுத்தபடும்.

இப்படி கேவலமாக ஓட்டு கேட்பதை விட தோற்று போகலாமே?!!

அணில் குட்டி அனிதா:- அம்மணிய அமைதியா இருக்க விடமாட்டாறாங்கப்பா நம்ம மக்கள்.. என்ன ரெம்ப நாளா பொங்கலையே ன்னு பார்த்தேன்.. பொங்கிட்டாங்க... ஸ்ஸ்..இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு...!! கவி ஈஸ் நார்மல் நவ்வூ!! :))

பீட்டர் தாத்ஸ்:He is very good. He doesn't have the best leaping ability but, you know, he has the smartness to know where to put his body, to position to get a rebound.