திருமதி குஷ்பூ சுந்தர் சி அவர்களுக்கு....

நாங்கள் எல்லாம் என்ன பாவம் செய்தோம்? குஷ்பூ அம்மா..!! தாயே..!! எவ்வளவு தான் நாங்கள் பொறுப்போம்..?!! சரி..சரி.....நான் ஒத்துக்கறேன்..எங்க புள்ளைங்க உங்க தீவிர ரசிகர்களாக மாறி ஒரு காலத்தில் உங்களுக்காக ஒரு கோவில் கட்டினாங்க....அதை நீங்க இன்னமும் போய் பார்த்ததில்லை என்பது நீங்கள் அளித்த பேட்டி மூலம் நாங்கள் அறிவோம். உங்க ரசிகர்கள் முட்டாள்கள் தான்.. ஆனா தொடர்ந்து நாங்க எல்லாருமே முட்டாள்களாகவே இருக்கனும்னு நீங்க முடிவு செய்யலாமா?

எந்த பெண்ணிடம் இல்லாத ஒன்று
அது ஏதோ...
அது ஏதோ
உன்னிடம் இருக்கிறது...
அதை அறியாமல் விடமாட்டேன்..

அப்படின்னு உங்களுக்கு பாட்டு எல்லாம் எழுதினாங்க..ஆனா..நீங்க என்ன அறிந்து கொள்வது ..என்று எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிளாமராக நடித்துவிட்டீர்கள்... இன்னுமா? உங்களுக்கு என்ன இன்னமும் வருஷம் 16 என்ற படத்தில் வந்தது போலவே நினைச்சுக்கறீங்களா? தயவு செய்து உங்களை நீங்கள் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.. வர வர உங்களின் உடை அலங்காரம், தலை அலங்காரம் முக அலங்காரம், முதுகு அலங்காரம்னு பார்க்க முடியலைங்க.. இப்போது எல்லாம் வீட்டு வரவேற்பறை தொலைகாட்சி நிகழ்ச்சிகள் வருகின்றன். குடும்பத்தோடு பார்க்கிறோம். எவ்வளவு தான் நாங்களும் பொறுத்து பொறுத்து பார்க்கறது... ?!

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில வருகிறீர்கள்.. நீங்க திரும்பி நின்றாலே பக்குன்னு நெஞ்சை அடைக்குது...!! ஏன்னா பின்னாடி சுத்தமா துணியே இல்லை.. சரி தையல்காரன் மறந்துவிட்டானா? என்று பார்த்தால் எல்லா நிகழ்ச்சிகளிலும் நீங்கள் திரும்பாமல் இருக்க வேண்டுமே என்று ஆண்டவனை மனம் உறுக வேண்டிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒரு நல்ல நிகழ்ச்சி சரி குழந்தைகளோடு உட்கார்ந்து பார்க்காலம் என்றால் உங்கள் ஆடை குறைப்பு அருவருப்பை மட்டும் இல்லை வயிற்றை பிசைகிறது...

நீங்கள் 80 கிலோ வெயிட் இருந்த போது ஆடினீங்க தெரியுமா? "ஒத்த ரூபா தாரேன்.." ன்னு என்று ஒரு பாட்டு, அது சூப்பர் சூப்பர் ஹிட் ஆச்சி... அப்ப கூட நாங்க எல்லாம் உங்க நடனத்தை ரசித்தோம்.. நிஜமாக குண்டாக இருந்தாலும் நல்லாத்தான் இருந்தீங்க.. ஆனா வர வர நீங்க போடற் ஆட்டம் எங்களால தாங்க முடியல.. தயவு செய்து புரிஞ்சிக்கோங்க...

ஏங்க நாங்க என்னங்க பாவம் செய்தோம்... பொங்கல் அதுவுமா..வீட்டில் நிம்மதியாக டிவி பார்த்துகொண்டு இருக்கலாம் என்று நினைத்து உட்கார்ந்தால்... அட கடவுளே.. வில்லு படத்தில் "ராமா ராமா..ராமன் கிட்ட வில்ல கேட்டான்..பாட்டுல.. ஏங்க.. ஏங்க....?? இப்படி.. என்னால் இதுக்கு மேல பேச முடியலைங்க..........ப்ளீஸ் எங்களை விட்டுடுங்க.. அழுகை அழுகையா வருது... தயவுசெய்து எங்களை எல்லாம் விட்டுடுங்க.. உங்களுக்கு குடும்ப செலவுக்கு பணம் வேணும்னா.... அம்மா தாயே ன்னு ஒரு போஸ்டு போட்டு நான் மாசம் மாசம் பணம் உங்க வீட்டுக்கு அனுப்பிடறேன்.. ஆனா எங்களை இப்படி ஆட்டம் போட்டு சாக அடிச்சிடாதீங்க....

நீங்கள் போடும் ஆட்டத்தை தீவிரமாக எதிர்ப்பது மட்டும் இல்லாமல் சினிமாவில் ஆட்டம் மட்டுமாவது இனி போடுவதில்லை என்று எங்களுக்காக உங்கள் குழந்தைகளின் மீது சத்தியம் செய்து கொடுங்கள் என்று கேட்டு கொள்ளவது மட்டும் இல்லாமல்-

உங்க ஆட்டத்தை வில்லு பட பாட்டில் பார்த்து கை கால் விழுந்து, வாய் ஒரு பக்கமாக இழுத்து கொண்டு இன்றைக்கோ நாளைக்கோ என்று இழுத்துக்கொண்டு இருக்கும் என் அணில் குட்டியின் சார்பாக .......

எங்களின் நலம் காக்க வேண்டி

கவிதா... :(((

அணில் குட்டி அனிதா :- .....பவி... குஷ்ழ்....வேண்ட்,,,,,ஆம்.... நா...டி.வி...பாக்கல... சுஷ்..வேனா...மாஅ.ஆ... குழ்.....ஜாக்கெ... போ..ட... சொல் லு... குஷ்...வேன்......டா...சொல்லி...

பீட்டர் தாத்ஸ் :- “Is she fat? Her favorite food is Money”