அணில் குட்டி அனிதா:- டிரியாங்க.. டிரியன் டிரியன் டிரியாங்...... ம்ம் பாடுங்க பாடுங்க... அம்மணி விட்டா நடு ரோட்டுல கூட வீடு கட்டுவாங்க... !! தெரியாதா...?! கவி என்னவோ அமெரிக்கா போயிட்டு வந்த ரேஞ்சுக்கு மும்பை போயிட்டு வந்ததை அளக்க போறாங்கன்னு தலைப்பை பாத்தா தெரியுது... ம்ம்ம்... லெட்'ஸ் ஸீ....

கவிதா :- மும்பை - இப்போது தான் முதல் முறையாக செல்கிறேன். ரொம்பவும் பிடித்து போனது. நிறைய நல்ல விஷ்யங்கள், கண்டிப்பாக நாம்.. (தமிழர்கள்) கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்களை கவனிக்க நேர்ந்தது.

1. நகரம் மிக சுத்தமாக இருந்தது. துப்பறவு தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை மிக சரியாக செய்து கொண்டிருப்பதை பார்க்கமுடிந்தது. சென்னையை போன்று சாக்கடை, குப்பை மேடுகள் என் கண்ணில் படவில்லை.

2. பிச்சைக்காரர்களை பார்க்கவில்லை.

3. மக்களிடம் ஒரு வேகம், சுறுசுறுப்பு தெரிந்தது. நம்மிடம் இல்லாத ஒரு வேகம் அவர்களிடம் இருப்பதாக தெரிந்தது.

4. அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமே பார்க்க முடிந்தது. கட்டிடங்கள் எல்லாமே குறைந்த பட்சம் 15-25 அடுக்குகள் வரை இருக்கின்றன்.. சின்ன அடுக்குமாடி கட்டிடங்கள் இருந்தாலும் உயர உயரமாக அன்னாந்து பார்த்து கழுத்து வலி வந்தது.

5. எல்லா வீடுகளிலும் நகராட்சி அனுப்பும் தண்ணீர் மட்டுமே, தனியாக தண்ணீருக்காக யாரும் போர் போட்டுக்கொள்ள அனுமதி இல்லை.

6. நகரத்தின் குறிப்பிட்ட பிஸியான இடங்களில் ஆட்டோ செல்ல அனுமதி இல்லை, இது போக்குவரத்து நெரிசலை குறைக்க போட்ட சட்டம். டாக்ஸி மட்டுமே ஓடுகிறது.

7. பெண்கள் மிகவும் அழகாக இருந்தனர். அதிகபட்சமாக எல்லோருக்கும் லேசாக தொப்பை இருந்தது..... இந்தியர்கள் தானா என்று நினைக்கும் அளவிற்கு அப்படி ஒரு வெள்ளை நிறமே வெள்ளை நிறமே.. !!

8. குடியிருப்புகள் இருக்கும் பகுதியிலேயே ஒவ்வொரு தெரு முனையிலும் பீர் கடை இருந்தது. அதுவும் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல், குடிகாரர்களின் சண்டை, கூச்சல், அட்டகாசம் என்று எதுவுமே இல்லாமல், எந்த நேரமும் கூட்டமும் இல்லாமல் இருந்தது. ஆச்சரியமாக இருந்தது. நம் தெரு முக்கில் மளிகை கடை பக்கத்தில் ஒரு பீர் கடை இருந்தால் எப்படியோ அப்ப்டி....

9. சினிமா அரங்குகளில் பால் அபிஷேகம் இல்லை, நாங்கள் சென்ற அன்று தான் கஜினி படம் அங்கு ரிலீஸ் ஆகியிருந்தது. போஸ்டர் கூட பெரிதாக இல்லை. அதிக பட்ச உயரம் 5 X 7 அல்லது 6 X 8 அளவில் தான் போஸ்டர்கள் இருந்தன. நகரத்தின் மைய பகுதிகளில் எங்கும் கட் அவுட்டுகளை அதிகமாக பார்க்கமுடியவில்லை.

10. கடற்கரை இல்லாத கடல், அலையே இல்லாத கடல், இது கடல் தானா என்று சந்தேகம் வர வைத்த கடல். ஜுஹூ பீச்சில் மட்டும் கொஞ்சம் கடற்கரை இருந்தது.

11. நம் உணவுகள் எல்லாம் கிடைக்காவிட்டாலும் தோசை, இட்லி கிடைத்தன...

12. பெரிய பெரிய ஷாப்பிங்மால்... கண்களுக்கு விருந்து.

13. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு தாஜ் ஹோட்டல் அமைதியாக இருந்தது. பாதுகாப்பு மிகவும் கடுமையாக இருந்தது. சிஸ்டி ஸ்டேஷனில் இறந்தவர்கள், அடிப்பட்டவர்கள் விட்டு சென்ற உடமைகளை நடு கூடத்தில் குவித்து வைத்து ஒரு துணி போட்டு மூடி வைத்துள்ளனர். பார்த்து போது மனதில் ஒரு வித அழுத்தமும் வேதனையும் வந்தது. அங்கேயும் பாதுகாப்பு அதிகமாக இருந்தது.

14. ரயில் வழி போக்குவரத்து மிக துரிதமானதாக இருந்தது. 3 நிமிடங்களுக்கு ஒரு ரயில் , கூட்டம் அலைமோதுகிறது, நிறைய தமிழர்களை பார்க்க நேர்ந்தது, என் திரு முகத்தை பார்த்தே நான் தமிழ் என்று தெரிந்தாலும், நானே புன்னகைத்தாலும் அவர்கள் திரும்பி புன்னகைக்கவில்லை :( கொஞ்சம் வருத்தப்பட்டேன். .ஏன் மக்கள் இப்படி அந்நியமாக இருக்கிறார்கள் ?!!

15. நல்ல க்ளைமேட் என் குழந்தை அங்கே மிகவும் அழகாக தெரிந்தான்...... :)))))))) அவனுடைய முகம் மிகவும் தெளிவாக இருந்தது...... அதற்கு அந்த க்ளைமேட் தான் காரணம் என்று புரிந்தது.

16. போர்ட் மிகவும் பிஸியாக இருந்தது. அங்கேயும் நிறைய பாதுகாப்பு.

17. அம்பானியின் 25 அடுக்குமாடி கட்டிடம் பார்த்தேன்...அதில் மூன்று அடுக்குகள் நீச்சல் குளம் மட்டுமே இருக்கிறது என்று அழைத்து சென்றவன் சொன்னான்... போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த அடுக்குமாடியில் உச்சியில் எலிபேட் இருக்கிறது.. அவர்கள் தரைவழி பயணம் செய்ய தேவையில்லை என்றும் சொன்னான்.

18. மும்பை லக்ஷ்மி கோயில், பிள்ளையார் கோயில் பார்த்தோம்.

19, பீச்சில் குல்பி ஐஸ்; க்கு ஆசைப்பட்டு வாங்கி சாப்பிட சகிக்காமல் கடலில் தூக்கிபோட்டோம்.

20. போக்குவரத்து காவலர்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு தான். அவர்கள் அதை ஏந்தி போக்குவரத்தை சரிப்பார்ப்பது கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருந்தது.

21. எல்லா லோகல் பத்திரிக்கைகளிலும் இன்னும் தீவிரவாத தாக்குதல் பற்றியும் மும்பைவாசிகளின் பாதுக்காப்பு பற்றியும் செய்திகள் பார்க்க முடிந்தது. தாக்குதலில் இறந்தபோனவர்கள் பற்றிய செய்திகளும் நிறைய இருந்தன். அதில் மூன்று நண்பர்கள் பற்றிய செய்தி ஒன்று படித்தேன். சிஎஸ்டி ஸ்டேஷனில் வெடி சத்தம் கேட்டு எல்லோரும் கீழே படுத்துவிட்டு இருக்கின்றனர், யார் சத்தம் போடுகிறார்களோ, எழுந்து ஓடுகிறார்களோ, அசைகிறார்களோ அவர்கள் சுடப்பட்டார்கள், அதுவும் பலத்த சிரிப்போடு அவன் சுட்டு இருக்கிறான். இந்த நண்பர்கள் மூவரும் கீழே படுத்துவிட்டனர். எல்லாம் முடிந்து அமைதியாக ஆனவுடன் ஒரு நண்பர் மட்டும் போய்விட்டானா என்று தலையை சற்றே தூக்கி இருக்கிறார்.. சரியா நெற்றிபோட்டில் சுட்டு சாகடத்துவிட்டான் அந்த தீவிரவாதி. தப்பித்தபிறகு கடைசி நேரத்தில் உயிரிழந்த பரிதாபம் இது.

22. அடுத்த லோகல் பத்திரிக்கை ஹாட் நியூஸ் நம்ம அசின்.. அமிர் அசின், சல்மான்கான் அசின், அசின் நட்பால் சல்மான்கான் காதல் முறிவு, காதலி அவரின் பிறந்தநாளில் மிஸ்ஸிங்... அசின் மும்பையில் ஃப்ளாட் வாங்கிவிட்டார். அவர் சிரிக்கிறார், அழுகிறார், நடக்கிறார் என்று ஒரே அசின் செய்திகள்..

23. கேட் வே ஃஆப் இந்தியா விற்குள் நுழைய பாதுகாப்பு கருதி அனுமதி இல்லை.

24. சைக்கிள்கள், இரண்டு சக்கர வாகனங்கள் நிறைய பார்க்கமுடியவில்லை. ரயில் பயணம் எளிது என்பது இதற்கான சாத்தியகூறுகள்.

25, ஹை வேஸ் ரொம்ப பிஸியாக இருந்தன. கார்கள் உஸ் உஸ் என்று படு வேகமாக கடந்து சென்றன. அதிகமாக கார்களை பார்க்க நேர்ந்தது.

26. சாதாரண குடியிருப்பு சாலைகள் நல்ல அகலமாக இருந்தன. அதுவும் நவி மும்பை நல்ல பிளான் செய்து உருவாக்கப்பட்டுள்ளது.

27. பங்கு சந்தை கட்டிடத்தை பார்த்தோம். டிவி யில் செய்திகளில் பங்கு சந்தை பற்றி சொல்லும் போது ஒரு கட்டிடத்தை காட்டுவார்களே அதே தான்.

28.வியாபாரம் அதிகமாக நடக்கும் இடமாக தெரிந்தது. அதனால் வசதியானவர்கள் அதிகமாக இருந்தனர். இதற்கு வியாபாரம் முக்கிய காரணமாக இருக்கவேண்டும்.

29. லாஸ்ட் பட் லீஸ்ட் எலிபேன்ட்டா கேவ், கடலிலிருந்து 3 கிமி படகில் உள்ளே சென்றால் இருக்கும் தீவு இது. பார்க்கவேண்டிய இடம். மகாபலிபுரம் பார்த்தவர்களுக்கு இந்த சிற்பர்கள் ஒன்றும் பெரிதல்ல என்றாலும் பார்க்கலாம். குகைகள் சில இருந்தன. மலை உச்சியில் நம் இரண்டு பீரங்கிகள் இருந்தன. அவ்வளவு பெரிய பீரங்கிகளை அதுவும் அது செய்ற்படும் இடத்திலிருந்து நான் பார்த்தது இல்லை. பூமிக்கு அடியில் அதற்கு தேவையான கட்டிடிங்கள், சின்ன சின்ன அறைகள், கும்மிருட்டாங்க இருந்ததால் பார்க்க முடியவில்லை.

மும்பை சுற்றிப்பார்க்க நிறைய இடம் இல்லை... எலிபேன்ட்டா கேவ், தாஜ் ஹோட்டல், கேட் வே ஆப் இந்தியா, மியூசியம், பீச் (மதில் சுவர் கட்டிய) பார்க்க இருக்கின்றன.. .பாதுகாப்பு மட்டும் இருந்தால் கண்டிப்பாக இந்தியாவில் செட்டில் ஆக கூடிய நல்ல அழகான சுறுசுறுப்பான நகரம்.

பீட்டர் தாத்ஸ் :- “There is no one who became rich because he broke a holiday, no one became fat because he broke a fast.