இந்த பதிவு ரொம்ப முக்கியமானது...அனைவருக்கும் நன்றி கூறும் விஷயம்.!! அதான் சஞ்ஜய்'யோட டயலாக்'ஐ நான் திருட வேண்டியதாக போச்சி..!! நன்றி சஞ்ஜய்!! தலைப்புக்கு தான்..!! :))

கேப்பங்கஞ்சி பதிவு ஒன்றில் முதியோர் இல்லம் ஒன்றிற்கு உதவி கேட்டுருந்தேன். ஒருவர் இரண்டு பேரை தவிர யாரும் கண்டுக்கொள்ளவில்லை.. அதனால், எப்படியும் உங்கள் அனைவரின் உயிரையும் வாங்காமல் விடக்கூடாது என்று முடிவு செய்து "அம்மா தாயே கவிதா'க்கு உதவி செய்யுங்கள்" என்று தனிப்பட்ட முறையில் நண்பர்கள் அனைவருக்கும் ஈமெயில் அனுப்பி இருந்தேன்.

அன்பு உள்ளங்கள் கொண்ட ப்ளாக் நண்பர்கள் உதவி செய்து இருக்கிறார்கள், எனக்கு தெரிந்தே 10-15 பேர் இருக்கும். வெளி நாடுகளிலிருந்து சிரமம் பாராமல் பணம் அனுப்பி உள்ளனர். இதில் குறிப்பிட்ட சொல்ல வேண்டிய ஒன்று உதவி செய்தவர்கள் யாருமே அவர்கள் பெயரை வெளியிடுவதை விரும்பவில்லை.

உதவி செய்த அனைவருக்கும் என் தாழ்மையான வணக்கத்தையும் மனம் உவந்த நன்றியை'யும் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். உதவி செய்த அன்பர்கள் மட்டும் இல்லை மற்றவர்களுக்கும் என்னால் ஏதாவது செய்யமுடியும் என்று நினைத்தால் கண்டிப்பாக செய்கிறேன்... ஏதாவது உதவி என்னால் செய்யமுடியும் என்று யாராவது நினைத்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

இங்கே... நயன் நாயகன் சிபிக்கு மட்டும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.. மேலே சொன்னதை வைத்து.."நீங்கள் தயவு செய்து எழுதுவதை நிறுத்திவிடுங்கள்" என்ற உதவியை மட்டும் கேட்கக்கூடாது. அதை தவிர்த்து என்ன உதவி கேட்டாலும் செய்து தருகிறேன்.. :))

மேலும் இந்த விஷயத்தை பெரியதாக்கி மதக்கலவரத்தை திரைமறைவில் தூண்ட நினைத்த ரவி'யை நான் யாழினி சார்பாக மிக மிக அன்பாக கண்டித்துக்கொள்ளுகிறேன். யாழினி மட்டும் நடுவே வரவில்லை என்றால் ரவி'யின் கதி அதோ'கதி ஆகியிருக்கும், தமிழ்மணத்தில் பெரிய கலவரமே வெடித்திருக்கும் என்பதையும் சபையில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு உள்ளேன்.

மீண்டும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி'கள்.... நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும்.. கல்வி, செல்வம் மற்றும் அனைத்து வளங்களும் பெற்று !!! "வாழ்க வளமுடன்" !!!

அணில் குட்டி அனிதா:- ஆனா சொல்லிட்டேன் கவி' ரேஞ்சுக்கு யாராலையும் பில்டப்' கொடுத்து எழுத முடியாது...... மக்கா நான் சொல்லறது சரிதானே.. என்னம்மா வார்த்தைய போட்டு விளையாடறாங்கப்பா.. மக்கா கவுந்துடாதீங்க.. உஷார்.. இப்படி பேசி பேசி வூட்டுக்கு ஏதாவது வசூல் பண்ணிடபோறாங்க.. ஜாக்கறதை இருக்கனும் நீங்க எல்லாம் ஓகே... !!

பீட்டர் தாத்ஸ்:- The smallest act of kindness is worth more than the grandest intention. ~Oscar Wilde